2010

2010

விடத்தல் தீவு முஸ்லிம்கள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பகுதியில் குடியேறி வருகின்றனர்.

Rishad_Bathiyutheen20 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னார் விடத்தல் தீவு  முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். யுத்தம் முடிவடைந்ததையடுத்து சுமார் நூறு வரையிலான குடும்பங்கள் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இம்மக்கள் தங்கள் காணிகளையும் பள்ளிவாசல்களையும் துப்பரவாக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்வரும் 25ம் திகதி புனரமைக்க்கபட்டுள்ள ஜும்மாப் பள்ளிவாசலும் தொழுகையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வன்னி நடாளுமன்ற உறுப்பினர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிச்சாட் பிதியுதீன் உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொள்வா என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்காக குழுக்கள் நியமனம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்காக ஐந்து உறுப்பினர்கள் அடங்கியதாக ஆறு குழுக்கள் நியமிக்கபட்டுள்ளன. திட்டமிடல், வீடமைப்பு, மின்பிடி, உள்@ராட்சி, நீர் வழங்கல், மின்சாரம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி, விவசாயம் முதலான துறைகளை உள்ளடக்கியதாக இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதே வேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பெரும் போகத்தின் போது 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையும் 9620 ஏக்கர் நிலப்பரப்பில் உபஉணவுப் பயிர் செய்கையும் மேற்கொள்ளப்படவிருப்பதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தேசிய வெற்றி விழாவை முன்னிட்டு இலங்கையில் நாளை அரசாங்க விடுமுறை!

kahiliya.jpgஇலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இராணுவ வெற்றியைக் கொண்டாடும் முகமாக நாளை பொதுவிடுமுறைத் தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது
 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதைக்  கொண்டாடுவதற்காக நாளைய தினம் விசேட ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்புக்கு வந்து உடனடியாகவே முல்லைத்தீவு சென்றார் பாஸ்கோ

lio.jpgஇலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ நேற்று முல்லைத்தீவுப் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.முல்லைத்தீவுக்கான பாஸ்கோவின் விஜயமானது “பரிசீலனைக்கான பயணம்” என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நேரில் கண்டறிவதற்காகவே பாஸ்கோ வருகை தந்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவித்தன.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரச அதிகாரிகள், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் உட்பட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், ஊடகத்துறையினர், சிவில் சமூக குழுக்கள் ஆகியோரை லின் பாஸ்கோ சந்திக்கவுள்ளார்.

நேற்று புதன்கிழமை கொழும்புக்கு வருகை தந்தவுடன் முல்லைத்தீவுக்குப் பயணமாவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை பாஸ்கோ சந்தித்துள்ளார். இன்று வியாழக்கிழமை மாலை 6.30, 7.30 மணியளவில் ஐ.நா. தகவல் நிலையத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில் அவர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.

வடமாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலா 200 மில்.நிதி – மேம்பாட்டுத் திட்டத்திற்கு உலக வங்கி உதவும்

canrasri.jpgவட மாகாணத்தின் உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 200 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (NELSIP)  ஊடாக அரசாங்கம் இந்த நிதியை வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்கு உலக வங்கி கடன் உதவி வழங்கவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஆளுநர் தலைமையில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் தேசிய திட்ட இணைப்பாளராகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வியானி குணதிலக்கவும், வட மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பிரான்ஸிஸ் ஜோன்ஸன் உட்பட உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனர்.

2010 முதல் 2013 வரையான நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பிரான்ஸிஸ் ஜோன்ஸன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக வழங்கப்படும் உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் வகையிலேயே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நூறு வீத மக்களின் பூரண பங்களிப்புக்களின் மூலமே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவைப் படும் வசதிகள், நடவடிக்கை உடனடியாக செய்து கொடுக்கப்படும்.

ஆண்டிறுதி கணக்கறிக்கை, கணக்காய்வு மற்றும் மக்களின் பங்களிப்பு என்பவற்றைச் சரியான முறையில் காண்பிக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கே இந்த நிதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தைத் துரிதப் படுத்தும் வகையில் எதிர்வரும் 21ம் திகதி வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் வரோதய நகரிலுள்ள விவசாய திணைக்கள கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

பாலைவனமாதலையும் வரட்சியையும் தடுக்கும் தினம் இன்று

11111.jpgஇம்முறை மண்ணை வளப்படுத்தி, எல்லா இடங்களிலும் உயிர்களை வளப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளில் உலகெங்கும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பாலைவனமாதல் தொடர்பான உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தி நிலங்கள் தரமிழத்தல் மற்றும் வரட்சி காரணமாக உயிர்ப்பல்வகைமைக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இத்தினம் அடிப்படையாகக் கொண்டது.

ஏனெனில் வளமான மண் இருந்தால் மட்டுமே உயிர்கள் நிலைக்க முடியும். ஒவ்வொரு தனிநபரும் மண்ணை எங்ஙனம் பயன்படுத்துகிறார் என்பதிலேயே மண்ணின் ஆரோக்கியம் தங்கியிருக்கிறது.

நாம் உண்ணும் உணவின் அளவையும் தரத்தையும் கூட நாம் மண்ணில் மேற்கொள்ளும் செயற்பாடுகளே தீர்மானிக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே, சூழல்தொகுதி எமக்கு வழங்கும் சேவைகளும் அமைந்து விடுகின்றன.

பங்களாதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி மிக எளிதாக வென்றது.

cr.jpgஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்களாதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றது. முதலில் ஆடிய பங்களாதேசம் 34.5 ஓவர்களில் 167 ஓட்டங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 30.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றி கண்டது.

இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை தம்புல்லவில் இந்திய அணி பங்களாதேச அணியை எதிர்கொண்டது. நாணயசுழச்சியில் வென்ற பங்களாதேசம் முதலில் பெட்டிங்செய்தது. ஆரம்பஆட்டக்காரர்களாக தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸýம் களம் இறங்கினர். 3-வது ஓவரில் தமீம் ஆட்டம் இழந்தார். அவர் 12 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்து முகமது அஸ்ரப்உல் 20 ஓட்டங்கள் பெற்று பெவிலியன் திரும்பினார். அடுத்து இம்ருல்லுடன் ரஹீம் ஜோடி சேர்ந்தார். 16-வது ஓவரில் இம்ருல் விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் அணியில் அதிகபட்சமாக 37 ஓட்டங்கள் (35 பந்துகள்) எடுத்தார். 17-வது ஓவரில் வங்கதேசம் 100 ஓட்டங்களைக் கடந்தது. அப்போதிருந்த நிலையில் அந்த அணி 250 ஓட்டங்கள் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்வரிசை ஆட்டக்காரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்தனர். 155 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேசம் 167 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 34.5 ஓவரிலேயே அந்த அணி சுருண்டது. இந்திய தரப்பில் சேவாக் 2.5 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

168 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சேவாக் 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் கம்பீர் நிலைத்து நின்று விளையாடினார். 10-வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்தபோது மைதானத்தில் உள்ள விளக்குகளில் பிரச்சினை ஏற்பட்டதால் போதிய வெளிச்சம் இல்லை. எனவே ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது விராட் கோலி 11 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரோஹித் சர்மா முதல் பந்திலேயே ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து கம்பீருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி பொறுப்பாக விளையாடினார். 30.1 ஓவரில் இந்திய அணி 158 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. அப்போது கம்பீர் ஆட்டம் இழந்தார். அவர் 101 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து ரெய்னா களம் கண்டார். 30-வது ஓவரில் 3 மற்றும் 4 -வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டி கேப்டன் தோனிஇ வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை எடுத்தார். இதன் மூலம் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேசத்தை வென்றது.
38 ஓட்டங்கள் எடுத்த தோனி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கம்பீர் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி போனஸ் புள்ளிகளையும் சேர்ந்து மொத்தம் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

நெடுங்கேணி, நொச்சிமோட்டை பகுதிகளில் பிரதேச செயலகங்கள் – நாளை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு

வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி மற்றும் நொச்சிமோட்டை பகுதிகளில் 19 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகங்கள் நாளை 18ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜோன் செனவிரத்ன ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டு திறந்து வைக்கவுள்ளனர். நெடுங்கேணி பிரதேச செயலகம் 9 இலட்சம் ரூபா செலவிலும், நொச்சி மோட்டை ‘சேவா பியச’ நிலையம் 10 இலட்சம் ரூபா செலவிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை பொது நிர்வாக அமைச்சு வழங்கியுள்ளது. அத்துடன் வவுனியாவில் சமுர்த்தி சங்க காரியாலயமொன்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வெளிப்படைத் தன்மை அவசியம் சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது – யசூசி அகாசி

acasi.jpgஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டிருக்கும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் பரந்துபட்டதாகவும் இருக்க வேண்டுமென இலங்கைக்கான ஜப்பானின் சிறப்பு தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமாக 20 ஆவது தடவையாக இலங்கை வந்துள்ள யசூசி அகாசி நேற்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அமைச்சில் சந்தித்து பேசியதன் பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இது தொடர்பாக அகாசி மேலும் கருத்து வெளியிடுகையில்;

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் சந்தோஷமடைகிறோம். இது மிகவும் முக்கியமானதும் கடினமானதுமான இலக்காகும். எனினும் நாடு முழுவதும் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உறுதியான இலக்கை கொண்டிருக்க வேண்டும்.

நல்லிணக்க நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் சிலசமயங்களில் ஐ.நா.பங்களிப்புச் செய்யக்கூடும். இது பற்றி நானும் அமைச்சரும் கலந்து பேசினோம். இன நெருக்கடி, நல்லிணக்கம் பற்றி உலகளாவிய ரீதியில் பல அனுபவங்களும், வரலாறுகளும் இருக்கின்றன. நல்லியக்கம் பற்றிய நடவடிக்கைகளில் தென்னாபிரிக்கா, கிழக்கு தீமோர் மற்றும் பல ஆபிரிக்க நாடுகள் உதாரணங்களாக இருக்கின்றன. எனவே, இவ் விடயத்தில் இலங்கை ஏனைய நாடுகளின் இந்த அனுபவங்களில் இருந்தான பலனை பெற்று தமக்குரிய நோக்கத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இதில் ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளின் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

நல்லிணக்க விவகாரத்தில் இலங்கைக்கும் ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் இடையிலான சாத்தியமான ஒத்துழைப்புகள் பற்றி பேசினோம். எனினும் இது தொடர்பாக மேலதிக விபரங்களை இப்போதே கூற முடியாது. ஏனெனில் இந்த உறவு எதிர்காலத்தில் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டுமென்பது பற்றிச் சொல்ல முடியாது. அதை இலங்கை அரசாங்கம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், இவ் விடயத்தில் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டுமென ஏனைய அரசாங்கங்களும், அமைப்புகளும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவும் முடியாது. இலங்கை அதன் தன்மைக்கேற்றவாறு செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். இதேவேளை, இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஜப்பானின் நிலைப்பாடு என்னவென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அகாசி; உரிய நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையானதாகவும் பரந்துபட்டதாகவும் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென நாம் நினைக்கிறோம். எவ்வாறிருப்பினும் இலங்கை அரசாங்கம் அதன் முன்முயற்சியாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் சந்தோஷமடைகிறோம். அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றி நாம் உன்னிப்பாக அவதானிக்கிறோம்.

இந்த ஆணைக்குழுவின் மூலம் முன்னெடுக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி அமைச்சர் பீரிஸ் எனக்கு விளக்கமளித்தார். அது அவ்வாறு நடக்குமென நாம் நம்புகிறோம். அது மட்டுமல்லாது இந்த ஆணைக்குழுவானது விரிவான பரிமானமுள்ள நடவடிக்கை. இதை போர் குற்றச்சாட்டு பற்றிய விடயத்துடன் மட்டும் குறுக்கிவிட நாம் விரும்பவில்லை என்று கூறினார். 

பாம்பு கடிக்குள்ளாகி படைவீரர் உயிரிழப்பு!

091009.jpgபளைப் பகுதியில் பாதுகாப்புக் கடமையிலீபட்டு வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.  இவரது சடலம் நேற்றிரவு (June 15 2010) யாழ்ப்பாண மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு, மரண விசாரணையின் பின் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

பளை இராணுவ முகாமில் ஆறாவது படைப்பிரிவில் கடமையாற்றிய பதுளையைச் சேர்ந்த ரட்ணாயக்க முதியான்சிலாகே புஸ்பகுமார (வயது 35) என்ற இராணுவ வீரரே உயிரிழந்தவராவார்.  தற்போது மக்கள் மீள்குடியற்றப்பட்டு வரும் பளைப் பகுதியில் பல பொதுமக்களும் பாம்புக்கடிக்கு இலக்காகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இலங்கையில் வருடம் ஒன்றிற்கு 60 ஆயிரம் பேர் பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர் என்றும் அவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர் என்றும், வருடம் ஒன்றில் 100 பேர் வரையிலானோர் பாம்புக்கடியினால் உயிரிழக்கின்றனர் என்றும் பேராதெனிய மருத்துவபீடத்தின் பேராசியர் எஸ்.ஏ.எச். குலரத்ன தெரிவித்துள்ளார்.

வி~சப்பாம்புகள் கடிப்பதனால் எற்படும் மரணங்களைத் தவிர்க்கும் வகையில் தேசிய செயற்திட்டமொன்றைச் செயற்படுத்த சகாதார அமைச்சும், மட்டுப்படுத்தப்பட்ட சூழல் மன்றமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் நாடு முழுவதும் விழிப்பணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. பாம்புக் கடிக்குள்ளானவர்களை உடனடியாக அரசாங்க மருத்துவமனைகளில் சேர்ப்பதன் மூலம் உயிரழப்புக்களைத் தவிர்க்க முடியும் என சுகாhதர அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related News:

வன்னியில் மீள்குடியேறும் மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு