முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்காக ஐந்து உறுப்பினர்கள் அடங்கியதாக ஆறு குழுக்கள் நியமிக்கபட்டுள்ளன. திட்டமிடல், வீடமைப்பு, மின்பிடி, உள்@ராட்சி, நீர் வழங்கல், மின்சாரம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி, விவசாயம் முதலான துறைகளை உள்ளடக்கியதாக இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதே வேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பெரும் போகத்தின் போது 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையும் 9620 ஏக்கர் நிலப்பரப்பில் உபஉணவுப் பயிர் செய்கையும் மேற்கொள்ளப்படவிருப்பதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.