20 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னார் விடத்தல் தீவு முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். யுத்தம் முடிவடைந்ததையடுத்து சுமார் நூறு வரையிலான குடும்பங்கள் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இம்மக்கள் தங்கள் காணிகளையும் பள்ளிவாசல்களையும் துப்பரவாக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்வரும் 25ம் திகதி புனரமைக்க்கபட்டுள்ள ஜும்மாப் பள்ளிவாசலும் தொழுகையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வன்னி நடாளுமன்ற உறுப்பினர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிச்சாட் பிதியுதீன் உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொள்வா என அறிவிக்கப்பட்டுள்ளது.