முல்லைத்தீவில் மீளகுடியமர்ந்துள்ள மக்களின் குறைகளை லியாம் பொஸ்கோ நேரில் கேட்டறிந்தர்.

lio.jpgமுல்லைத் தீவிற்கு பயணமான ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் லியாம் பொஸ்கோ நேற்று  (June 16 2010) பிற்பகல் இங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களைப் பார்வையிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அம்மக்களுக்கான நிவாரண உதவிகள், அவர்களின் தொழில்களுக்கான உதவிகள் தொடர்பாக அவர் கேட்டறிந்துள்ளார். வற்றாப்பளை கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்துள்ளதோடு, ஐ.நாவின் உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற நிவாரண விநியோகத்தையும் அவர் பார்வையிட்டுள்ளார். தொழில் வாய்ப்பு, அழிவடைந்த வீடுகளை மீளக்கட்டியமைப்பதற்கான உதவிகள் குறித்து மக்கள் லியாம் பொஸ்கோடம் கோரிக்கை விடுத்துள்ள்னர்.

பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்ப ஐ.நா உதவும் எனவும், அரசாங்கத்தினூடாக பாதிக்கபட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்பகுதிகளில் இடம்பெற்று வரும் கண்ணி வெடியகற்றும் பணிகளையும் லியாம் பொஸ்கோ பார்வையிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *