15

15

ஏடு – அங்குரார்ப்பணக் கூட்டமும் கலை விழாவும் – 18th July

aedu-image-for-thesam1.jpg
ஏடு அங்குரார்ப்பணக் கூட்டமும் கலை விழாவும்.
Launching The Association for Education Development of Underprivileged – AEDU

Venue:
HARROW TEACHERS CENTRE, TUDOR ROAD, HARROW,MIDDLESEX, HA3 5PQ
Saturday – 18th July 2009, 5PM

Programme:
Introduction to AEDU
Presentation – Underprivileged Children
Orchestra
Live Music
Read the full details in the PDF

Tickets £10.00 under five s – Free
Contact: admin@aedu.info
www.aedu.info

இலங்கையின் வடக்க கிழக்கு பகுதியில் கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நல்வாழ்விற்கு உதவம் வகையில் இந்த ஏடு அமைப்பு உருவாக்கப்பட்டு செயற்ப்பட்டுக் கொண்டிருக்கிறது, மட்டக்களப்பு வுவுனியா திருகோணமலை மன்னார் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தமது குழந்தைகள் நல பராமரிப்பு பாதுகாப்புத் திட்டங்களை ஆரம்பித்து இயங்கி வருகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பலவிதமான கஸ்டங்களை அனுபவித்துவரும் எமது குழந்தைகளை பாதுகாக்க
ஓரிரு அமைப்புக்களே இயங்கிய போதிலும் மேலும் பல அமைப்புக்களின் ஒத்தழைப்பும் அவசியமும் இந்த குழந்தைகளுக்கு தேவைப்படுகின்றது. கடந்த கசப்பான ஆபத்தான காலங்களிலும் இந்த அமைப்பினரும் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் பல உதவிகளை குழந்தைகளுக்கு தனிப்படவே செய்து வந்திருந்தனர். இந்த அமைப்பின் அங்குரார்பணம் இவர்களை மேலும் ஊக்குவிப்பதற்கும் இவர்களது குழந்தைகள் நலன் சேவைகளை மேலும் பரவலாக்கவும் பல ஆதரவாளர்களையும் சேவையாளர்களையும் இணைத்துக்கொள்ளவும் உதவிசெய்யும்.

பல பில்லியன்கள் யுத்தத்திற்கு வழங்கிய புலம்பெயர் மக்களின் பொறுப்பிலிருந்து இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பிலிருந்தும் ஒதுங்கிவிட முடியாததாகும்.

—————————————————————————————————————-

அன்புடையீர்,
வாழ்வோம் வாழ்விப்போம்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எமது தாய்மண்ணில் இடம்பெற்றுவரும் யுத்தமும், அதன் விளைவான இடப்பெயர்வுகளும்,அண்மையில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலையும் (வுளரயெஅi) எமது மக்களைப் பேரழிவுக்குள்ளாக்கியதோடு பெருந்துயரத்தினுள்ளும் இட்டுச் செல்வதை நாம்
கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம்.

இத்தகைய சூழ்நிலையில் மிக மோசமான பாதிப்புக்களுக்கு உள்ளாவோர் சிறுவர்களும் பெண்களுமேயாவர். இன்று பல்லாயிரக் கணக்கான சிறார்கள் தாயையோ,தந்தையையோ,அன்றேல் இருவரையுமோ இழந்து பரிதவிக்கின்றனர். விதவைகளாக்கப்பட்டுள்ள பெண்கள் பல்லாயிரக் கணக்கினர். பெற்றோரை இழந்த
குழந்தைகளுக்காக சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

பெற்றோர் உயிருடனுள்ள போதிலும் தொழில் வாய்ப்புக்கள் இயற்கையாகவோ,செயற்கையாகவோ தடுக்கப்படும் காரணத்தால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பலர் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வளர்கின்ற கொடுமையை இங்கு பரக்கக் காணலாம்.
புள்ளி விபரங்களை எடுத்து நோக்குவோமாயின் பெற்றோர் உயிருடனிருந்த போதிலும் தம் பிள்ளைகளைப் பராமரிக்க இயலாமையால் அவர்கள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களை நாடுகின்றனர்.இதன் காரணமாகப் பெருமளவு சிறார்கள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வாழ்வது வெளிக் கொணரப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பொருளாதார பலமின்மையால் பல்லாயிரக்கணக்கான சிறார்கள் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்பள்ளி வைத்துவிட்டு இடைவிலகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல சிறார்கள் பாடசாலைக்கே செல்ல முடியாத நிலைமையும் வெளிப்பட்டுள்ளது.

இத்தகைய துர்ப்பாக்கிய நிலை நீடிக்குமாயின் எமது சமூகம் பேரழிவுக்குள்ளாகும் என்பதை எவரும் மறுக்கவியலாது.

நகரப் புறங்களில் அமைந்துள்ள சில பாடசாலைகள் கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம்,புலம்பெயர்ந்து வாழும் மக்கள் ஆகியோரால் பேணப்படுவதனால் சிற்சில வசதிகளைப் பெற்றபோதினும் பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலைகள் கவனிப்புக்குள்ளாகாததுடன் அப்பகுதி மாணவர்களது எதிர்காலம் குறித்துக்
கவலைப்படாத அவலமும் இல்லையென்று சொல்வதற்கில்லை.

பெற்றாரை இழந்து ஆதரவற்றுக் காணப்படும் சிறார்களும்,வறுமைக்கோட்டின் கீ;ழ் வாழ்ந்துவரும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களும் தம் பாடசாலைக் கல்வியைத் தடையின்றித் தொடரவும் அன்பும் அரவணைப்பும் பெற்றுத் தத்தம் குடும்பங்களுடனோ, உற்றார் உறவினர்களுடனோ குடும்பச் சூழலில் தங்கி வளரும் வாய்ப்பை வழங்கவும், இப்பிள்ளைகள் நிறுவனப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், பின்தங்கிய கிராமப்புறப் பிரதேசப் பாடசாலைகளின் கல்வித்தர மேம்பாட்டுக்கு உதவுவதையும், நோக்கங்களாகக்
கொண்டு தாபிக்கப்பட்டதே எமது அமைப்பு.

இந்த நோக்கங்களை எய்தும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வமைப்பு வெற்றிகரமாகத் தன் பணியைத் தொடர்கிறது. இவ்வமைப்பின் செயற்பாட்டாளர்களது நோக்கங்களைப் பலப்படுத்தவும், மேற்படி செயற்பாடுகளை வட-கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கவும,; தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.. இதன்பொருட்டுத் தங்களது ஆக்கபூர்வமான ஆதரவையும் ஊக்குவிப்பையும் நாடி நிற்கின்றோம்.

18.07.2009 சனிக்கிழமை நடைபெறவுள்ள எங்கள் அமைப்பின் அறிமுக நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தங்கள் மேலான ஆதரவை நல்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

[Launch of AEDU on Saturday the 18th of July 2009 @ 5.00 pm at Harrow Teachers’ Centre, Tudor Road, Wealdstone, Harrow, Middlesex Ha3 5PQ, Nearest tube station- Harrow & Wealdstone. Contact us for Dinner tickets (£10 per person)].

ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாடும் சிறார்களுக்கு கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்கள் நிறுவன மயப்படுத்தப்படுவதைத் தவிர்த்து வளமுள்ள நற்பிரஜைகளாக்குவதே எமது இலக்காகும்.

பெற்றாரையும், உற்றாரையும், உடன் பிறப்புக்களையும் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்து, அன்பையும் அரவணைப்பையும் இழந்து பரிதாபகரமான சூழலில் அல்லலுற்றுக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறாரை காப்பும் கணிப்பும் உடையவர்களாக மாற்றியமைக்க உதவுவதே எமது நோக்காகும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களும், நடைமுறைப் படுத்தப்படும் முறையும், எமது அறிமுக நிகழ்வின்போது தெளிவுறுத்தப்படும்.

அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
ஆலயம் பதினாயிரம் கட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர்ஏழைக்(கு) எழுத்தறிவித்தல் — மகாகவி பாரதி.

இங்ஙனம்,

Admin-AEDU

ஈரான் விமான விபத்தில் 169 பேர் பலி

iran-plane.jpgஈரானில் 169 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

காஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் தெஹ்ரானில் இருந்து ஆர்மீனிய தலைநகர் யெரவான் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விழுந்து நொறுங்கியது.

தெஹ்ரானுக்கு வட மேற்கே 75 கி.மீ. தொலைவில் கஸ்வின் என்ற நகருக்கு அருகே ஜன்னதாபாத் என்ற கிராமத்தில் விமானம் விழுந்தது.

விமானம் சிதறிவிட்டதாகவும் அதன் பல பாகங்கள் எரிந்து நாசமாகிவிட்டதாகவும் கஸ்வின் அவசரகால உதவி மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிலிருந்த யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பிலை என்று தெரிகிறது.காஸ்பியன் ஏர்லைன்ஸ் ஈரான்-ரஷ்யா இணைந்து நடத்தி வரும் கூட்டு நிறுவனமாகும்.

ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழ் கூட்டமைப்பினர் ஆர்வம்

sampanthr.jpgவவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் அகதிகளின் வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தனித்துவமான சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய சந்திப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரும் கடிதம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அடுத்த ஓரிரு தினங்களில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பார் என தெரியவருகின்றது.

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்துக்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடு திரும்பியதும்  பெரும்பாலும் இந்த வார இறுதியில் அவரது பரிசீலனைக்குக் கிடைக்கக்கூடியதாகக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இக்கடிதத்தை அவருக்கு அனுப்பிவைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இக்கடிதம் கிடைத்து, கூட்டமைப்பினரைத் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணங்குவாரானால்  பெரும்பாலும் அடுத்த வாரம் அளவில்  இந்தச் சந்திப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.

இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்தமைக்கான விருது “உதயன்”, “சுடர் ஒளி” நிறுவனத்துக்கு

sudaroli_.gifஇலங் கையில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தற்கான  அதிஉயர் கௌரவ விருது “உதயன்” “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று இடம்பெற்ற போது இந்த விருது வழங்கப்பட்டது.

இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திவரும் இதழியல் துறையில் சிறந்த செயற்பாடு களுக்கான பத்தாவது விழா நேற்றிரவு கொழும்பு மவுண்ட்லவேனியா ஹொட்டலில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டில் சிறந்த இதழியல் பெறுபேறுக்கான இந்த விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரபல்யமான சமூக செயற்பாட்டாளர் திருமதி அருணா றோய் பங்குபற்றினார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் முக்கிய அம்சமாக இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான ” சேபால குணசேன”விருது வழங்கும் கௌரவம் இடம்பெற்றது. அச்சுறுத்தல்கள், வன்முறை மிரட்டல்கள், உச்ச நெருக்கடிகள் போன்றவற்றுக்கும் மத்தியிலும் யாழ்.குடாநாட்டில் இருந்து சளைக்காது போராடி வரும் “உதயன்”நிறுவனத்துக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவதாக நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. பலத்த கரகோஷத்தின் மத்தியில் “உதயன்”,”சுடர் ஒளி”ஆசிரியர் என். வித்தியாதரன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
 
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வருடாந்த  விருது வழங்கும் நிகழ்வு ஆரம் பிக்கப்பட்ட போதும்  “துணிச்சலான பத்திரிகைக்கான விருது” உதயன் பத்திரிகைக்கு பத்திரிகை ஆசிரியர் சம்மேளனத்தால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்தை தாக்கிய பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை

tsunami111.jpgநியூசிலாந் தில் இன்று மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சிறிய அளவிலேயே சுனாமி அலைகள் உருவானதால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

தெற்கு, மேற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இதில் தென் தீவின் மேற்குப் பகுதியில் பியோர்ட்லாண்ட் என்ற இடத்தில் அந் நாட்டு நேரப்படி இரவு 8.22க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அருகே நிலத்தின் அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவானதையடுத்து பசிபிக் கடலில் சுனாமி ஏற்படலாம் என நியூசிலாந்து முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டது.

முதலில் தென் தீவையும் பின்னர் தலைநகர் ஆக்லாந்து மற்றும் முக்கிய நகரான வெலிங்டன் ஆகியவை அமைந்துள்ள வடக்குத் தீவையும் சுனாமி தாக்கக் கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் இந்த அலைகள் ஆஸ்திரேலியாவையும் அடையக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையோடு அங்கு கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், சிறிய அளவிலான சுனாமி அலைகளே உருவானதாகவும் இதனால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும் ஆஸ்திரேலிய வானிலை மையம் பின்னர் அறிவித்துவிட்டது. இந்த அலைகள் ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியை (டாஸ்மான் கடல் பகுதி) நோக்கி சீறியதாகவும் அந்த மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவின் தெற்குத் தீவில் உள்ள குயீன்ஸ்டெளன், கிரைஸ்ட்சர்ச் ஆகிய நகர்கள் உள்பட பெரும்பாலான பகுதிகளும் குலுங்கின. மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தையடுத்து தென் தீவு முழுவதும் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. நிலநடுக்கம் மிக பயங்கரமாக இருந்ததாக வனாகா என்ற நகரைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஆயுதக்குழுக்களால் பாதிப்பில்லை – ஐ.தே.கவின் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரிப்பு

laxman_yapa_abeywardena.jpgஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளால் வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு ஒரு போலியான குற்றச்சாட்டாகுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத வகையில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் நிலவுவதாக மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அங்கு அவ்வாறான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. அவ்வாறு அச்சுறுத்தல்கள் இருந்தால் பொலிஸாரிடம்; முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் இதுவரை எவ்வித முறைப்பாடும் செய்யப்படவில்லை.

வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வாய்ந்த ஒருவராக ஐக்கிய தேசியக் கட்சி டொக்டர் ஜயலத் ஜயவர்தனாவை நியமித்துள்ளது. அவரிடம் ஆயுதக்கழுக்களின் இடையூறுகள் பற்றி விசாரித்த போது முறைப்பாடுகள் எதுவும் இல்லை என்றே தெரிவிக்கின்றார். எனவே ஆயுதக்குழுக்களினால் தடை ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உன்மையும் இல்லை என்பது இதன் மூலம் புலனாகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தா

வவுனியா நகரில் பாதுகாப்புக் கெடுபிடிகள் தளர்வு; சில இடங்களில் காவலரண்கள் நீக்கம்

வவுனியா நகரில் இதுவரை காலமுமிருந்த பாதுகாப்பு கெடுபிடிகளில் தற்போது சற்றுத் தளர்வேற்பட்டுள்ளது. நகரில் சில இடங்களிலிருந்த காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன. தேக்கம்காடு முதல் மூன்று முறிப்பு வரையில் மேற்கு புறத்தே பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலிகள் அகற்றப்பட்டு பாரிய குழிகளும் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது. நகரசபைத் தேர்தலை முன்னிட்டு சில பாதுகாப்பு செயல்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

வவுனியாவிலிருந்து தனிப்பட்ட தேவையின் பொருட்டு கொழும்பிற்கு செல்ல பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து மதவாச்சி ஊடான வாகன போக்குவரத்திற்கும் அனுமதி பெறலாம். அத்துடன், மதவாச்சி சோதனை நிலையத்தின் ஊடாக போக்குவரத்திலும் சில தளர்வுகள் அடுத்த சில தினங்களில் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகா மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

new_appointment.jpgஇலங்கை இராணுவத்தின் அதிஉயர் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இன்று உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும் வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய புதிய இராணுவத் தளபதியாகவும் கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டனர்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இந்த நியமனத்தின்படி  இராணுவத் தளபதி பதவியிலிருந்து நேற்று பதவி விலகிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது புதிய பதவிக்கான கடமைகளை இன்று பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 19ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். 

கனடாவில் தமிழ் இளைஞன் அடித்துக் கொலை

கனடா, ரொறன்ரோவில் கிறிஸ்ரியன் தனபாலன் (வயது 22 என்ற தமிழ் இளைஞன் கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ரொறன்ரோ நகரில் கிளமோர்கன் பார்க்கில் கடந்த சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் இறந்து விட்டார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபாலன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் இரு குழுவினருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மற்றைய குழுவினர் வாகனங்களில் ஏறிச் சென்றுவிட்ட போதும் பின்னர் அவர்கள் திரும்பி வந்ததாகவும் நள்ளிரவில் இரு குழுக்களும் சண்டையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனபாலும் நண்பர்களும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இரு குழுவினரும் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைக் கண்டிக்க அரசுக்கு எவ்வித நோக்கமும் இல்லை – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

laxman_yapa_abeywardena.jpgஊடகவி யலாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித நோக்கமும் இல்லை என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

தகவல்களைத் அறிந்துகொள்வதற்கு மக்களுக்குரிய சுதந்திரமான வழிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் ஊடகவியலாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து தண்டிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜயந்த கருணாதிலக்க ஊடகங்களுக்குத் தெரிவிததிருந்தார். அவர் தெரிவித்திருந்த கூற்றை அரசாங்கம் முற்றாக மறுப்பதுடன் அவரது கூற்றில் எவ்வித உன்மையும் இல்லை.

இது தொடர்பான எந்தவொரு சட்டமூலத்தைக் கொண்டுவரவும் அரசாங்கத்துக்கு உத்தேசம் இல்லை. குறைந்தபட்சமாக இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றையோ அல்லது கலந்துரையாடல் ஒன்றையோ அரசாங்கம் நடத்தவில்லை. நாட்டில் யுத்த நடவடிக்கைகள் இடம்பெற்ற போது ஜனாதிபதிக்கும் ஊடகங்களின் தலைமை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் யுத்த செய்திகளை நியாயமான முறைக்கு பிரசுரிக்க வேண்டுமென மட்டும் வேண்டுகொள் விடுக்கப்பட்டது.

அதைத்தவிர ஊடகங்களை பாதிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.அத்துடன் ஊடகங்களைப் பாதிக்கும் வகையிலான கட்டளைச் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் ஒரு போதும் கருதியதில்லை  என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.