29

29

ஈழத் தமிழர்கள் தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியா உதவும் -செல்வராஜா பத்மநாதன்

selvarasa_pathmanathan.jpgஈழத் தமிழர்கள், அவர்களின் வேட்கையான தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இந்திய நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், “பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை” எனவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார்.

பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்” எனவும் செல்வராஜா பத்மநாதன் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்வதற்குத் தான் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் எவரும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளும் ஈழத் தமிழர்களின் துன்பங்களையிட்டு தமது கரிசனையை வெளிப்படுத்திவருவதாகவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார். “தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது” எனவும் அவர் தமது தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக விபரிக்கையில் தெரிவித்தார்.

“ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்” எனத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், “இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இலங்கை பஹ்ரைன் இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து!

agreement.pngஇலங் கைக்கும் பஹ்ரைனுக்குமிடையே வெளியுறவுகள், பொருளாதாரம், வர்த்தகம், தொழிநுட்பக் கூட்டுறவு மற்றும் சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு இருதரப்பு உடன்படிக்கைகள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையே வெளியுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இலங்கை மற்றும் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சுக்களுக்கிடையே கைச்சாத்திடப்பட்டது.

 இரு நாடுகளுக்கிடையேயும் பொருளாதாரம் வர்த்தகம் தொழிநுட்பக் கூட்டுறவு என்பவற்றை ஊக்குவிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் பஹ்ரைன் பிரதிப் பிரதமர் செய்க் முஹம்மத் பின் முபாரக் அல் கலீபா அவர்களுக்குமிடையே மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

இந்திய உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முதலாவது ‘ரயில்பஸ்’ சேவை இன்று ஆரம்பம்.

rail_bus000.jpgஇந்திய உதவியுடன் கிழக்கு மாகாண சபைக்கு நேரடியாக கிடைத்த பஸ் வண்டிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது “ரயில்பஸ் “வண்டி இன்று மாலை உத்தியோக பூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ரயில் போக்குவரத்து சேவையை விஸ்தரிக்கும் வகையில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட 10 பஸ் வண்டிகள் மூலம் 5 ரயில்பஸ் வண்டிகளை தயாரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ் வண்டிகளைப் பொருத்தி தயாரிக்கப்பட்ட முதலாவது ரயில்பஸ் இன்று மாலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ,இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ,மத்திய போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ,தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி ,மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கலந்துகொண்ட அரசாங்க அதிகாரிகள் ,ஊடகவியலாளர்கள் ,மத பிரமுகர்கள் உட்பட சகலரும் தீவிர சோதனையின் பின்னரே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ரயில்பஸ் வண்டி இன்று மாலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து வாழைச்சேனை வரை வெள்ளோட்டம் விடப்பட்ட போது இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் அதில் பயணம் செய்தனர்.

நாளை முதல் பயணிகள் சேவையில் ஈடுபடவிருக்கும் இவ் ரயில்பஸ் வண்டி தற்போதைக்கு மட்டக்களப்பிற்கும் – வெலிக்கநதைக்குமிடையிலேயே தினமும் ஒரு சேவையில் ஈடுபடும் என நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது 

முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய தரகர்களை நாட வேண்டாம் : வவுனியா பிரதேச செயலாளர்

இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களை வெளியில் எடுப்பது, அவர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறுவது, கிராம சேவகர்களிடம் அவர்களைப் பதிவு செய்வது, அவர்களுக்கான கடவுச் சீட்டைப் பெறுவது போன்ற செயற்பாடுகளில் இடம்பெயர்ந்தவர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ தரகர்களின் உதவியை நாட வேண்டாம் என வவுனியா பிரசே செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் தேவைகளுக்காகப் பொதுமக்கள் தரகர்களின் உதவியை நாடியுள்ளமை தொடர்பாக பிரதேச செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகளுக்காகத் தரகர்கள் கிராம சேவை அதிகாரிகளின் இலச்சினை, கையெழுத்து என்பவற்றைப் போலியாகப் பயன்படுத்தியுள்ளதுடன், பிரதேச செயலாளரின் கையெழுத்து மற்றும் அவருடைய அலுவலக இலச்சினையையும் தரகர்கள் போலியாகப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது சம்பந்தப்பட்ட கடிதங்களும் பிரதேச செயலகத்திற்குக் கிடைத்திருப்பதாக வவுனியா பிரதேச செலயாளர் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு விரோதமான முறைகளில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முயற்சிக்கின்ற பொதுமக்களே, அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டும் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எனவே தரகர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள வவுனியா பிரதேச செயலாளர், பொதுமக்கள் தமது தேவைகளுக்காக தத்தமது பிரிவு கிராம சேவகர்களுடன் தொடர்பு கொள்வதுடன், அவசியமானால் கிழமை நாட்களில் கடமை நேரத்தில் பிரதேச செயலாளர் அல்லது உதவி பிரதேச செயலாளரை நாடி தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்கள் அடங்கிய பொதுமக்களுக்கான அறிவித்தல் கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் அலுவலகம் உட்பட பொதுமக்கள் தொடர்பு கொள்கின்ற அரச பொது அலுவலகங்களின் அறிவித்தல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் ஹம்ஸாவின் வாகனம் மீது தாக்குதல்

india-hamza.jpgசென்னை யிலுள்ள இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதுவர் ஹம்ஸாவின் வாகனம் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத இளைஞர் கோஷ்டியொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, மேலும் தெரியவருவதாவது

லண்டனிலுள்ள இலங்கை தூதராலயத்திற்கு துணைத் தூதுவராக மாற்றலாகிச் செல்வதையொட்டி தூதுவர் ஹம்ஸா ஆந்திர தொழில் கூட்டமைப்பைச் சார்ந்த ஆந்திர முதலாளிமாருக்கு விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இவ்விருந்து சென்னையில், உள்ள ஜிம்கான கிளப்பில் நடைபெற்றது. இதனைக் கேள்வியுற்ற இளைஞர்கள் சிலர் அங்கு சென்று தங்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கோரியுள்ளார்கள்.

அவர்களுக்கு அனுமதி மறுக்கவே, வெளியே வந்த இளைஞர்கள் சத்தமில்லாமல் கலைந்து சென்றனர். பின்னர் விருந்து முடிந்து வெளியே வந்த ஹம்ஸாவின் காரை சூழ்ந்து சுமார் 20 நிமிடங்கள் முற்றுகையிட்டதுடன், அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். இதனை அறிந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஹம்ஸாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதையடுத்து அங்கு சிக்கிக் கொண்ட அவரது காரை சேதப்படுத்தியுள்ளனர். இதனால், அங்கு சிறு பதற்றம் நிலவியது. உடனே,காவல் துறையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களையும் தேடி வருவதாக தமிழக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சு.கவின் 19வது தேசிய மாநாட்டில் தீர்வு யோசனையை வெளியிட திட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் தீர்வு யோசனை அடங்கலாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய திட்டங்கள் வெளியிடப்படும் என சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிரிசேன தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இந்த மாநாட்டில் நாடுபூராவும் இருந்து சுமார் 6 ஆயிரம் பிரதிநிதிகள் பங்குபற்ற உள்ளனர். நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய திட்டங்கள் இந்த மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்படும். இந்த திட்டங்கள் இந்த வருட இறுதியிலும் அடுத்த வருட முதற்பகுதியிலும் மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும்.

பயங்கரவாதத்திற்கு முடிவு கண்டுள்ள நிலையில் அடுத்ததாக நாட்டை துரித அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் புதிய நாடொன்றை கட்டியெழுப்பும் முக்கிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களினூடாக நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

நாட்டின் அபிவிருத்திக்கென பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2010 வரவு செலவுத் திட்டத்தினூடாக மேலும் பல புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கவும் அபிவிருத்தி இலக்குகளை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. பலம்வாய்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் வரவு செலவுத் திட்டத்தினூடாக முக்கிய திட்டங்கள் முன்வைக்கப்படும்.

புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் கொழும்பில் கைது -பாதுகாப்பு அமைச்சு தகவல்

புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நபருடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 3 தற்கொலை அங்கிகள் உட்பட பெருந்தொகையான வெடிபொருட்கள்,  இரு துப்பாக்கிகள் மற்றும் சில ரவைகள் என்பனவற்றை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தொடர்பான மேலதிக விசாரனைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

யாழ் ச.தொ.ச. ஒரு நாள் விற்பனை 6 இலட்சம் ரூபா

sathosa-outlet.jpgயாழ்ப் பாணத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் ஒரு நாள் விற்பனை 6 இலட்சம் ரூபாவாகக் காணப்பட்டதாக விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு மற்றும் நுகர்வோர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். யாழ் ச.தொ.ச கிளை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதும் பெரும் திரளான மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதிகூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் வேளையில் இது போன்ற விற்பனை நிலையம் மூலம் மக்களுக்கு சகாய விலைக்கு பொருட்கள் கிடைப்பது பெரியதொரு நிவாரணமாக அமைகிறது.

ஏ 9 வீதி ஊடாக யாழ் ச.தொ.ச வுக்கு பொருட்களை அனுப்பி வருவதாகவும் வட பகுதியில் மேலும் பல ச.தொ.ச கிளைகளைத் திறக்க உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

இடம்பெயர்ந்தவர்களுக்கு குவைட் நிவாரண உதவி – நேரடியாகச் சென்று கையளிப்பு

rizzada_with.jpgமுசலி பிரதேசததில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கு குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவின் பிரிதிநிதிகளினால் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர் உணவு பொதிகள் கையளிக்கப்பட்டன. மன்னார் முசலி பிரதேசத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்ட குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவினரால் இந்தப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.;

செரண்டிப் நிவாரண மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இலங்கை வந்த பிரதி நிதிகள் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் முசலிக்கு விஜயம் செய்திருந்தனர். குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவின் இணைப்பாளர்களான பத்ர் ஆஸ் சம்ரூக் மற்றும் பைசல் யகூத்,  சரண்டிப் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர்,  அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் முசலிக்கு சென்று இதனை கையளித்தனர்.

இதே வேளை வவுனியா சாளம்பை புரம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த நிலையில் அநுராதபுரம் இக்கிரிகொள்ளாவ நலன்புரி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன், மற்றும் பிரதி நிதிகள் இந்த நிவாரண பொருட்களை கையளித்தனர். 

அரசின் புனரமைப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு – இலங்கை வந்துள்ள புலம்பெயர் தமிழர் குழு தெரிவிப்பு

அரசாங்கம் மேற்கொண்டுவரும் புனரமைப்புப் பணிகளுக்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுப்பம் என இலங்கை வந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் பின்னரான நிலைமைகளை நேரில் அவதானிக்கவென்றும்,  இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி ஆராயவும்,  அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டொக்டர் நொயல் நடேசன் தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர் மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும்  துரித நடவடிக்கைகள் புலம்பெயர் தமிழர்கள் குழு திருப்தி தெரிவித்துள்ளது.

சகலவற்றையும் இழந்து வந்துள்ள மக்களின் வாழ்வாதார ஸ்திரத்தன்மையைக் கருத்திற்கொண்டு நீண்டகால செயற்திட்டங்களின் அடிப்படையில் குடியமர்த்தப்பட வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

அரசியல் தலைவர்கள்,  அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,  அரச அதிகாரிகள்,  இடம்பெயர்ந்த மக்கள்,  உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசிய இந்தக் குழுவினர்,  தமது அனுபவங்களையும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த எழுத்தாளரும்,  மனித உரிமை ஆர்வலரும்,  சமூக சேவையாளருமான திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூக சேவையாளர் இராஜரட்ணம் சிவநாதன்,  கனடாவிலிருந்து ஊடகவியலாளரும் அரசியல் சமூக ஆய்வாளருமான எஸ். மனோரஞ்சன், சவூதியிலிருந்து டொக்டர் இராஜசிங்கம் நரேந்திரன் ஆகியோர் டொக்டர் நொயல் நடேசனுடன் கொழும்பு வந்துள்ளனர்