இடம்பெயர்ந்தவர்களுக்கு குவைட் நிவாரண உதவி – நேரடியாகச் சென்று கையளிப்பு

rizzada_with.jpgமுசலி பிரதேசததில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கு குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவின் பிரிதிநிதிகளினால் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர் உணவு பொதிகள் கையளிக்கப்பட்டன. மன்னார் முசலி பிரதேசத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்ட குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவினரால் இந்தப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.;

செரண்டிப் நிவாரண மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இலங்கை வந்த பிரதி நிதிகள் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் முசலிக்கு விஜயம் செய்திருந்தனர். குவைத் ஒருங்கிணைந்த நிவாரண குழுவின் இணைப்பாளர்களான பத்ர் ஆஸ் சம்ரூக் மற்றும் பைசல் யகூத்,  சரண்டிப் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர்,  அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் முசலிக்கு சென்று இதனை கையளித்தனர்.

இதே வேளை வவுனியா சாளம்பை புரம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த நிலையில் அநுராதபுரம் இக்கிரிகொள்ளாவ நலன்புரி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன், மற்றும் பிரதி நிதிகள் இந்த நிவாரண பொருட்களை கையளித்தனர். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *