வன்னி முகாம்களில் தங்கியுள்ள 5ம் தர மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நூல் விநியோகத்திட்டத்திற்கு இன்னமும் 3 65 000 ரூபாய் (2000 பவுண்) தேவைப்படுகின்றது. மேற்படி தொகையை தேசம்நெற் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும். தங்களை நேரடியாக இனம்காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் மின்அஞ்சலூடாக தொடர்பு கொள்ள முடியும்.
தொடர்பு விபரங்கள்:
தொடர்புகளுக்கு: த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம்
தொலைபேசி இல – 0044 208 279 0354
கைத் தொலைபேசி இல – 0044 7800 596 786 – 0044 7846 322 369
மின்அஞ்சல் : thesam97@hotmail.com
வன்னி முகாம்களில் தமது புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவுமுகமாக 28 இலட்சம் (27 77 000) ரூபாய் செலவில் நூல் வழங்கும் திட்டம் ஒன்றை தேசம்நெற் முன்னெடுத்தது அனைவரும் அறிந்ததே. தற்போது இத்திட்டத்தின் இறுதிப் பகுதியில் நாங்கள் உள்ளோம். மேலும் ஓகஸ்ட் நடுப்பகுதியில் பரீட்சைகள் நடக்க இருக்கின்றது. அதனால் இன்னும் சில தினங்களுக்குள் மாணவர்களுக்கான நூல்கள் அனைத்தும் விநியோகிக்கப்பட வேண்டியுள்ளது.
இத்திட்டத்திற்கு இதுவரை பங்களித்தவர்கள் விபரம் வருமாறு:
9 25 000 ரூபாய் : சிந்தனை வட்டம்
7 00 000 ரூபாய் : மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் (இலங்கை)
5 50 000 ரூபாய் (3000 பவுண்) : அகிலன் பவுண்டேசன் (லண்டன்)
2 00 000 ரூபாய் : தேசம்நெற்
37 000 ரூபாய் (200 பவுண்) : பி சோமசுந்தரம் (லண்டன்)
24 12 000 ரூபாய் : மொத்தமாக இதுவரை உறுதியளிக்கப்பட்ட தொகை
இவற்றைக் கருத்தில்கொண்டு தேசம்நெற் அதன் வாசகர்களிடம் இந்த உதவி விண்ணப்பத்தை முன் வைக்கின்றது. இத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்களை கேள்வி பதில் வடிவில் வழங்கி உள்ளோம். மேலதிக விபரங்களுக்கு மேலுள்ள தொடர்பு இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். இக்கல்வித்திட்டம் தொடர்பாக பரிமாறப்பட்ட கடிதங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.
தேசம்நெற் முன்னெடுக்கும் 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வித் திட்டம் – கேள்வியும் பதிலும்
புலமைப் பரிசில் பரீட்சை என்றால் என்ன:
இலங்கையில் அரசாங்கப் பரீட்சை என்ற அடிப்படையில் 03 பிரதான பரீட்சைகள் நடைபெறுகின்றன.
1. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த சாதாரணதர பரீட்சை
3. க.பொ.த உயர்தர பரீட்சை
இப்பரீட்சைகளுள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதலாவது பரீட்சையாகும்.
இதனை லண்டனில் நடைபெறும் 11 பிளஸ் பரீட்சைக்கு ஒப்பிடமுடியும்.
இப் பரீட்சையில் சித்தியடைவதால் மாணவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன:
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களை உயர்தர பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குமான பரீட்சையாக அமைந்துள்ளது. இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர்.
அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரம் சித்தியடையும் வரை மாதந்தோறும் (தற்போது) ரூபாய் 500 உதவிப் பணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும். உரிய மாணவன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டாலும் இத்தொகை அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.
எத்தனை மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்றுகின்றனர்:
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு போட்டிப் பரீட்சையாகும். சராசரியாக ஆண்டொன்றுக்கு 70 000 மாணவர்கள் மட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக தோற்றுவர். இவர்களுள் சுமார் 3500 மாணவர்கள் மட்டில் சித்தியடைவர்.
தற்போது இப்பரீட்சையில் தோற்றவுள்ள எத்தனை மாணவர்கள் இடப்பெயர்வு முகாம்களில் உள்ளனர்:
இடப்பெயர்வு முகாம்களில் உள்ள 4872 மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்ற உள்ளனர்.
இலங்கை இலவசக் கல்வி வழங்கும் நாடாக இருக்கையில் எதற்காக அம்மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளது:
அண்மைய வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் கடந்த ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகள் இயங்கவில்லை. அதனால் அந்த மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் விநியோகிக்கப்படவில்லை. தற்போது அவர்கள் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் பாடப் புத்தகங்களைப் பெற்று படிப்பதற்கான வாய்ப்பான சூழல் இடம்பெயர்வு முகாம்களில் இல்லை.
மேலும் இந்நிலைக்கு முன்னதாகவே புலமைப் பரிசில் பரீட்சைக்கான துரித வழிகாட்டல் நூல்களை அரசின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் வழங்குவதில்லை. அதனால் மாணவர்கள் அதனை தனிப்பட்ட முறையில் வாங்கியே தமது கற்கைகளை மேற்கொள்கின்றனர்.
ஏற்கனவே கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் இம்மாணவர்களுக்கு துரித மீட்டல் செய்வதற்கான வினா விடைத் தொகுப்புகளும் அதற்கான வழிகாட்டி நூல்களும் மிகவும் அவசியம்.
எதற்காச் சிந்தனை வட்டத்தின் வெளியீடுகள் தெரிவு செய்யப்பட்டது:
சிந்தனை வட்டம் கடந்த 15 வருடங்களாக புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான நூல்களை வெளியிட்டு வருகின்றது. இலங்கை பூராவும் உள்ள 700க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு சிந்தனைவட்டம் இந்நூல்களை விநியோகித்து உள்ளது. சிந்தனை வட்டத்தின் நூல்களின் தரம் இத்துறையில் நீண்டகாலம் நிலை பெற்ற காரணங்களினால் விசேட கல்விப் பணிப்பாளர் தனது உதவிக் கோரிக்கையை சிந்தனை வட்டத்திடம் வைத்தார்.
இந்நூல் திட்டத்திற்கு ஏற்படும் செலவு என்ன:
ஒவ்வொரு மாணவருக்கும்
30 வினாத்தாள்கள் கொண்ட வினாத் தொகுப்பு (148 பக்கங்கள்) 180.00 ரூபாய்
வழிகாட்டி நூல் 1 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 2 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 3 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 4 97.50 ரூபாய்
570.00 ரூபாய் : ஒரு மாணவருக்கு இந்நூல் தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு
(வழிகாட்டி நூல்கள் இல்லாது 100 பக்கம் கொண்ட வினாத் தொகுப்பின் சந்தை மதிப்பு 200 முதல் 225 ரூபாய்)
27 77 000.00 ரூபாய் : 4872 மாணவர்களுக்கும் தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு
வெளியீட்டாளர்களான சிந்தனை வட்டம் செலவு தொகையின் மூன்றிலொரு பகுதியைப் பொறுப்பேற்பதுடன் விநியோகத்தையும் மேற்கொள்கின்றனர்.
9 25 000.00 ரூபாய் : சிந்தனை வட்டம் பொறுப்பேற்றசெலவுத் தொகை.
18 52 000.00 ரூபாய் : சிந்தனை வட்டம் பொறுப்பேற்ற பின் நூல்தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு.
இந்நூல் திட்டத்திற்கான செலவை எவ்வாறு பெற்றுக்கொள்வது:
ஆரம்பித்தில் தேசம்நெற் இம்முயற்சியை முன்னெடுத்திருந்தது. தற்போது மாணவர்களின் தொகை அதிகரித்துள்ள நிலையில் தேசம்நெற் தனித்து இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருளாதாரப் பலத்தை கொண்டிருக்காததால் வெவ்வேறு உதவி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் மூலம் பெறப்பட்ட உதவிகள் வருமாறு
7 00 000 ரூபாய் : மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் (இலங்கை)
5 50 000 ரூபாய் (3000 பவுண்) : அகிலன் பவுண்டேசன் (லண்டன்)
2 00 000 ரூபாய் : தேசம்நெற்
37 000 ரூபாய் (200 பவுண்) : பி சோமசுந்தரம் (லண்டன்)
14 87 000 ரூபாய் : மொத்தமாக இதுவரை உறுதியளிக்கப்பட்ட தொகை.
3 65 000 ரூபாய் (2000 பவுண்) : இத்திட்டத்தினை நிறைவேற்ற இன்னமும் தேவையான நிதி.
இதன் நம்பகத் தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துவது:
இந்நூல் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யதவர்களின் முழுமையான விபரங்கள் செலவீனங்களுக்கான கணக்கு விபரங்கள் நூல்கள் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தேசம்நெற் இணையத்திலும் லண்டன் குரல் பத்திரிகையிலும் வெளியிடப்படும்.
இத்திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் எவ்வாறு உதவலாம்:
இந்நூல் திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் உதவியை வழங்கலாம். உதவி வழங்குபவரின் பெயரும் உதவித்தொகையும் முழுமையான கணக்கு விபரமும் தேசம்நெற் இணையத் தளத்திலும் லண்டன் குரல் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படும்.
எப்படித் தொடர்பு கொள்வது:
தொடர்புகளுக்கு: த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம்
தொலைபேசி இல – 0044 208 279 0354
கைத் தொலைபேசி இல – 0044 7800 596 786 – 0044 7846 322 369
மின்அஞ்சல் : thesam97@hotmail.com
இந்நூல் திட்டத்தின் பயனை எவ்வாறு மதிப்பிட முடியும்:
சூழல் இடம்கொடுத்தால் இம்மாணவர்கள் மாதிரிப் பரீட்சைகளுக்கு அமர்த்தப்பட்டு அவற்றின் மதிப்பீடுகள் உதவி வழங்குபவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். மேலும் இம்மாணவர்கள் ஓகஸ்ட் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சைகளில் தோற்றிப் பெறும் பெறுபேறுகள் உதவி வழங்கியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சமூக வளர்ச்சியின் அடிப்படை கல்வி!
இளமையில் கல்வி சமூகத்தின் அஸ்திவாரம்!