கெப்டன் கொலராடோ நிவாரண உதவிகள் இந்த வாரத்துக்குள் விநியோகம்!

ship121212.jpgஇந்தியா விலிருந்து இலங்கைக்கு கெப்டன் கொலராடோ கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட நிவாரண உதவிகள் இந்த வாரத்துக்குள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு கடந்த வாரம் கெண்டுவரப்பட்ட 16.7 மில்லியன் ரூபா பெறுமதியான 650 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களில் அரிசி, மா,  பால்மா,  மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  27 கொள்கலன்களின் கொண்டுவரப்பட்டுள்ள இப்பொருட்கள் இப்போது கொழும்புத் துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து தமிழ் மக்களால் ‘வணங்கா மண்’ கப்பல் மூலம் அனுப்பப்பட்ட இந்த நிவாரண உதவிகள் சென்னைத் துறைமுகத்தில் இறக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து ‘கெப்டன் கொலராடோ’  கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *