ஏடு – அங்குரார்ப்பணக் கூட்டமும் கலை விழாவும் – 18th July

aedu-image-for-thesam1.jpg
ஏடு அங்குரார்ப்பணக் கூட்டமும் கலை விழாவும்.
Launching The Association for Education Development of Underprivileged – AEDU

Venue:
HARROW TEACHERS CENTRE, TUDOR ROAD, HARROW,MIDDLESEX, HA3 5PQ
Saturday – 18th July 2009, 5PM

Programme:
Introduction to AEDU
Presentation – Underprivileged Children
Orchestra
Live Music
Read the full details in the PDF

Tickets £10.00 under five s – Free
Contact: admin@aedu.info
www.aedu.info

இலங்கையின் வடக்க கிழக்கு பகுதியில் கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நல்வாழ்விற்கு உதவம் வகையில் இந்த ஏடு அமைப்பு உருவாக்கப்பட்டு செயற்ப்பட்டுக் கொண்டிருக்கிறது, மட்டக்களப்பு வுவுனியா திருகோணமலை மன்னார் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தமது குழந்தைகள் நல பராமரிப்பு பாதுகாப்புத் திட்டங்களை ஆரம்பித்து இயங்கி வருகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பலவிதமான கஸ்டங்களை அனுபவித்துவரும் எமது குழந்தைகளை பாதுகாக்க
ஓரிரு அமைப்புக்களே இயங்கிய போதிலும் மேலும் பல அமைப்புக்களின் ஒத்தழைப்பும் அவசியமும் இந்த குழந்தைகளுக்கு தேவைப்படுகின்றது. கடந்த கசப்பான ஆபத்தான காலங்களிலும் இந்த அமைப்பினரும் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் பல உதவிகளை குழந்தைகளுக்கு தனிப்படவே செய்து வந்திருந்தனர். இந்த அமைப்பின் அங்குரார்பணம் இவர்களை மேலும் ஊக்குவிப்பதற்கும் இவர்களது குழந்தைகள் நலன் சேவைகளை மேலும் பரவலாக்கவும் பல ஆதரவாளர்களையும் சேவையாளர்களையும் இணைத்துக்கொள்ளவும் உதவிசெய்யும்.

பல பில்லியன்கள் யுத்தத்திற்கு வழங்கிய புலம்பெயர் மக்களின் பொறுப்பிலிருந்து இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பிலிருந்தும் ஒதுங்கிவிட முடியாததாகும்.

—————————————————————————————————————-

அன்புடையீர்,
வாழ்வோம் வாழ்விப்போம்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எமது தாய்மண்ணில் இடம்பெற்றுவரும் யுத்தமும், அதன் விளைவான இடப்பெயர்வுகளும்,அண்மையில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலையும் (வுளரயெஅi) எமது மக்களைப் பேரழிவுக்குள்ளாக்கியதோடு பெருந்துயரத்தினுள்ளும் இட்டுச் செல்வதை நாம்
கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம்.

இத்தகைய சூழ்நிலையில் மிக மோசமான பாதிப்புக்களுக்கு உள்ளாவோர் சிறுவர்களும் பெண்களுமேயாவர். இன்று பல்லாயிரக் கணக்கான சிறார்கள் தாயையோ,தந்தையையோ,அன்றேல் இருவரையுமோ இழந்து பரிதவிக்கின்றனர். விதவைகளாக்கப்பட்டுள்ள பெண்கள் பல்லாயிரக் கணக்கினர். பெற்றோரை இழந்த
குழந்தைகளுக்காக சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

பெற்றோர் உயிருடனுள்ள போதிலும் தொழில் வாய்ப்புக்கள் இயற்கையாகவோ,செயற்கையாகவோ தடுக்கப்படும் காரணத்தால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பலர் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வளர்கின்ற கொடுமையை இங்கு பரக்கக் காணலாம்.
புள்ளி விபரங்களை எடுத்து நோக்குவோமாயின் பெற்றோர் உயிருடனிருந்த போதிலும் தம் பிள்ளைகளைப் பராமரிக்க இயலாமையால் அவர்கள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களை நாடுகின்றனர்.இதன் காரணமாகப் பெருமளவு சிறார்கள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வாழ்வது வெளிக் கொணரப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பொருளாதார பலமின்மையால் பல்லாயிரக்கணக்கான சிறார்கள் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்பள்ளி வைத்துவிட்டு இடைவிலகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல சிறார்கள் பாடசாலைக்கே செல்ல முடியாத நிலைமையும் வெளிப்பட்டுள்ளது.

இத்தகைய துர்ப்பாக்கிய நிலை நீடிக்குமாயின் எமது சமூகம் பேரழிவுக்குள்ளாகும் என்பதை எவரும் மறுக்கவியலாது.

நகரப் புறங்களில் அமைந்துள்ள சில பாடசாலைகள் கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம்,புலம்பெயர்ந்து வாழும் மக்கள் ஆகியோரால் பேணப்படுவதனால் சிற்சில வசதிகளைப் பெற்றபோதினும் பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலைகள் கவனிப்புக்குள்ளாகாததுடன் அப்பகுதி மாணவர்களது எதிர்காலம் குறித்துக்
கவலைப்படாத அவலமும் இல்லையென்று சொல்வதற்கில்லை.

பெற்றாரை இழந்து ஆதரவற்றுக் காணப்படும் சிறார்களும்,வறுமைக்கோட்டின் கீ;ழ் வாழ்ந்துவரும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களும் தம் பாடசாலைக் கல்வியைத் தடையின்றித் தொடரவும் அன்பும் அரவணைப்பும் பெற்றுத் தத்தம் குடும்பங்களுடனோ, உற்றார் உறவினர்களுடனோ குடும்பச் சூழலில் தங்கி வளரும் வாய்ப்பை வழங்கவும், இப்பிள்ளைகள் நிறுவனப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், பின்தங்கிய கிராமப்புறப் பிரதேசப் பாடசாலைகளின் கல்வித்தர மேம்பாட்டுக்கு உதவுவதையும், நோக்கங்களாகக்
கொண்டு தாபிக்கப்பட்டதே எமது அமைப்பு.

இந்த நோக்கங்களை எய்தும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வமைப்பு வெற்றிகரமாகத் தன் பணியைத் தொடர்கிறது. இவ்வமைப்பின் செயற்பாட்டாளர்களது நோக்கங்களைப் பலப்படுத்தவும், மேற்படி செயற்பாடுகளை வட-கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கவும,; தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.. இதன்பொருட்டுத் தங்களது ஆக்கபூர்வமான ஆதரவையும் ஊக்குவிப்பையும் நாடி நிற்கின்றோம்.

18.07.2009 சனிக்கிழமை நடைபெறவுள்ள எங்கள் அமைப்பின் அறிமுக நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தங்கள் மேலான ஆதரவை நல்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

[Launch of AEDU on Saturday the 18th of July 2009 @ 5.00 pm at Harrow Teachers’ Centre, Tudor Road, Wealdstone, Harrow, Middlesex Ha3 5PQ, Nearest tube station- Harrow & Wealdstone. Contact us for Dinner tickets (£10 per person)].

ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாடும் சிறார்களுக்கு கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்கள் நிறுவன மயப்படுத்தப்படுவதைத் தவிர்த்து வளமுள்ள நற்பிரஜைகளாக்குவதே எமது இலக்காகும்.

பெற்றாரையும், உற்றாரையும், உடன் பிறப்புக்களையும் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்து, அன்பையும் அரவணைப்பையும் இழந்து பரிதாபகரமான சூழலில் அல்லலுற்றுக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறாரை காப்பும் கணிப்பும் உடையவர்களாக மாற்றியமைக்க உதவுவதே எமது நோக்காகும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களும், நடைமுறைப் படுத்தப்படும் முறையும், எமது அறிமுக நிகழ்வின்போது தெளிவுறுத்தப்படும்.

அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
ஆலயம் பதினாயிரம் கட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர்ஏழைக்(கு) எழுத்தறிவித்தல் — மகாகவி பாரதி.

இங்ஙனம்,

Admin-AEDU

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Kusumbo
    Kusumbo

    அருமையான விடயம் நிச்சயம் செய்யப்படவேண்டியது. ஆரம்பிப்பதற்கு ஒருவர் வேண்டுமே தொடங்கியாயிற்று ஓடு– நிச்சயம் ஓடும்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இரண்டு சகாப்ததிற்கு மேலாக புலம்பெயர்மக்கள் ஏராளமான நிதிஉதவிகளை ஈழம்வாழ்மக்களுக்கு அள்ளிக்கொடுத்தும் அவை புறக்குடத்து நீர்ராயின அதுவும் அல்லாமல் துன்பத்தையே அளித்திருக்கின்றன.

    கல்வியும் தாகம் பசி போன்றதே! மனம்கனிந்த பாராட்டுக்கள் தங்கள் சேவை கருதி.எல்லா முயற்சிகளும் வெற்றிகிட்ட எனது வாழ்த்துக்கள்!!!

    புதியதோர் உலகம் செய்வோம்……

    Reply
  • arul
    arul

    கஸ்டப்படும் மக்களுக்கு உதவும் மனப்பான்மை நல்லது. ஆனால் “ஏடு” குழுவினரை என்னால் மனப்பூர்வமாக இங்கு பாராட்ட முடியவில்லை. ஏனெனில் ஏற்கனவே பல அமைப்புகள் இருக்கும் நிலையில் புதிதாக தனியாக ஏன் “ஏடு” அமைப்பு தொடங்கப்படுகிறது? அல்லது இயங்குகிறது? ஏன் இவர்களால் ஏற்கனவே உள்ள அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கமுடியவில்லை? மேலும் இதன் பொறுப்பாளர்கள் யார் என்பதையும் குறிப்பாக லண்டனில் இதற்கு யார் பொறுப்பு என்பதையும் வெளிப்படுத்தி அவர்களிடம் இருந்து மேலே நான் கேட்ட வினாவிற்குரிய பதிலை “தேசம்” பெற்று தரவேண்டும் என விரும்புகிறேன்.

    சுனாமி காலத்தில் பல அமைப்புகள் திடீரென முளைத்து நிதி சேகரிப்புகள் செய்தன. ஆனால் அவை உரிய வழியில் உரிய மக்களுக்கு சேரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதேபோல் தற்போதும் பல அமைப்புகள் தோன்றுகின்றன. இவையின் நம்பகத்தன்மையை எவ்வாறு இனங்காண்பது?

    Reply
  • palli
    palli

    மாற்று கருத்து இன்றி செயல்படுவோம்; கல்வி இருந்து விட்டால் போதும் அவர்கள் இந்த உலகில் தன்னம்பிக்கையுடன் வாழ; பாராட்டும்
    பல்லியின் ஒத்துழைப்பும் என்றும் உண்டு;

    Reply
  • Kumaran
    Kumaran

    பொய்யான போராட்டம் ஒன்றினால் ஒரு இளம் தலைமுறைக்கு கல்வி அறிவே மறுக்கபட்ட நிலையில் இனி வரும் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு முழு மூச்சுடன் பங்களிப்போம்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    நேற்றய ஏடு அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஏடு பற்றியும், ஏடு எப்படி செயற்படுகின்றது, ஏடு என்ன விடயங்களை முதன்மைப்படுத்தி செய்கின்றது போன்ற பல விடயங்களை, ஏடு அமைப்பாளர்கள் தமது நீண்ட விளக்க உரைகள் மூலம் தெரியப்படுத்தினர் – இந்த நீண்ட விளக்கஉரை அங்குரார்ப்பணக் கூட்டத்தில் மிக முக்கிய நிகழ்வாக நடாத்தப்பட்டு கூட்டத்திற்கு வந்தவர்களை இன்ற விழாவின் முக்கிய நோக்கத்தை வலியுறுத்தி இருந்தது இந்த விளக்க உரைக்கு முன்பாக பாடப்பட்ட பாட்டும் குழந்தைகள் பற்றிய ஒளிக்காட்ச்சியும் பின்னர் தெரிவிக்கப்பட்ட விளக்கங்கள் சபையில் இருந்தவர்களை ஒன்றிணைய உதவியது.

    இந்த மாதிரியான அமைப்புக்கள் பல உருவாக்கப்பட்டு எமது குழந்தைகளுக்கும் விதவைகளுக்கும் உதவிகள் செய்ய வேண்டியுள்ளது அவசியமானது.

    Reply