ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளால் வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு ஒரு போலியான குற்றச்சாட்டாகுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத வகையில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் நிலவுவதாக மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அங்கு அவ்வாறான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. அவ்வாறு அச்சுறுத்தல்கள் இருந்தால் பொலிஸாரிடம்; முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் இதுவரை எவ்வித முறைப்பாடும் செய்யப்படவில்லை.
வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வாய்ந்த ஒருவராக ஐக்கிய தேசியக் கட்சி டொக்டர் ஜயலத் ஜயவர்தனாவை நியமித்துள்ளது. அவரிடம் ஆயுதக்கழுக்களின் இடையூறுகள் பற்றி விசாரித்த போது முறைப்பாடுகள் எதுவும் இல்லை என்றே தெரிவிக்கின்றார். எனவே ஆயுதக்குழுக்களினால் தடை ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உன்மையும் இல்லை என்பது இதன் மூலம் புலனாகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தா