வவுனியா நகரில் பாதுகாப்புக் கெடுபிடிகள் தளர்வு; சில இடங்களில் காவலரண்கள் நீக்கம்

வவுனியா நகரில் இதுவரை காலமுமிருந்த பாதுகாப்பு கெடுபிடிகளில் தற்போது சற்றுத் தளர்வேற்பட்டுள்ளது. நகரில் சில இடங்களிலிருந்த காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன. தேக்கம்காடு முதல் மூன்று முறிப்பு வரையில் மேற்கு புறத்தே பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலிகள் அகற்றப்பட்டு பாரிய குழிகளும் மூடப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது. நகரசபைத் தேர்தலை முன்னிட்டு சில பாதுகாப்பு செயல்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

வவுனியாவிலிருந்து தனிப்பட்ட தேவையின் பொருட்டு கொழும்பிற்கு செல்ல பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து மதவாச்சி ஊடான வாகன போக்குவரத்திற்கும் அனுமதி பெறலாம். அத்துடன், மதவாச்சி சோதனை நிலையத்தின் ஊடாக போக்குவரத்திலும் சில தளர்வுகள் அடுத்த சில தினங்களில் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *