சரத் பொன்சேகா மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

new_appointment.jpgஇலங்கை இராணுவத்தின் அதிஉயர் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இன்று உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும் வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய புதிய இராணுவத் தளபதியாகவும் கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டனர்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இந்த நியமனத்தின்படி  இராணுவத் தளபதி பதவியிலிருந்து நேற்று பதவி விலகிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது புதிய பதவிக்கான கடமைகளை இன்று பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 19ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *