January

January

மதுபான சாலைகளுக்கு எதிராக விளக்குமாறுடன் போராட்டித்தில் குதித்த பெண்கள் !

மதுபான சாலைகளுக்கு எதிராக விளக்குமாறுடன் போராட்டித்தில் குதித்த பெண்கள் !

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய பொதுமக்கள் பெரிய நீலாவணை பகுதியில் புதிய மதுபானசாலை வேண்டாம் என விளக்குமாற்றுடன் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சியில் மதுபோதையில் வந்தத டிப்பர்சாரதி மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பத்தினை மோதி இருவர் மரணித்ததற்கு முன் தினம் கிளிநொச்சியில் மதுபாண சாலைகளை மூடச்சொல்லி ஒரு போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை தெரிந்ததே.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாங்கள் போராட்டம் மேற்கொண்ட போது அன்று திறக்கப்பட இருந்த மதுபான சாலையை அப்பொழுது மூடினார்கள். ஆனால் இப்பொழுது மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.எனவே எங்களுக்கு இவ்வாறான மதுபானசாலை வேண்டாம் என நீலாவணையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு முன்னேற்பாடாக 500 பேருக்கு மேற்பட்ட நீலாவணை பொதுமக்கள் ஒன்றுகூடி நீலாவணையில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார் கோடீஸ்வரன். கடந்த அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதாக தற்போதுள்ள அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

பா.உ கோடீஸ்வரனின் கருத்துக்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கம் புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை, வழங்கப் போவதுமில்லை. சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். அனுமதிப்பத்திரம் சட்டரீதியில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அது சட்டரீதியான ஆவணமாகும். பலவந்தமான முறையில் செயற்பட முடியாது என தெரிவித்தார்.

வடக்கில் மாதம் மூன்று படுகொலைகள் – சமூக பிறழ்வுகள் அதிகரிக்கின்றது !

வடக்கில் மாதம் மூன்று படுகொலைகள் – சமூக பிறழ்வுகள் அதிகரிக்கின்றது !

 

கடந்த ஆண்டில் வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். , இதன்படி வடக்கில் மாதாந்hம் 3 படுகொலைக் அல்லது பத்து நாட்களுக்கு ஒரு படுகொலை நிகழ்கின்றது.

அத்தோடு, 255 கொள்ளைகள், 501 திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 70 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்தார்.

ஏன் பலாலியில் தான் விமான நிலையம் வரவேண்டும் ? யாழ்ப்பாணத்துக்கு வெளியே சிந்திக்க மாட்டார்களோ ? 

ஏன் பலாலியில் தான் விமான நிலையம் வரவேண்டும் ? யாழ்ப்பாணத்துக்கு வெளியே சிந்திக்க மாட்டார்களோ ?
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் முன்னெடுப்பதற்கு 114 ஹெக்டேயர் நிலப் பரப்பு சுவீகரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர். கடலை நோக்கியதாக அந்த விஸ்தரிப்பு அமையும் எனவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.
இந்நிலையில், காணிகளை சுவீகரிப்பதற்கு முன்னதாக 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்துக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளுக்கு இன்னமும் இழப்பீடு வழங்கப்படவில்லை என ஆளுநர் சுட்டிக்காட்டினார். தற்போதைய பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்கு இழப்பீடு முதல்கட்டமாக வழங்கிய பின்னரே தற்போது தேவைப்படும் மேலதிக காணிகளுக்காக சுவீகரிப்பை ஆரம்பிக்கலாம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் விரிவாக்கத்தின்போது இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகளவில் கிடைக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
அதே சமயம் யாழ்ப்பாணம் வடமாகாணத்திலேயே சனத்தொகை அடர்த்தி உள்ள மாவட்டமாகவும் பலாலி ஒரு விவசாயத்துக்குகந்த பூமியாக உள்ளது. அதனால் விவசாய நிலங்களை இவ்வாறான விஸ்தரிப்புகளுக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்திலும் விமான நிலையத்தை விஸ்தரிக்கும் வகையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த வன்னி நிலப்பரப்பில் புதிய விமானத்தளத்திற்கான இடத்தை பார்ப்பது பொருத்தமானது எனச் சூழலியலாளர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை கிளி அறிவியல் நகருக்கு நகர்த்தியது போல பலாலி விமான நிலையத்தைக் கைவிட்டு வன்னி நிலப்பரப்பில் புத்தம் புதிய நவீன விமான நிலையத்தை அமைப்பதே பொருத்தமானதாக அமையும் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

“இலங்கை தமிழரின் பெருமைக்கும் – இருமாப்புக்கும் உரிய யாழ்ப்பாணம்” – தமிழரசுக்கட்சி தலைவர் சி.வி.கே ! 

“இலங்கை தமிழரின் பெருமைக்கும் – இருமாப்புக்கும் உரிய யாழ்ப்பாணம்” – தமிழரசுக்கட்சி தலைவர் சி.வி.கே !

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய துணை தூதுவர் சாய்முரளியைச் சந்தித்து தமிழரசுக் கட்சி சார்பில் கட்சிப் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.

இக்கடிதத்தில் “இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான “யாழ்ப்பாணம்” என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும். “யாழ்ப்பாணம்” என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம். இனத்தின் அடையாளம் ஆகும். எனவே இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்” என சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம் திருவள்ளுவரின் பெயரில் மாற்றப்பட்டதும் – அதனை இந்திய பிரதமர் தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்கும் நோக்குடன் தமிழை பெருமைப்படுத்துகிறோம் என ட்வீட் செய்திருந்தார்.

சி.வி.கே சிவஞானம், ஒருபடி மேலே போய் யாழ்ப்பாணத்தவர்களின் மேட்டுக்குடி அரசியலை, இலங்கை வாழ் ஏனைய தமிழர்களின் தலையில் கட்டிவிடும் வழமையான ஓர் செயலை தன் கடிதத்தின் மூலம் நகர்த்தியுள்ளார்.

 ‘நான் அவன் இல்லை’ அர்ச்சுனா – லோச்சன ஆனதால் வைத்தியருக்கு ஆப்புத் தவறியது

 ‘நான் அவன் இல்லை’ அர்ச்சுனா – லோச்சன ஆனதால் வைத்தியருக்கு ஆப்புத் தவறியது !
இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள மனுவில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சாரதி அனுமதிப்பத்திரத்தில் அர்ச்சுனா இராமநாதன் என்ற பெயரே உள்ளதாக அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், உரிய சந்தேக நபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

வீடும் நாடும் சுத்தமாக இருக்க வேண்டும்: ஜனாதிபதி அனுரவின் கிளீன் ஶ்ரீ லங்கா திட்டத்திற்கு தமிழரசின் ஸ்ரீநேசன் !

வீடும் நாடும் சுத்தமாக இருக்க வேண்டும்: ஜனாதிபதி அனுரவின் கிளீன் ஶ்ரீ லங்கா திட்டத்திற்கு தமிழரசின் ஸ்ரீநேசன் !

இனவாதம், மதவாதம், மொழிவாதம் மற்றும் பிரதேசவாதம் ஆகியவற்றால் நாடு அசுத்தமாக்கப்பட்டு உள்ளது. இவை கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரமாக காணப்பட்டது. ஆனால் தற்போது அவை தோல்வியடைந்துள்ளது. சுத்தமான நாட்டை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின், சுத்தமான வீட்டை விரும்பும் கட்சிக்காரர்கள் என்ற வகையில் அதை ஆதரிக்க தயாராக இருக்கிறோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஞானமுத்து ஸ்ரீநேசன் மேலும் உரையாற்றிய போது, கிளீன் ஶ்ரீ லங்கா என்ற எண்ணக்கரு சிறந்த விடயமாகும். வீட்டை சுத்தமாக வைத்திப்பதற்கு நாம் விரும்புவதை போன்று நாட்டை சுத்தமாக வைத்திருக்கவும் விரும்புகின்றோம். அந்த வகையில் இந்த கிளீன் ஶ்ரீலங்கா திட்டம் நல்ல விடயமே. எமது நாடு இலஞ்சம், ஊழல், மோசடி, திருட்டு மற்றும் குற்றச்செயல்கள் என பல முறையற்ற செயற்பாடுகளினால் சூழ்ந்துள்ளது. கடந்த 77 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டில் சுத்தத்தை ஏற்படுத்தவில்லை என்பது கிளீன் ஶ்ரீலங்கா என்ற திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.

இதனால் தூய்மையான விடயங்களை நாங்கள் ஆதரித்தே ஆக வேண்டும். ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீண் விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு அனைவரும் விரும்புவர் என்றே நம்புகின்றோம். என அவர் தெரிவித்தார்.

வடக்கில் இடம்பெறும் நினைவேந்தல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

வடக்கில் இடம்பெறும் நினைவேந்தல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும். நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவது எமது நோக்கம் அல்ல. என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

“உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது. ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது என தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு – தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன எனவும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

யானைகளைப் பார்க்க சுற்றுலா வருகின்றனர் ! ஆனால் நாங்கள் யானைகளை அழிக்கின்றோம் ! ?

யானைகளைப் பார்க்க சுற்றுலா வருகின்றனர் ! ஆனால் நாங்கள் யானைகளை அழிக்கின்றோம் ! ?

கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 24 லட்சமாக எகிறியிருந்தது. அவர்கள் இந்த அழகிய தீவையும் இங்குள் யானைகளையும் பார்க்கவே வருகின்றனனர். ஆனால் கடந்த ஆண்டு 386 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது .

பாதுகாப்பு திணைக்களத்தின் தகவல்களின் படி, அதிகப்படியாக 81 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், 56 யானைகள் மின்சாரம் தாக்கியும் , உயிரிழந்துள்ளன .

இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் , யானைகளின் தாக்குதல்களினால் 154 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது .

இலங்கையின் யானைகள், IUCN இனால் 1986 ஆம் ஆண்டிலிருந்து அழிந்து போகும் அபாயமுள்ள விலங்குகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு உள்ளமையும் கவனிக்கத்தக்கது.

விமான நிலையத்தில் பா உ சிறிதரனுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கா மன வருத்தம் !

விமான நிலையத்தில் பா உ சிறிதரனுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கா மன வருத்தம் !

பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பா.உ. சிறீதரன்; அண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்தபோது, குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி அவரின் பயணத்தை தடை செய்ய முற்பட்டதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி இருந்ததுடன் அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும் வாதிட்டிருந்தார்.

குறித்த விடயத்துக்கு பதிலளித்த சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்க, இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறிதரன் எம்.பி.க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் தெரிவித்த சபைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன் அங்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவானது எனவும் குறிப்பிட்டார்.

வடக்கை கைவிடமாட்டோம் ! திறமையுள்ளவர்களுக்கும் வேலை செய்ய விரும்புபவர்களுக்கும் வேலை வரும் ! ஜனாதிபதி அனுரகுமார

வடக்கை கைவிடமாட்டோம் ! திறமையுள்ளவர்களுக்கும் வேலை செய்ய விரும்புபவர்களுக்கும் வேலை வரும் ! ஜனாதிபதி அனுரகுமார

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் ஶ்ரீலங்கா , கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க உடன்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகியவற்றில் புதிய திட்டங்களுக்கு உதவி வழங்குவது குறித்து இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய அபவிருத்தி திட்டங்களில் வடக்கின் அபிவிருத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் வடக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நீர் வசதிகளை வழங்கவும், வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்தார்.