2025

2025

புலிகள் – கருணா பிளவின் பின் நின்ற நோர்வே புலனாய்வு முகவரின் நூல் வெளியீட்டில் கஜேந்திரகுமார் !

புலிகள் – கருணா பிளவின் பின் நின்ற நோர்வே புலனாய்வு முகவரின் நூல் வெளியீட்டில் கஜேந்திரகுமார் !

புலிகள் – கருணா பிளவின் இழப்புகள், புலிகளின் முடிவு பற்றிய ஆய்வுகள், மதிப்பீடுகள் நடந்துகொண்டிருக்கும் 20 ஆண்டுகள் இம்மாதம் நினைவு கூரப்படுகின்றது. இந்தப் பிளவின் பின்னணியில் நோர்வே புலனாய்வுப் பிரிவினர் இருந்தது அனைவரும் அறிந்த இரகசியம். அதனை தேசம்நெற் 2004 முதல் எழுதி வந்திருக்கின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனையும் பொட்டம்மானையும் தங்களால் இணங்க வைக்க முடியாத நிலையில் அவர்களை அணுகவே முடியாத நிலையில் கருணாவை புலனாய்வு முகவர்கள் அணுகினர்.

அவர்களில் ஒருவர் தான் இலங்கையில் பிறந்து சிறுவயதிலேயே நோர்வேக்குப் புலம்பெயர்ந்து வாழும் நோர்வே பிரஜையான மரியநாயகம் நியூட்டன்.

இவர் நல்ல வசதிபடைத்த செல்வந்தரான நோர்வேஜிய பெண்ணைத் திருமணம் செய்து வாழ்கின்றார். உளவியல் நிபுணரும் கூட. இவர் கருணா பிரிந்து செல்வதற்கு முன் கருணா பிரிந்து செல்வதற்கு வேண்டிய கருத்தியலை கருணாவுக்குள் விதைத்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

இவர் எழுதிய ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு ஏப்ரல் 19 நேற்றுக் காலை யாழ். மாவட்ட செயலகம் அருகிலுள்ள வை. எம். சி.ஏ. மண்டபத்தில் யாழ். கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் என். இன்பம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை யாழ். கிராமிய உழைப்பாளர் சங்கம்இ தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளரும் உலக மீனவ சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஹேமன் குமார, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தனர். வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ. அன்னராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ. கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மரியநாயகம் நியூட்டன் அறகலய போராட்ட காலத்தில் இலங்கையில் தங்கியிருந்து அப்போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டவர். அதற்காக அவர் பின்னர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இலங்கை வந்துள்ள மரியநாயகம் நியூட்டன் முன்னணி சோசலிசக் கட்சியோடு இணைந்து செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரியநாயகம் நியூட்டனைப் போன்று நோர்வே புலனாய்வுப் பிரிவோடு இணைந்து செயற்படுவதாக பெருமையுடன் கூறிவருபவர் ‘ஊத்தை சேது’ என கருணா பிரிவின் பின்னணியில் செயற்பட்ட லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளர் ஆர் ஜெயதேவனால் விமர்சிக்கப்பட்டு வந்த நடராஜா சேதுரூபன்.

அண்மையில் தேசம்நெற்றைத் தொடர்புகொண்ட அவர் ஜேவிபி அரசு நீண்டகாலம் நிலைப்பதற்கு அனுமதிக்கப்படாது என்ற கருத்தை வெளியிட்டு இருந்தார். இவர் இலங்கைக்குச் சென்றிருந்த போது கைது செய்யப்பட்டு பலமாத காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

மரியநாயகம் நியூட்டன் இலங்கை விடயங்களில் மட்டுமல்லாமல் வேறு புலனாய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இஸ்ரேலின் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இவரது குழுவினர் ஈடுபட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது.மரயநாயகம் நியூட்டனின் குழுவினர் ஹிஸ்புல்லா போராளிகள் மீது பேஜர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதிகளில் அங்கு தங்கியிருந்துள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோர்வே சுத்தமான சுவாமிப்பிள்ளை வேடம் போட்டபோதும் அந்நாடு அமெரிக்காவின் ஒரு மென்மையான முகமாகவே பார்க்கப்படுகின்றது. தற்போது மரியநாயகம் நியூட்டன் இலங்கையில் நிற்பதன் நோக்கம் என்ன என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதது. முன்னனி சோசலிசக் கட்சியூடாகவும் தற்போது ஜேவிபிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த முனையில் அமெரிக்கத் தூதுவர் யூலி சங் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு நெருங்கிய உறவைக் கொண்டுள்ளார். நியூட்டன் தன்னுடைய நூல்வெளியீட்டை பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை வைத்து வெளியிட்டுள்ளார். நாடு உள்ளுராட்சி சபைத் தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது.

இலங்கை ஒரு குட்டித்தீவாக இருந்தாலும் அதனை ஏகாதிபத்திய நாடுகள் சமாதானமாக நிம்மதியாக வாழ அனுமதிக்கப் போவதில்லை என்பதையே இவை கட்டியம் கூறுகின்றது.

புலிகளுக்குள்ளும் மேட்டுக்குடி மனோநிலை இருந்தது. கிழக்குப் போராளிகள் கீழாக நடத்தப்பட்டனர் ! யாழ் மேட்டுக்குடி மனோநிலை இன்றும் தலைவரித்தாடுகின்றது !

புலிகளுக்குள்ளும் மேட்டுக்குடி மனோநிலை இருந்தது. கிழக்குப் போராளிகள் கீழாக நடத்தப்பட்டனர் ! யாழ் மேட்டுக்குடி மனோநிலை இன்றும் தலைவரித்தாடுகின்றது !

இடதுசாரிச் சிந்தனையாளரர், அரசியல், சமூக செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்

தெருவில், சந்தியில் கதைப்பதை பாராளுமன்றத்தில் கதைப்பது தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத்தராது !

தெருவில், சந்தியில் கதைப்பதை பாராளுமன்றத்தில் கதைப்பது தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத்தராது ! தனித்து நின்று எதையும் சாதிக்கவும் முடியாது ! சண்டைக்கு இழுப்பது திறமையல்ல !

சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் சங்கு சந்திரகுமாருடனான நேர்காணல்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

இலங்கை சந்தையில் இன்று சடுதியாக தங்கத்தின் விலை மிக அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று 22 கரட் தங்கத்தின் விலை 240,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 262,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.

கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் 22 கரட் தங்கத்தின் விலை 167,000 ரூபாவாகவும், இன்றைய விலையுடன் ஒப்பிடும் போது 73,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது எனவும், 24 கரட் தங்கத்தின் விலை 177,000 ரூபாவாக காணப்பட்டதுடன் இன்றைய விலையுடன் ஒப்பிடும் போது 85,000 ரூபாவினால் அதிகரித்து உள்ளது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் .

இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தீர்வை வரியினால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் மற்றும் தங்க முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முயற்சி செய்வதே தங்கத்தின் விலை அதிகரித்ததற்கு காரணம் என பொருளியல் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

காதலன் இறந்த செய்தி கேட்டு காதலி தற்கொலை !

காதலன் இறந்த செய்தி கேட்டு காதலி தற்கொலை !

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் நேற்றைய தினம் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த இளைஞன் குளத்தில் தாமரைப்பூ பறிக்கும் போது உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பாதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்று விசாரணை செய்த போது இச் சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை பிரதான வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞனின் மரண செய்தியை அறிந்த வரணி பகுதியை சேர்ந்த காதலி வீட்டிலே தற்கொலை செய்து உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

தந்தையின் டிப்பரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை மரணம் !

தந்தையின் டிப்பரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை மரணம் !

ஏப்ரல் 18 கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குழந்தை, தந்தை செலுத்திய டிப்பரின் சில்லுக்குள் சிக்கியே உயிரிழந்துள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் உடற்கூற்று பரிசோதனைகளின் பின் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்ற சம்பவம் ஏப்ரல் 13 இரத்தினபுரி – பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ருக்மல்கந்துர பிரதேசத்தில் 19 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை இயக்க முயன்ற போது லொறியானது பின்னோக்கிப் பயணித்துள்ளது எனவே இதன்போது அங்கு இருந்த குழந்தை லொறியின் சக்கரத்தின் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலவேளை 5 நாட்களுக்கு முன் நிகழ்ந்த இந்த விபத்தை அறிந்திருந்தால் அம்பாள் குளக் குடும்பத்தினர் சற்றுக் கவனம் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. வாகனங்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் குழந்தைகள் இருக்கும் பட்சதித்தில் மேலதிக கவனத்தோடு தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் விபத்துக்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்ஜாக்கிரதையோடு எடுக்க வேண்டும். இது ஒரு வகையில் பெற்றோரின் அசட்டையீனம் கவனக்குறைவும் தான்.

ட்ரம்பின் அடாவடியிலிருந்து யுனிசெப்பும் தப்பவில்லை !

ட்ரம்பின் அடாவடியிலிருந்து யுனிசெப்பும் தப்பவில்லை !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகளுக்கான மனிதாபிமான உதவியை குறைத்துள்ளமையினால் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 2026 ஆம் ஆண்டில் யுனிசெப் திட்டங்கள் 20 சதவீதம் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைப்பான யுனிசெப்பின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் யுனிசெப்பிற்கு 8.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இவ் ஆண்டு 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஐ.நா. அமைப்புகள் உட்பட மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி அமைப்புகள் கடந்த சில வாரங்களாக நிதி நெருக்கடிக்கு மத்தியில் இருப்பது தெளிவாகியுள்ளது. அதிலிருந்து யுனிசெப்பும் தப்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடரும் கரண்ட் கம்பமும் கரண்ட் பிரச்சினையும்: கள்ளக் கரண்டில் தன்குடும்பத்தை முன்னேற்றிவிட்டார் பா உ சிறிதரன்: பா உ இளங்குமரன் குற்றச்சாட்டு

தொடரும் கரண்ட் கம்பமும் கரண்ட் பிரச்சினையும்: கள்ளக் கரண்டில் தன்குடும்பத்தை முன்னேற்றிவிட்டார் பா உ சிறிதரன்: பா உ இளங்குமரன் குற்றச்சாட்டு

‘இளங்குமரன் கரணட் கம்பம் என்றால் நாங்கள் கரண்ட். கரண்ட் அடிச்சால் தாங்கமாட்டார் என்று பா உ சிறிதரன் விட்டது கொலை மிரட்டல் எனத் தெரிவிக்கின்றார் பா உ இளங்குமரன். சிறிதரன் (கள்ளக்) கரண்டில் தன் குடும்பத்தை மட்டும் ஒளிமயமாக்கிவிட்டார் மக்களிடம் திருடிவிட்டார் எனக் குற்றம்சாட்டினார் பா உ இளங்குமரன். ஏப்ரல் 18இல் டான் தொலைக்காட்சியின் எதுசரி எது பிழை நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் பாராளுமன்றம் வரும்போது யாழ்ப்பாணத்தில் ஒரு நிலமும் இல்லாத சிறிவாத்திக்கு இப்போது யாழ்ப்பாணத்தில் எவ்வளவு காணி இருக்கின்றது. 24 மணி நேர சுப்பர்மார்க்கற் இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

இன்னும் சில விடயங்களை ஹோம்வேர்க் செய்து தேடாமல் சிறிதிரனின் மகன் கொழும்பில் கற்பதாகத் தெரிவித்தார். அவரின் இரு பிள்ளைகள் லண்டனில் கல்வி கற்பதை இளங்குமரன் அறிந்திருக்கவில்லை. மேலும் சிறிதரனின் மகன் யாழ் இந்துக்கல்லூரியில் படிக்கின்ற போது வாள் கொண்டு வெட்டியதையும் இளங்குமரன் சுட்டிக்காட்டியிருந்தார். கரண்ட் கம்பம் – கரண்ட் பிரச்சினையைத் தொடர்ந்து சிறதரனுக்கும் – இளங்குமரனுக்கும் இடையே நேரடி தர்க்கம் இடம்பெற்று வருகின்றது.

பா உ சிறிதரனின் பிரச்சாரப் பிரங்கியான அலன், 16 சிறார்களைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்த விடயத்தை சிறிதரன் காப்பாற்ற முயன்ற போது இளங்குமரன் விடயத்தை கொழும்புக்குத் தெரியப்படுத்தி இருந்தார். அலனை அடுத்த சில மணி நேரங்களில் கைது செய்ய அழுத்தம் வழங்கியமையே சிறிதரனின் கொந்தளிப்புக்கு காரணம் என்கிறார் பா உ இளங்குமரன்.

பிள்ளையான் கைது விவகாரம்: உண்மையை மறைத்து அனுதாபம் தேடும் முயற்சி – அமைச்சர் ஹந்துனெத்தி சாடல்

பிள்ளையான் கைது விவகாரம்: உண்மையை மறைத்து அனுதாபம் தேடும் முயற்சி – அமைச்சர் ஹந்துனெத்தி சாடல்

பிள்ளையான் கைது செய்யப்பட்டமை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக அல்ல, முன்னாள் உபவேந்தர் ஒருவரை கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிள்ளையான் தொடர்பில் தவறான புரிதலை உருவாக்க உதய கம்மன்பில முயற்சிக்கிறார் என்றும், கம்மன்பிலவின் கருத்துகள் உண்மையை மறைத்து அனுதாபம் ஈர்க்கும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பிள்ளையான் 2015 முதல் 2020 வரை சிறையில் இருந்தவர் என நினைவுபடுத்திய அவர், 2019 குண்டுத் தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லையெனில் அதை அரசாங்கமே தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

பிள்ளையான் தேசிய வீரன் என கூறும் கம்மன்பிலவை விமர்சித்த ஹந்துனெத்தி, “உதய கம்மன்பில சற்று அமைதியாக இருக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

 

உள்ளுராட்சி அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரியா

உள்ளுராட்சி அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரியா

தினசரி 1,000 கடிதங்களைப் பெறுவதாகவும், அதில் 900க்கும் மேற்பட்டவை கிராம மட்ட பிரச்சனைகள் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரியா தெரிவித்துள்ளார். ஏப்ரல் 16ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உள்ளுராட்சி மற்றும் நகர சபைகள் சரியாக செயல்பட்டால் இவை அனைத்தும் தீர்க்கப்படலாம் என்றார்.

“நான் செய்ய வேண்டிய வேலையை செய்ய முடியாத அளவுக்கு இந்தக் கடிதங்கள் வருகின்றன. ஆனால் அவை எல்லாம் கீழ்மட்டத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சனைகள். அதனால் தான் உள்ளுராட்சி அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மே 6ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளுராட்சி தேர்தல் நாட்டின் நிர்வாக அமைப்பை மேம்படுத்தும் முக்கிய மாற்றத்துக்கான ஆரம்ப கட்டமாக இருப்பதாகவும், இதன் மூலம் மேலிருந்து கீழ்வரை ஒரே நோக்கத்துடன் செயல்படும் அமைப்பை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.