ட்ரம்பின் அடாவடியிலிருந்து யுனிசெப்பும் தப்பவில்லை !
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகளுக்கான மனிதாபிமான உதவியை குறைத்துள்ளமையினால் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 2026 ஆம் ஆண்டில் யுனிசெப் திட்டங்கள் 20 சதவீதம் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைப்பான யுனிசெப்பின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் யுனிசெப்பிற்கு 8.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இவ் ஆண்டு 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் ஐ.நா. அமைப்புகள் உட்பட மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி அமைப்புகள் கடந்த சில வாரங்களாக நிதி நெருக்கடிக்கு மத்தியில் இருப்பது தெளிவாகியுள்ளது. அதிலிருந்து யுனிசெப்பும் தப்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.