தந்தையின் டிப்பரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை மரணம் !

தந்தையின் டிப்பரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை மரணம் !

ஏப்ரல் 18 கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குழந்தை, தந்தை செலுத்திய டிப்பரின் சில்லுக்குள் சிக்கியே உயிரிழந்துள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் உடற்கூற்று பரிசோதனைகளின் பின் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்ற சம்பவம் ஏப்ரல் 13 இரத்தினபுரி – பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ருக்மல்கந்துர பிரதேசத்தில் 19 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை இயக்க முயன்ற போது லொறியானது பின்னோக்கிப் பயணித்துள்ளது எனவே இதன்போது அங்கு இருந்த குழந்தை லொறியின் சக்கரத்தின் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலவேளை 5 நாட்களுக்கு முன் நிகழ்ந்த இந்த விபத்தை அறிந்திருந்தால் அம்பாள் குளக் குடும்பத்தினர் சற்றுக் கவனம் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. வாகனங்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் குழந்தைகள் இருக்கும் பட்சதித்தில் மேலதிக கவனத்தோடு தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் விபத்துக்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்ஜாக்கிரதையோடு எடுக்க வேண்டும். இது ஒரு வகையில் பெற்றோரின் அசட்டையீனம் கவனக்குறைவும் தான்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *