பிள்ளையான் கைது விவகாரம்: உண்மையை மறைத்து அனுதாபம் தேடும் முயற்சி – அமைச்சர் ஹந்துனெத்தி சாடல்
பிள்ளையான் கைது செய்யப்பட்டமை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக அல்ல, முன்னாள் உபவேந்தர் ஒருவரை கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிள்ளையான் தொடர்பில் தவறான புரிதலை உருவாக்க உதய கம்மன்பில முயற்சிக்கிறார் என்றும், கம்மன்பிலவின் கருத்துகள் உண்மையை மறைத்து அனுதாபம் ஈர்க்கும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பிள்ளையான் 2015 முதல் 2020 வரை சிறையில் இருந்தவர் என நினைவுபடுத்திய அவர், 2019 குண்டுத் தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லையெனில் அதை அரசாங்கமே தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
பிள்ளையான் தேசிய வீரன் என கூறும் கம்மன்பிலவை விமர்சித்த ஹந்துனெத்தி, “உதய கம்மன்பில சற்று அமைதியாக இருக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.