உள்ளுராட்சி அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரியா

உள்ளுராட்சி அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரியா

தினசரி 1,000 கடிதங்களைப் பெறுவதாகவும், அதில் 900க்கும் மேற்பட்டவை கிராம மட்ட பிரச்சனைகள் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரியா தெரிவித்துள்ளார். ஏப்ரல் 16ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உள்ளுராட்சி மற்றும் நகர சபைகள் சரியாக செயல்பட்டால் இவை அனைத்தும் தீர்க்கப்படலாம் என்றார்.

“நான் செய்ய வேண்டிய வேலையை செய்ய முடியாத அளவுக்கு இந்தக் கடிதங்கள் வருகின்றன. ஆனால் அவை எல்லாம் கீழ்மட்டத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சனைகள். அதனால் தான் உள்ளுராட்சி அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மே 6ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளுராட்சி தேர்தல் நாட்டின் நிர்வாக அமைப்பை மேம்படுத்தும் முக்கிய மாற்றத்துக்கான ஆரம்ப கட்டமாக இருப்பதாகவும், இதன் மூலம் மேலிருந்து கீழ்வரை ஒரே நோக்கத்துடன் செயல்படும் அமைப்பை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *