2010

2010

இலவச பாட நூல் விநியோகம் இன்று – ஹோமாகம புதிய களஞ்சியசாலையில் வைபவம்

books.jpg2011ம் கல்வியாண்டுக்குரிய அரசாங்கப் பாடசாலைகளுக்கான இலவச பாடநூல் விநியோகம் ஹோமாகமையில் இன்று ஆரம்பமாகுமென கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார். இலவச பாடநூல்களுக்காக அரசாங்கம் 2700 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சகல அரச பாடசாலைகள், பிரிவேனாக்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்காக 25 மில்லியன் பாட நூல்கள் அச்சிடப்பட்டு வருவதுடன் இவை 364 வகையான பாடநூல்களாகு மெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பணிப்பாளரும் பிரதி பரீட்சைகள் ஆணையாளருமான புஷ்பகுமார தெரிவிக்கையில் :- கல்வி வெளியீட்டுத் திணைக்களமானது இம்முறை இலவச பாடநூல்களைக் களஞ்சியப்படுத்துவதற்காக ஹோமாகமயில் புதிய நூல் களஞ்சியசாலையொன்றை நிர்மாணித்துள்ளது. பாடநூல்கள் அச்சிடப்படும் வேளையிலேயே பாடநூல்கள் விநியோகப் பணிகளும் ஆரம்பமாகியுள்ளது.

கல்வியமைச்சானது சலுசல நிறுவனத்தி ற்குச் சொந்தமான களஞ்சிய சாலையிலேயே பாடநூல்களைக் களஞ்சியப்படுத்தி வந்துள்ளது. இம்முறை இரண்டரைக் கோடி ரூபா செலவில் ஹோமாகமையில் புதிதாக நிர்மாணிக்கப்ப ட்டுள்ள களஞ்சிய சாலையில் பாடநூல்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு அங்கிருந்து விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளன.

இக்களஞ்சியசாலை முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பின்னர் களஞ்சிய சாலைகளுக்காக செலவிடப்படும் பல இலட்ச ரூபாய்களை மீதப்படுத்த முடியும் என கல்வியமைச்சு தெரிவிக்கின்றது. இன்று 25ம் திகதி ஆரம்பமாகும் பாடநூல் விநியோக நடவடிக்கைகள் டிசம்பர் 12ம் திகதியுடன் நிறைவுறும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வட பகுதி கடலில் சிறிய தாழமுக்கம்

இலங்கையின் வட பகுதிக் கட லில் இந்தியாவுக்கு அருகே சிறிய தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை தாய்லாந்து கடலில் சூறாவளி உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இவற்றின் விளைவாக அடுத்து வரும் சில தினங்களுக்கு இலங்கையில் கடும் காற்று வீசும் எனவும் அவர் குறிப்பிட்டார்

வட வகுதி கடலில் உருவாகியு ள்ள சிறிய தாழமுக்கம் மற்றும் தாய் லாந்து கடலில் காணப்படும் சூறா வளி என்பனவற்றின் காற்று வீசும் திசை இலங்கை ஊடாக அமைந்திருப்பதாலேயே காற்றின் வேகம் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படும் எனவும் அவர் கூறினார்.

இலங்கையின் வட பகுதி கடலில் 300 – 400 கிலோ மீட்டர் தூரத்தில் இச் சிறிய தாழ்முக்கம் உருவாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு எதுவிதப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையைக் கண்டித்து தி.மு.க. தீர்மானம்

karuna-nithy.jpgஇலங் கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குத் துரிதமாகப் புனர்வாழ்வளிப்பதற்குரிய பொருத்தமான வழிமுறையைக் கண்டறியுமாறு இந்திய மத்திய அரசாங்கத்தைத் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியிருக்கிறது.

தி.மு.க.வின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றபோது இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வு தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் புனர்வாழ்வு விடயத்தில் தாமதம் காட்டப்படுவதாக இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதேவேளை, கூட்டத்தின் பின் நிருபர்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி, வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தன்னை சமீபத்தில் சந்தித்தபோது தூதுக்குழு அல்லது விசேட தூதுவர் ஒருவர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறினார். இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காகத் தூதுக்குழுவை அல்லது விசேட தூதுவரை அனுப்பவுள்ளதாக உறுதியளித்திருந்ததாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

இதேவேளை, பொருட்கள், சேவைகள் வரி மற்றும் மருத்துவ கல்லூரி அனுமதிக்கு பொது நுழைவுப் பரீட்சை நடத்தும் யோசனை என்பவற்றுக்கும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.

சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையரை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை

ஓகஸ்ட் மாத முற்பகுதியில் சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பனாமா நாட்டுக்கொடி யுடனான கப்பலிலுள்ள இலங்கை கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கென்யாவிலுள்ள இலங்கைத் தூதுக் குழுவினரே இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார். இலங்கை கப்பல் பணியாளர்களுடன் கடத்தப்பட்ட மேற்படி கப்பல் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் கென்யா மற்றும் வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதுரகங்களிடம் கோரப்பட்டுள்ளன.

சோமாலியாவில் இலங்கைத் தூதரகம் இல்லையென்பதால் மேற்படி கப்பலிலுள்ள இலங்கை கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்காக சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்துமாறு கென்னியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் கோரப்ப ட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

வடமராட்சிக் கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

வடமராட்சிக் கிழக்கு மக்களை மீள்குடியமர்த்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 28ம் திகதி பலாலி படைத்தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. யாழ். மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவும் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு வடமராட்சிக் கிழக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது குறித்து ஆராயவுள்ளனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களிலும் வேறு பிரதேசங்களிலும் வசித்து வரும் வடமராட்சிக் கிழக்கு மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர் என ஏற்கனவே யாழ். புடைத்ததளபதி வாக்குறுதியளித்திருந்தார். அத்துடன் அரசாங்க அதிபரும் ஏற்கனவே படைத்தளபதியிடம் இவ்விடயம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், நடைபெறவுள்ள கலந்துரையாடலில் வடமராட்சிக் கிழக்கு  மக்களின் மீள்குடியேற்றம் குறித்து முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சிக்கழக்கு மக்கள் பெரும்பாலானவர்கள் கடற்றொலிலாளர்களாவர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழ்வதால் இவர்கள் தொழில் வாய்ப்பின்றி பாதிப்புற்ற நிலையிலுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் வருகை!

mervyn2.jpgசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். தனது குடும்பத்தினருடன் இவர் நேற்றிரவு யாழ்ப்பாணம் வருகை தந்தார். வரும் வழியில் கொடிகாமம் இராமாவில் அகதி முகாமிற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்தார். சுமார் 10 இலட்ச ரூபா பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் உபஉணவுப் பொருட்களையும் அம்மக்களுக்கு வழங்கி அம்மக்கள் மத்தியில உரைநிகழ்த்தினார். பின்னர் மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் சென்ற அவர் இரவுப் பொழுதை யாழ்.நகரில் கழித்தார். மேர்வின் சில்வாவுடன் கண்டி காலதன்னவில சிறீ மகாபத்திரகாளி ஆலய பூசகர் நயம்பதி ஆராச்சிலாகே காமினி ஆனந்தவும் வருகைதந்திருந்தார்.

சமுர்த்தி உத்தியோத்தர் ஒருவரை மரத்துடன் கட்டியதால் பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மேர்வின் சில்வா சனிமாற்றம் காரணமாகவே தனக்கு இந்நிலை ஏற்பட்டது என தெரிவித்திருந்தார். தற்போது யாழ்ப்பாணத்திற்கு பூசகர் ஒருவருடன் வருகை தந்திருக்கும் அவர் ஏதேனும் நேர்த்திகடனுக்காக வந்திருக்கலாம் என தென்னிலங்கை அரசியல் வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகாம்களிலுள்ள 50 ஆயிரம் மக்களை விரைவில் மீள்குடியமர்த்துமாறு ஆயர்கள் குழு ஜனாதிபதியிடம் வலியுத்தல்.

Bishops_Meet_PresidentMRஇன்னும் அகதி முகாம்களில் தங்கியுள்ள 50 ஆயிரம் மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கத்தோலிக்க ஆயர்கள் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே மீள்குடியமர்த்தபட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை தாமதமின்றி வழங்குவது குறித்தும் இக்குழு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

Bishops_Meet_PresidentMRகொழும்பில் நடைபெறும் ஆயர்களின் வருடாந்தக் கூட்டத்திற்காக நாடு முழுவதிலுமிருந்து வந்து ஒன்று கூடியிருக்கும் கத்தோலிக்க ஆயர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயம் குறித்து வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீள்குடியமாத்தப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதிக்கு பாராட்டுக்களையும் இக்குழவினர் தெரிவித்தனர். இன்னுமும் மீள்குடியமர்த்தப்படாமல் அகதிமுகாம்களில் தங்கியுள்ள மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தல், மீள்குடியமத்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ளல், சிறுவர்கள் பாடசாலை மாணவர்களின் நலன்களை பேணுதல் என்பன தொடர்பாகவும் உரையாடப்பட்டதோடு, ஆயர்கள் குழவினர் வருடக்கணக்காக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். ஆலயச்சூழலில் நடமாடும் திருடர்கள் குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Nallur_Thiruvillaயாழ்.குடாநாட்டில் நல்லார் கந்தசாமி அலயம் உட்பட பல ஆலயங்களில் திருவிழா உற்சவங்கள் நடைபற்று வரும் நிலையில பெருந்திரளாக கூடும் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. பல்வேறு வேடங்களில் நடமாடித் திரியும் இக் கள்வர்களிடமிருந்து தங்கள் நகைகளைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா எச்சரித்துள்ளார்.

Nallur_Thiruvillaகுறிப்பாக நல்லூர் ஆலயத் திருவிழாவில் மிக அதிகளவான பக்தர்கள் தினமும் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், அவ்வாலய சுற்றாடல்களில் திருடர்களின் நடமாட்டமும் அதரித்துள்ளதாக சுடடிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்க நகைகளைத் தவிர்த்து ‘கவரிங்’ நகைகளை அணிந்து வருமாறும் பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சாத்திரம் கூறுபவர்கள் போல் நடித்து பொதுமக்களின் தங்க நகைகளை அபகரித்த 12 பேரை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தாக்கதாகும்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரச- எதிரணி தலைவர்கள் ஆராய்வு

imp.jpgஅரச எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று திங்கட்கிழமை மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றதாகவும் அதன்போது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சுமார் ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்றஉறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் எதிர்க்கட்சித் தரப்பில் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பங்கேற்றனர்.

விரைவில் அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கான துரித ஏற்பாடுகளை மேற்கொண்டுவரும் அரசாங்கம் அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பிலான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி தலைமையிலான குழு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எதிரணிக் குழுவுடன் நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளது.

நேற்று மாலை 3.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பு மாலை 5 மணிவரை இடம்பெற்றதாகவும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆராயும் குழுவினால் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் அரசியலமைப்புத் திருத்தம் ஆரம்பகட்ட ஏற்பாடுகள் அடுத்த மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவான இணக்கப்பாடு நேற்று எட்டப்பட்டதாக ஜனாதிபதி செயலக வட்டாரம் தெரிவித்தது.

புகழேந்தியின் – போர் முகங்கள்

pukal.jpgமுள்ளி வாய்க்கால் துயரங்களை சித்தரிக்கும், ஓவியங்களை போர் முகங்கள் என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தமிழகமெங்கும் காட்சிப்படுத்தி வருகின்றார். முதன் முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து வருகின்றது.

சென்னை பிரஞ்சு கலாச்சார நிறுவனமான அலயன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்தில் இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.