சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையரை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை

ஓகஸ்ட் மாத முற்பகுதியில் சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பனாமா நாட்டுக்கொடி யுடனான கப்பலிலுள்ள இலங்கை கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கென்யாவிலுள்ள இலங்கைத் தூதுக் குழுவினரே இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார். இலங்கை கப்பல் பணியாளர்களுடன் கடத்தப்பட்ட மேற்படி கப்பல் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் கென்யா மற்றும் வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதுரகங்களிடம் கோரப்பட்டுள்ளன.

சோமாலியாவில் இலங்கைத் தூதரகம் இல்லையென்பதால் மேற்படி கப்பலிலுள்ள இலங்கை கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்காக சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்துமாறு கென்னியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் கோரப்ப ட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *