இலங்கையின் வட பகுதிக் கட லில் இந்தியாவுக்கு அருகே சிறிய தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
இதேவேளை தாய்லாந்து கடலில் சூறாவளி உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இவற்றின் விளைவாக அடுத்து வரும் சில தினங்களுக்கு இலங்கையில் கடும் காற்று வீசும் எனவும் அவர் குறிப்பிட்டார்
வட வகுதி கடலில் உருவாகியு ள்ள சிறிய தாழமுக்கம் மற்றும் தாய் லாந்து கடலில் காணப்படும் சூறா வளி என்பனவற்றின் காற்று வீசும் திசை இலங்கை ஊடாக அமைந்திருப்பதாலேயே காற்றின் வேகம் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படும் எனவும் அவர் கூறினார்.
இலங்கையின் வட பகுதி கடலில் 300 – 400 கிலோ மீட்டர் தூரத்தில் இச் சிறிய தாழ்முக்கம் உருவாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு எதுவிதப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.