March

March

தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !

தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !

தமிழரசுக் கட்சிக்குள் பா உ சிறிதரனும் எம் ஏ சுமந்திரனும் இருக்கும்வரை கட்சி வளர்ச்சியடையாது என தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்கள் என தங்களை முன்நிறுத்தும் ஊடகவியலாளர் நிலாந்தன் மற்றும் பொங்கு தமிழ் கணேசலிங்கம் ஆகியோர் டான் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆய்வாளர் வி சிவலிங்கம் பா உ எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் அல்லது தானாக கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியிலிருந்து இவ்விருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாதது. கட்சி தற்போது எம் ஏ சுமந்திரனின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாலும் மத்திய குழுவில் சுமந்திரனுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாலும் பா உ சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பா உ சிறிதரன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்தில் அவர் ஆசனத்தை வென்று எம் ஏ சுமந்திரன் ஆசனத்தை இழந்தார்.

இருந்த போது பா உ சிறிதரனால் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தற்போது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலில் வேட்ப்புமனு தாக்கல் செய்வதில் இன்னுமொரு நெருக்கடிநிலை உருவாகும்.

ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பா.உ சிறிதரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்த போது, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதாக இருந்தால், முதலில் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் 50 சதவீத தொகுதி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைக்கு தென்னிலங்கையிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. நாமும் அதனை எதிர்க்கிறோம். மாகாணசபைத் தேர்தல் இவ்வாறானதொரு இழுபறி நிலையில் தான் இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயாரில்லை. அதேபோன்று எமது கட்சி வழக்கு நிலுவையில் இருக்கிறது. கட்சி உறுப்பினர்களே வழக்கினைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இது தாயை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு, தாயிடம் உணவு கேட்பதுபோல் உள்ளது. நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல. மாறாக இனவிடுதலையை இலக்காகக்கொண்ட அரசியலாகும். பதவிகளுக்காக அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

தங்களை தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்களாக முன்நிறுத்தும் நிலாந்தனும் பொங்குதமிழ் கணேசலிங்கமும் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளுக்கிடையே உள்ள தனிப்பட்ட முரண்பாடுகளே தமிழ் தேசியம் பலவீனப்படுவதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தன்னை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டது எனச் சுட்டிக்காட்டினர்.

தேசிய மக்கள் சக்திக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் அச்சமடைந்து தான் தமிழ் தேசியக் கட்சிகள் புதிய கூட்டணிகளை உருவாக்குவதாக நிலாந்தனும் கணேசலிங்கமும் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்றச் செயற்பாடுகளில் பா உ சாணக்கியன், பா உ அர்ச்சுனா முன்னணியில் பா உ சிறிதரன் பின்நிலையில் !

பாராளுமன்றச் செயற்பாடுகளில் பா உ சாணக்கியன், பா உ அர்ச்சுனா முன்னணியில் பா உ சிறிதரன் பின்நிலையில் !

பாராளுமன்றச் செயற்பாடுகளில், பாராளுமன்ற விவாதங்களில் ஈடுபடுவதில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னணியில் நிற்கின்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சி பா உ இரா சாணக்கியன் பாராளுமன்ற செயற்பாட்டில் 27வது இடத்தில் உள்ளார். ஒன்று முதல் 225 வரையான தரவரிசைப்படுத்தலில் தமிழ் தரப்பில் சாணக்கியனே முன்னணியில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பொன்னம்பலம் கஜேந்திர குமார் 41 வது இடத்தில் உள்ளார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா 42வது இடத்தில் உள்ளார். பாராளுமன்றச் செயற்பாடுகளில் விவாதங்களில் பா உ எவ்வாறு வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் என்பதைப் பொறுத்து மந்திர டொட் எல்கே என்ற அமைப்பு இத்தரவரிசையை மேற்கொண்டுள்ளது.

சமூக வலைத் தளங்களில் முன்னிலை வகிக்கும், தமிழ் அரசியலை கலகலப்பாக வைத்திருக்கும் பா உ இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றச் செயற்பாடுகளில் 44வது இடத்தை தக்கவைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து 48வது இடத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன் உள்ளார். அவரையடுத்து வன்னிப் தேசிய மக்கள் சக்தி பா உ ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் 54வது இடத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பா உ கவீந்திரன் கோடீஸ்வரன் 55வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 63வது இடத்தில் உள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ கருணானந்தன் இளங்குமரன் பாராளுமன்றச் செயற்பாடுகளில் 79வது இடத்தில் உள்ளார். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பா உ செல்வம் அடைக்கலநாதன் 89வது இடத்தில் உள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ் மாவட்ட பா உ சிவஞானம் சிறிதரன் தமிழ் ஊடகங்களால் பேசப்படும் அளவுக்கு பாராளுமன்ற செயற்பாடுகளில் தீவிரமாக இல்லை. 113 இடத்திலேயே உள்ளார். 2010 முதல் பாராளுமன்றம் செல்லும் அனுபவமிக்க பா உ பாராளுமன்ற செயற்பாடுகளில் பலவீனமானவராகவே உள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவாக பாராளுமன்றச் செயற்பாடுகளில் முன்னிலைக்கு வருவது சற்று கடனமானதே. அவர்களுடைய அரசாங்கமே ஆட்சியில் இருப்பதால் ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் தங்களுடைய கருத்துக்களை வைப்பதில் தயக்கம்கொள்வார்கள். மேலும் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்களாகையால் தயக்கமும் மேலோங்கி இருக்கும். மேலும் அமைச்சர்களே ஆளும்கட்சியின் பெரும்பாலான நேரத்தை எடுத்தக்கொள்வதால் சாதாரண ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். எதிர்காலத்தில் அவர்கள் இதனைப் புரிந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

இத்தர வரிசையானது வெறுமனே பாராளுமன்றத்தில் உரத்துக் குரல் எழுப்புவது அல்ல. சட்டவாக்கங்களில், கொள்கை வகுப்புகளில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி சட்டங்களையும் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் செழுமைப்படுத்துவது.

கடல்தொழில் அமைச்சர் இராமரிங்கம் சந்திரசேகர் பாராளுமன்ற செயற்பாட்டுத் தரவரிசையில் 122வது இடத்தைப் பிடித்துள்ளார். ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட நீண்ட பாராளுமன்ற அனுபவமுடைய ஐக்கிய மக்கள் சக்தி பா உ மனோ கணேசன் பாராளுமன்ற செயற்பாடுகளில் மந்தநிலையில் 148வது இடத்தில் உள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன், மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் 225வது இடத்தில் உள்ளனர். 75 பாராளுமன்ற உறுப்பினர்களை மந்தநிலை உறுப்பினர்களாக மந்திரி.எல்கே என்ற அமைப்பு தரவரிசைப்படுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படும் எனப் பொய்ப்பரப்புரை !

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படும் எனப் பொய்ப்பரப்புரை !

வெளிநாடுகளில் தொழில் செய்யும் இலங்கை தொழிலாளர்களால் பணம் அனுப்புவதற்கு வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறி செய்தித்தாள்களில் தவறான தகவல்கள் பரவி வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கணணித் தொழில்நுட்பத்தினூடாக இலங்கையில் இருந்துகொண்டு சர்வதேச நாடுகளுக்கு தங்களது சேவையை ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஏனைய தொழிலாளர்கள் போன்று 15 வீதம் வரையான வருமான வரி அறவிடப்படும் என்ற அறிவிப்பை சில ஊடகங்கள் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கும் வரி அறிவிடப்படும் என பொய்ப்பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.

2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் அனுப்புவதற்கு 15% வரி விதிக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 2025 பட்ஜெட் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த நேரத்தில், இது பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக எனக்கும் அரசாங்கத்திற்கும் தீங்கு விளைவிக்கும் முயற்சியாகும் எனவும் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யானைகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட ரயில் சேவை நேர அட்டவணை !

யானைகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட ரயில் சேவை நேர அட்டவணை !

சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்கும் படி அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கு விசாரணைக்கு வர முன்னரே ரயில்வே திணைக்களம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் மட்டக்களப்பு பாதையில் தொடங்கும் ரயில் கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

அரசியல் தலையீடின்றி மனிதப் புதைகுழி சுயாதீன விசாரணைகள் !

அரசியல் தலையீடின்றி மனிதப் புதைகுழி சுயாதீன விசாரணைகள் !

யாழ். அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான நீதித்துறையின் செயற்பாடுகளுக்கு அநுர அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சித்துப் பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கம் நீதியான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டமை தொடர்பில் அமைச்சரிடம் எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளித்த போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் ஆறு வார காலங்களில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க வாசுதேவா தெரிவித்துள்ளார். இரண்டாவது அறிக்கையில் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இலக்கத்தகடுகள் ஆடைகளில் பொறிக்கப்பட்ட இலக்கங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலக்கத் தகடுகளுக்குரியவர்களின் உறவினர்கள் யாராவது முன்வந்தால் இறந்தவர்களை நாங்கள் இலகுவாக இனங்காண முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு உள்ளூராட்சி சபையில் தமிழ்ப் பிரதிநித்துவத்தை அதிகரிக்க வேண்டும் !

கொழும்பு உள்ளூராட்சி சபையில் தமிழ்ப் பிரதிநித்துவத்தை அதிகரிக்க வேண்டும் !

கொழும்பு தமிழர்களின் நீண்ட கால கோரிக்கைக்கையான தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தொடர்பில் சுமந்திரனிடம் சிறப்பு செயல்த்திட்டம் உள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் சி. இரத்தினவடிவேல் தெரிவித்தார்.

வருகிற உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இவ் விடயம் குறித்து எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த போது, தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

வாள்வெட்டு உள்ளிட்ட சமூக சீரழிவுகளுக்கு எதிராக கிழக்கில் மக்கள் போர்க்கொடி !

வாள்வெட்டு உள்ளிட்ட சமூக சீரழிவுகளுக்கு எதிராக கிழக்கில் மக்கள் போர்க்கொடி !

மட்டக்களப்பின் ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டியும், கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கான நிதியினை வழங்கக்கோரியும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று பெப்ரவரி 02 ஆம் திகதி மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றது.

ஆரையம்பதி விளையாட்டு கழக உறுப்பினர்கள் மீது வாள் வெட்டு சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு கடுமையான தண்டனையை பிரதேச செயலாளர் பெற்றுத் தர வேண்டும் எனவும் போலீசார் சரியான முறையில் நீதி பெற்றுத்தரவில்லை எனவும், இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை மண்முனைப்பற்றில் உள்ள பொதுமக்கள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தன. அப்போது வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமாரவுக்கு என மகஜர் ஒன்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

அண்மையில் கிழக்கின் பல பகுதிகளிலும் பெருகி வரும் மதுபான கடைகளை எதிர்த்தும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது

பாதாள உலக குற்றங்களுக்கு முடிவுகட்ட என்பிபி அரசாங்கம் தீவிரம் !

பாதாள உலக குற்றங்களுக்கு முடிவுகட்ட என்பிபி அரசாங்கம் தீவிரம் !

கடந்த காலங்களில் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்த போது பாதாள உலக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகரித்திருந்தன. இந்தக் குழுக்களை டுபாய், இந்தியா மற்றும் இத்தாலி போன்ற வெளிநாடுகளிலிருந்து, இதன் தலைவர்கள் இயக்குகின்றனர். சமீபத்தில் நீதிமன்றத்தில் சுட்டுக்கொள்ளப்பட்ட பாதாள உலகத்தைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்யும் ஒப்பந்தம் டுபாயிலிருந்தே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்படியான பாதாள உலக கும்பல்களின் தகவல் தொடர்பு வலையமைப்புக்கள் கண்காணிக்கும் பொறிமுறையொன்று அமைக்கபடவுள்ளது.

பாதாள உலக கும்பல்களை கண்காணிக்க பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட 5,000 புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதாள உலக குற்றக் கும்பல்களின் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்காணித்து தினசரி சிறப்பு பகுப்பாய்வு அறிக்கை ஜனாதிபதி அநுரவிடம் கையளிப்பார்கள் என அரசாங்கத் செய்தித் தொடர்பாளர் ஊடாக தெரியவந்துள்ளது.

 

புதுக்குடியிருப்பில் மட்டும் 27 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை !

புதுக்குடியிருப்பில் மட்டும் 27 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை !

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பை அண்டிய பகுதிகளில் மட்டும் 27 இரகசிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மன்னகண்டல் முதல் வள்ளிபுனம் வரை இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் காய்ச்சிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தப்பிச் சென்று விட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஊழல் ஒழிப்பு அணி வன்னியும் தொடர்ச்சியாக கசிப்பு , போதைப் பொருள், வாள்வெட்டு மற்றும் ஆயுக்கடத்தல் சம்பந்தமாக வெளிப்படுத்தி வருகின்றது.

தர்மபுரம் பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத நடவடிக்கைகளின் பின்னணியில் கிளிநொச்சி நடப்பு பாராளுமன்ற உறுப்பினர் மீதும் குற்றம் சாட்டப்படுகின்றது.

இந்த விடயம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருந்தது. முல்லைத்தீவில் அதீத படையினர் பிரசன்னத்திற்கு மத்தியிலும் கசிப்பு வியாபாரம் கோலோச்சுவதாக தமிழரசுக் கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றத்தில் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அ

நாட்டில் எரிபொருள் பிரச்சினையில்லை ! கமிஷன் பிரச்சினைதான் உள்ளது ! நாட்டின் நிதிக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலரைத் தொடுகின்றது !

நாட்டில் எரிபொருள் பிரச்சினையில்லை ! கமிஷன் பிரச்சினைதான் உள்ளது ! நாட்டின் நிதிக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலரைத் தொடுகின்றது !

நாட்டில் எரிபொருள் பிரச்சினையில்லை. கமிஷன் பிரச்சினையே உள்ளது. அதற்காகவே விநியோகஸ்தர்கள் காலிமுகத்திடலில் மூன்றுநாட்களாக முற்றுகையிட்டுள்ளனர். தங்களுக்கு வரவேண்டிய கமிஷன் வழங்கப்படவில்லை என்றே விநியோகஸ்தர்கள் கெம்பியுள்ளனர். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விநியோகஸ்தர்களுக்கு வழங்கிய கொமிஷனை ரத்து செய்ததால் இவர்கள் அந்தக் கொமிஷனைக்கோரி எரிபொருளுக்கான கோரிக்கையை வைக்காமல் நாட்டில் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தை பணிய வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது சாத்தியமாகுமா அல்லது அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி விநியோகத்தை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த விநியோகஸ்தர்கள் 1400 பேர் 37 பில்லியன் ரூபாயை சட்டவிரோதமாக பகிர்ந்துகொண்ட தாக குற்றம்சாட்டியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்விநியோகஸ்தர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் ஊழல் மற்றும் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பு, விநியோகஸ்தர்கள் பொதுமக்களை துன்புறுத்தி சட்டவிரோதமாக கொமிஷனை அறவிடுவதாக புகார் செய்துள்ளனர்.

இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசு இருக்கும் வரை எரிபொருள் பிரச்சினை ஏற்படுவதற்கு வழியில்லை என்றே பொருளாதார சுட்டிகள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி என்பன இலங்கையின் பொருளாதாரச் சுட்டிகளில் திருப்தியடைந்துள்ளன. தற்போது இலங்கையின் அந்நியச் செலவாணி கையிருப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இது அடுத்த ஆண்டு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் தேசிய மக்கள் சக்தி அரசில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பே இல்லை என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.