யானைகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட ரயில் சேவை நேர அட்டவணை !
சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்கும் படி அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கு விசாரணைக்கு வர முன்னரே ரயில்வே திணைக்களம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் மட்டக்களப்பு பாதையில் தொடங்கும் ரயில் கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.