பாதாள உலக குற்றங்களுக்கு முடிவுகட்ட என்பிபி அரசாங்கம் தீவிரம் !

பாதாள உலக குற்றங்களுக்கு முடிவுகட்ட என்பிபி அரசாங்கம் தீவிரம் !

கடந்த காலங்களில் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்த போது பாதாள உலக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகரித்திருந்தன. இந்தக் குழுக்களை டுபாய், இந்தியா மற்றும் இத்தாலி போன்ற வெளிநாடுகளிலிருந்து, இதன் தலைவர்கள் இயக்குகின்றனர். சமீபத்தில் நீதிமன்றத்தில் சுட்டுக்கொள்ளப்பட்ட பாதாள உலகத்தைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்யும் ஒப்பந்தம் டுபாயிலிருந்தே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்படியான பாதாள உலக கும்பல்களின் தகவல் தொடர்பு வலையமைப்புக்கள் கண்காணிக்கும் பொறிமுறையொன்று அமைக்கபடவுள்ளது.

பாதாள உலக கும்பல்களை கண்காணிக்க பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட 5,000 புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதாள உலக குற்றக் கும்பல்களின் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்காணித்து தினசரி சிறப்பு பகுப்பாய்வு அறிக்கை ஜனாதிபதி அநுரவிடம் கையளிப்பார்கள் என அரசாங்கத் செய்தித் தொடர்பாளர் ஊடாக தெரியவந்துள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *