March

March

பட்டலந்த விவகாரம் ரணிலின் ஏழரைச் சனி ஆரம்பம்: மேற்கின் செல்லப் பிள்ளை ரணிலின் நாட்கள் எண்ணப்படுகின்றதா ? 

பட்டலந்த விவகாரம் ரணிலின் ஏழரைச் சனி ஆரம்பம்: மேற்கின் செல்லப் பிள்ளை ரணிலின் நாட்கள் எண்ணப்படுகின்றதா ?

 

மேற்கின் செல்லப் பிள்ளையான ரணில் விக்கிரமசிங்க முதலாளித்துவத்தின் ஒரு சிந்தனைவாதி என்பது இலங்கையர் பலரும் அறியாத விடயம். ரணில் விக்கிரமசிங்க உலகின் செல்வந்த மேற்கு நாடுகளின் தலைவர்களால் நண்பராக அணுகப்படும் ஒருவர். 2018இல் நல்லாட்சி அரசை உருவாக்கி ரணிலைப் பிரதமராக்குவதற்காக முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயர் இரண்டு வாரங்கள் யாருக்கும் தெரியாமல் இலங்கையில் தங்கியிருந்து காய் நகர்த்தியிருந்தார். அதற்கடுத்து அரகலயா போராட்டத்தைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும் அமெரிக்காவின் மேற்குலகின் ஆதரவினாலேயே.

ஆனால் தற்போது அல்ஜசீரா ரணில் விக்கிரமசிங்கவை லண்டனுக்கு அழைத்து கிடுக்கு பிடியுள் சிக்க வைத்துள்ளது. தமிழ் மக்கள் ரணிலை நம்பிய அளவுக்கு சிங்கள மக்கள் ரணிலை நம்பியிருக்கவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் ரணிலக்கு பெரும் விம்பம் கட்டமைக்கப்பட வில்லை. அதனை கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் காணக் கூடியதாக இருந்தது. அல்ஜசீரா நேர்காணலில் ஊடகவியலாளரால் ரணிலிடமிருந்து புதிய தகவல்கள் எதனையும் வெளிக்கொணர முடியவில்லை. ஆனால் ரணில் தனக்குத் தானே மண்ணளிப் போட்டுக்கொண்டார். பட்டலந்த வதைமுகாம் விவகாரம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட போது அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தட்டிக்கழித்துவிட்டார்.

அதிலிருந்த ரணிலின் ஏழரைச் சனி ஆரம்பமாகியுள்ளது. 1990க்களுக்கு முன்பாக ஜேவிபி உறுப்பினர்கள் இந்த பட்டலந்த வதைமுகாமில் சித்திரவை செய்யப்பட்டதும் அதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்த தொடர்பு பற்றியதே இந்த பட்டலந்த அறிக்கை. இந்த அறிக்கையை அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்துக்கு கொண்டுவர இருந்த சமயம் அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் ரணிலைப் பிரதமராக்கி இந்தப் பட்டலந்த அறிக்கையை காணாமலாக்கினார். இந்த அறிக்கையின் ஒரு பிரதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெருங்கிய நண்பரான இக்னிசியஸ் செல்லையா மனோரஞ்சனிடம் இருந்துள்ளது. அதிலிருந்தே இந்தப் பட்டலந்த பூகம்பம் மீண்டும் அதிர்வை ஏற்படுத்துவதாக நம்பகமாகத் தெரியவருகின்றது.

தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜேவிபி அரசும் தங்களுடைய போராளிகள் அன்று சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்க முனைகின்றனர். இந்த அறிக்கை அடுத்தவாரம் பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசு அறிவித்துள்ளது.

பட்டலந்த விவகாரத்தை அன்று புலனாய்வு செய்த ஊடகவியலாளரே யாழ் நூலக எரிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ரணிலினதும் பங்களிப்பை ஆதாரத்துடன் நூலாக வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புலனாய்வுச் செய்தியாளர் நந்தன வீரரத்ன பட்டலகந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாத்திரம் பற்றி சூம் விழயாக மார்ச் 16இல் கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளார். செல்லையா மனோரஞ்சன் இந்நிகழ்வை தொகுத்து வழங்க உள்ளார்.

ஆனால் பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்த சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ள சிவஞானம்இ இந்த பட்டலந்த விவகாரம் சம்பந்தமாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் ஏதும் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அது அவர்களே சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படி தான் இப்போது நடக்கிறது. இதனைப்பற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக் கொள்ளட்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

நாட்டில் உள்ள பேரினவாத ஆட்சியாளர்களோடு கூட்டுச் சேர்ந்து நாட்டைச் சீரழித்ததில் பங்கெடுத்துக்கொண்ட தமிழரசுக் கட்சி இவ்வாறான பேரினவாதசக்திகள், மனிதவிரோத சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேச்சளவிலும் தெரிவிக்கவில்லை. மாறாக யாழ் நூலகத்தை எரித்தவர்களோடு கூட்டுச் சேர்ந்து அரசியல் செய்வதையே இவர்கள் நல்லாட்சி அரசாங்கம் என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.

பட்டலந்த விவகாரம் சூடு பிடித்தால் ரணிலுக்கு மாமா வேலை செய்த அந்த அர்த்தத்தில் எண்ணக் கூடாது, தமிழ் கட்சிகளுக்கு அது பிரச்சினையாகவே இருக்கும்.

ஊடகவியலாளரான திருமணமான குடும்பப்பெண் மீது பாலியல் வக்கிரம் கொள்ளும் தமிழ் தலிபான்கள்:

ஊடகவியலாளரான திருமணமான குடும்பப்பெண் மீது பாலியல் வக்கிரம் கொள்ளும் தமிழ் தலிபான்கள்:

ஊழல் ஒழிப்பு அணி வன்னி உட்பட்ட தமிழ் தலபான்களால் விபச்சாரம் செய்வதாக குற்றம் சுமத்தப்படும் பெண் ஊடகவியலாளர் சங்கவி பற்றியதாகும். சங்கவி தி ஐகன் (Shangavi The ICON) எனும் செய்திகள் வழங்கும் யுரீயூப் சனல் நடத்தி வருகிறார். அவர் தொடர்பில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி வெளியிட்டுள்ள காணொளி மற்றும் பதிவுகள் அனைத்தும் கண்டிக்கப்பட வேண்டியவை. சங்கவி ஒரு ஆணுடன் பாடல் காட்சி ஒன்றில் தோன்றும் ஒரு சிறிய றீல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்தக் காணொளியில் விபச்சாரம் செய்வதாக எந்த தடயங்களும் இல்லை. அதை விட சங்கவி யார் யாரோடெல்லாம் படுக்கையை பகிர்ந்து, அதற்காக பணம் வாங்கியுள்ளார் என ஒரு நீண்ட பட்டியலோடு ஒரு பதிவை ஊழல் ஒழிப்பு அணி வன்னி வெளியிட்டுள்ளது. அதிலும் முக்கியமாக ஊடகவியலாளர் சங்கவியின் ஆபாச காணொளிகள் தங்களிடம் இருப்பதாகவும் ஒரு அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பதிவுக்கு பதில் அளித்து சங்கவி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில் அவர் கேட்டுக் கொண்டபடியே ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஏன் சங்கவியிடம் பணம் செலுத்தி பாலியல் சேவை பெற்றதாக கூறும் ஆண்களின் விபரங்களையும் படங்களுடன் வெளிப்படுத்தவில்லை.

தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்தவர்களை கூட உயிரோடு கொண்டு வர முடியும். அப்படியிருக்க சங்கவியின் ஆபாச காணொளி என கூறப்படும் காணொளி எவ்வளவு தூரம் உண்மையானது என்பதும் கேள்விக்குறியே.

எப்படியாயினும் காணொளியை வெளியிட்டால் சைபர் கிரைம் பொலிஸார் அதனை விசாரித்து முடிவு எடுப்பார்கள். சங்கவியும் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க. எம்பி அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்திலும் தனது முந்திரிக் கொட்டைத்தனத்தை காட்டி பிரபல்யம் தேடிக் கொண்டுள்ளார். அவர் தனது முகநூலில் ஊடகவியலாளர் சங்கவி தொடர்பான அவதூறு பதிவை பகிர்ந்துள்ளார். இந்த விடயம் தொடர்பிலும் சங்கவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மூச்சுக்கு மூண்ணூறு தரம் தனது தங்கை என கௌசல்யா நரேந்திரனுக்கு வக்காலத்து வாங்கும் எம்பி அர்ச்சுனா தனக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்று சங்கவி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னைப் போலவே அவதூறுகள் மற்றும் வசைப்பாடுகளை எதிர்கொள்ளும் சட்டத்தரணி கௌசல்யாவிடமும் சங்கவி கோரிக்கை வைத்துள்ளார். தனக்கு நியாயம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

வழமை போலவே சங்கவியின் காணொளிக்கு நேரலையில் வந்து எம்பி அர்ச்சுனா அநாகரீகமான முறையில் பதிலளித்துள்ளார். கௌசல்யாவுக்கும் சங்கவிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம், சங்கவி தான் ஆபாசப்படத்தில் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் தான் சங்கவிக்கு பாராளுமன்றம் வரை சென்று குரல் கொடுப்பதாகவும் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கல்வியறிவு, அந்தஸ்து மற்றும் அனுபவம் பற்றி எல்லாம் சம்பந்தமில்லாமல் சிலாகித்துப் பேசுகிறார். அதேமாதிரி கௌசல்யாவின் சட்டத்தரணி தகுதியை சங்கவியின் கல்வித் தகமையோடு ஒப்பீடு செய்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கின்றார்.

அவருடைய உயர்வுச் சிக்கல் பிரச்சினையை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகின்றார் ஆயிரம் பேரைக்காதலித்ததாக பீற்றிக்கொள்ளும் அர்ச்சுனா. அர்ச்சுனாவுடைய முன்னாள்கள் மீது அல்லது தங்கைகள் மீது விபச்சாரக்குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டால் அவர்களுடைய கணவனமார் சமூகவலைத்தளத்தில் வந்து அப்பெண்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது தானாம் அதற்குத் தீர்வு என்கிறார் அர்ச்சுனாவின் அடியான்.

கௌசல்யாவின் கல்வித் தகமையையோ அல்லது தொழில்த்திறனையோ எப்படி எவரும் குறைத்து மதிப்பிட முடியாதோ அதேமாதிரி தான் சங்கவியினுடைய தொழில்த்திறமையும் அவருடைய கல்வித் தகமையும். சங்கவியும் தான் பயணிக்கும் துறையில் சிறந்த நிலையில் இருக்கிறார். நீண்டகாலமாக ஊடகத் துறையில் பணியாற்றுபவர்கள் கூட இலகுவாக அடைய முடியாத சந்தாதாரர்களை அவர் சம்பாதித்து வைத்துள்ளார். சங்கவியின் யுரீயூப் சனலுக்கு ஒரு இலட்சத்தி தொண்ணூறாயிரம் சப்கிறைபர்ஸ் உள்ளார்கள். செய்தி ஊடகத்துறையில் தனியான ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். அவருடைய காணொளிகளை குறைந்தபட்டசமாக 5000 க்கும் மேற்பட்டோர் நாளாந்தம் பார்வையிடுகிறார்கள். கௌசல்யாவும் சரி சங்கவியும் சரி அவரவர் துறையில் திறமையாகவே செயற்படுகின்றனர்.

ஆகவே கௌசல்யா மற்றும் சங்கவி இருவரையும் ஒப்பிட்டு எம்பி அர்ச்சுனா ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்துவது கண்டிக்கப்பட வேண்டியது.

ஊடகவியலாளர் சங்கவி தனது கணவனுடன் இருக்கும் காணொளியை வெளியிட்டு முகநூலில் அவதூறு பரப்பும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி மற்றும் அச்செய்தியை பகிர்வோர் என அனைவரும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த இடத்தில் தான் எம்பி அர்ச்சுனாவின் ஜால்ரா தமிழ் அடியான் என்கிற யுரீயூப்பரின் பத்தாம்பசலித்தனமான பதிவு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் அடியான் பிரித்தானியாவில் வாழ்வதாக கூறப்படுகிறது. அவர் ஊடகவியலாளர் சங்கவி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால் , சங்கவியின் கணவர் பொதுவெளிக்கு வந்து சங்கவிக்கு நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆலோசனை கொடுக்கிறார்.

தமிழ் அடியான் போன்ற பால்நிலைச் சமத்துவம் மற்றும் சுய கௌரவம் என்றால் என்னவென்றே தெரியாத ஆண்களால் தான் பெண்கள் வன்முறைக்குள்ளாகிறார்கள். பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் வன்முறைகளே வீட்டில் தான் நிகழ்கின்றன. வீட்டு வன்முறைகளில் முக்கிய குற்றவாளிகளே கணவன்மார் மற்றும் ஆண் நண்பர்களே. ஒரு பெண்ணுக்கு கணவன் தான் பாதுகாப்பு எனக் கூறி தனது அறியாமையை தமிழ் அடியான் வெளிப்படுத்தி நிற்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தங்களை ஊடகவியலாளர்கள் என நினைத்துக் கொண்டு உளறுவதை பெண்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.

பெண்கள் மீதான அடக்குமுறையின் உச்ச கட்டம் அவர்களுடைய நற்பெயருக்கு களங்கத்தை (Character Assassination) ஏற்படுத்துதல் ஆகும். இது காலங்காலமாக நடந்து வரும் ஒடுக்குமுறை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இப்போது புதிய வடிவம் எடுத்துள்ளது. நிஜ உலகில் ( real world ) வன்முறையை எதிர்கொண்ட பெண்கள். தற்போது நிழல் உலகில் ( virtual world ) அதைவிட மோசமான வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். வலைத்தளங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பெண்கள் மீதான வன்முறைகளை துணிந்து முனைப்போடு ஈடுபடுகிறார்கள். இவ்வாறான ஒரு செயற்பாடே ஊழல் ஒழிப்பு வன்னி அணி போன்ற வலைத்தளங்கள் இயங்குகின்றன. இதற்கு அர்ச்சுனா போன்றவர்கள் வலுச்சேர்க்கின்றனர். இந்த புதிய போக்கை எதிர் கொள்ள தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உண்மையான பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.

“ஊழல் ஒழிப்பு அணி வன்னி “ என்ற முகநூல் மற்றும் அந்த முகநூலைத் தொடரும் பல ஆயிரம் பேரும் கூறும் செய்தி பெண்ணடிமைத்தனம் புதிய வடிவம் எடுத்துள்ளது என்பதாகும். அத்துடன்

யாழ்ப்பாண வெள்ளாள மேலாதிக்கம் மற்றும் ஆணாதிக்க தமிழ்ச் சமூகம் ஒன்று மீண்டும் யுத்தத்திற்குப் பின் மேலெழுந்துள்ளது. இந்தப் போக்கு மிக ஆபத்தானது. தமிழ்ச் சமூகத்தில் ஈழத்தமிழ்ப் பெண்களின் நிலை மிகப் பிற்போக்குத்தனங்களால் நிரம்பியுள்ளது. பெண்கள் ஆண்களின் உடமைகளாகவும், கவர்ச்சிப் பாவைகளாகவும் , அடிமைகளாகவும் ஆக்கப்பட்டு வருகின்றனர்.

உலகமயமாக்கம், பால் இனச் சமத்துவம், புலப்பெயர்வு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என உலகம் பல வகைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. காலச் சூழ்நிலைக்கு ஏற்ப ஈழத்துப் பெண்களும் தங்களை தகவமைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். சர்மினியும் சரி சங்கவியும் சரி பொதுவெளியில் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் உறுதியாக வைக்க வேண்டும். சர்மினி விளங்கிக் கொள்ள வேண்டியது, பெண்கள் மீது நன்மதிப்பற்றவர்களே கேவலமான கேள்விகளை கேட்பார்கள். அதற்கு அவர்கள் பாணியில் பதில் அளித்தல் தற்துணிவு தான் . ஆனால் அது பாலியல் வக்கிரங் கொண்ட ஆண்களுக்கு இலவசமாக கிடைக்கும் வடிகால் ஆகிவிடும். சர்மினி உங்களுடைய துடுக்குத் தனத்தில் ஒரு துணிவு உண்டு. அதனை காத்திரமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவும்.

சங்கவி நீங்கள் தைரியசாலி. உங்கள் கணவர் மற்றும் உறவினர்கள் பின்னால் ஒளிந்து கொள்ளத் தேவையில்லை. நீங்கள் யாருக்கும் உங்களை நிரூபிக்க தேவையில்லை. உங்கள் பணி தொடரட்டும்.

ஒரு பெண் நாட்டின் பிரதமராக இருக்கும் பாராளுமன்றத்தில் தான் வரலாற்றிலேயே இல்லாத மாதிரி இன்னுமொரு பெண் மீது விபச்சாரம் செய்கிறார், நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்பிபி அரசாங்கத்தின் பொறுப்பு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகும்

பாலியல் தொழிலாளிகள் இல்லாவிட்டால் வீதிகளில் வன்புணர்வுகள் அதிகரிக்கும் !

பாலியல் தொழிலாளிகள் இல்லாவிட்டால் வீதிகளில் வன்புணர்வுகள் அதிகரிக்கும் !

 

ஊழல் ஒழிப்பு வன்னி அணியின் அடுத்த இலக்கு பாலியல் சேவை வழங்கும் பெண் வசந்தா. அவருடைய தொழில் தொடர்பிலும் கருத்துச் சொல்ல சட்டத்திற்கு தான் அதிகாரம் உண்டு. இலங்கையைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள், பாலியல் தொழிலை தடை செய்துள்ளது. ஆனால் மேற்குநாடுகள் மற்றும் பல ஆசிய நாடுகள் கூட பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கியுள்ளன.

இந்தத் தொழிலுக்கு சட்டபூர்வமான அனுமதி அளிப்பதன் மூலம் விபச்சாரத்தை ஒழுங்குபடுத்த முயற்சித்துள்ளன. பாலியல் தொழிலாளர்களுக்கு உடல்நலம் மற்றும் சமூக நலன்களை வழங்குகின்றன. இந்த விடயங்கள் ஒன்றும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு தெரியாது என்று சொல்வதிற்கில்லை. கிட்டத்தட்ட வெளிநாட்டில் உறவினர்கள் இல்லாத குடும்பங்களே இல்லை. அவர்கள் எல்லோரும் தங்களுடைய உறவினர்கள் வழியாக வெளிநாடுகளில் ஆண்-பெண் பாலியல் சமத்துவம் மற்றும் பாலியல் சுதந்திரம் தொடர்பான உரிமைகள் தொடர்பில் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதைவிட இணையத்துடன் கூடிய கையடக்கத் தொலைபேசிக்குள்ளேயே சகலதையும் அறியலாம்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க வசந்தா பற்றிய அவதூறுகள் பாரதுரமானவையாக காணப்படுகின்றது. வசந்தாவிடம் பணத்தை கொடுத்து பாலியல் சேவை பெறச் செல்லும் ஆண்களை ஏன் ஊழல் ஒழிப்பு அணி வன்னி வசை பாடவில்லை. அவர்கள் தானே இந்த தொழிலை ஊக்குவிக்கிறார்கள். வசந்தா 18 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருந்தால் அந்த விடயம் கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் அவருடைய பிள்ளைகளை தண்டிப்பது. அந்தப் பிள்ளைகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதும் குற்றம். வசந்தா போன்ற விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் இவ்வாறான தொழில்களை தேர்தெடுக்க காரணமான சமூகச் சூழ்நிலைகள் மாற்றமடையாத வரை இந்நிலை மாறாது.

அதேநேரம் முற்போக்கு அரசாங்கம் “பாலியல் தொழிலை” சட்டபூர்வமாக்குவதன் மூலம் பல சமூக பொருளாதார சீரழிவுகளை தடுக்கலாம். இத் தொழிலில் சட்டவிரோதமாக ஈடுபடும் போது எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் பரவும் ஆபத்துக்கள் அதிகம். தமிழர்களின் வரலாற்றில் பாலியல் தொழிலே இருக்கவில்லை என யாரும் வாதிட முடியாது. ஈழத்தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் சோழப்பேரரசில் மன்னர்களின் அந்தப்புரங்களில் பெண்கள் பாலியல் அடிமைகளாக இருந்த வரலாறுகள் தெரிந்ததே. யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அந்தப்புரமாக வைத்திருக்கின்ற விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் பற்றி இந்தக் கலாச்சாரக் காவலர்களான தமிழ் தலிபான்களுக்கு தெரியாதா ? பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஏன் கேடுகெட்ட ஆண்களைக் காப்பாற்றுவதில் இவர்களின் ஆணாதிக்க சிந்தனை மிகத் துல்லியமாகத் தெரிகின்றது.

அதுமட்டுமன்றி தமிழ்நாட்டில் கடவுளுக்கு பொட்டுக்கட்டி விடுதல் எனக் கூறி “ தேவதாசி” முறை மூலம் பெண்கள் கட்டாயமாக பாலியல்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரே தமிழ்நாட்டில் 1947 ஒக்டோபரில் தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு இம்முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

பாலியல் சேவை வழங்கும் வசந்தா, அவருடைய உறவினர்கள் மற்றும் கிராம சேவகருக்கும் இடையே நடந்த முறுகலில் கிராமசேவகர் தாக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த விடயத்தில் வசந்தாவினுடைய வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் வன்முறை அவரது சமூக பிறழ்வான வாழ்வியலை வெளிப்படுத்தி நிற்கின்றது. மறைமுகமாக வசந்தா அவர் வாழும் சமூகம் அவரை நடத்தும் விதத்திற்கான எதிர்வினையாகவும் பார்க்க முடியும். உண்மையில் பாலியல் தொழிலில் விரும்பியோ விரும்பாமலோ ஈடுபடும் பெண்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்கள் மறைமுகமாக பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள். பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு முகம் கொடுக்குகிறார்கள். இத்தொழிலில் ஈடுபடும் பெண்களை பாதுகாக்கும் வகையிலான சட்டங்கள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முகநூலில் அம்பலப்படுத்தியோ அல்லது அவமானப்படுத்தியோ விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. இப்படியான தான் தோற்றித்தனமான நடவடிக்கைகள் விபச்சாரத்தின் பின்னாலுள்ள சமூகப் பொருளாதார காரணிகளை இல்லாதொழிக்காது.

மேலும் வசந்தா போன்ற பெண்கள் இல்லாவிட்டால் இந்தப் பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்களின் சமூகத்தில் சாதாரண பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது. அனுராதபுரத்தில் அந்த மருத்துவப் பெண்ணுக்கு நடந்தது வித்தியாவுக்கு நடந்தது தான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பெண்களுக்கு நடக்கும். ஒருவகையில் வசந்தா போன்ற பாலியல் சேவையை வழங்குபவர்கள் வீதிகளில் சென்றும் சமூக வலைத்தளங்களிலும் பாலியல் வன்புணர்வையும் பாலியல் வக்கிரத்தையும் கொட்டாமலிருக்க சில வசந்தாக்கள் பலிக்கடாவாக வேண்டியுள்ளது. தமிழ் தலிபான்களான ஊழல் ஒழிப்பு வன்னி அணி, ஊசி அர்ச்சுனா லண்டன் தமிழ் அடியான், வம்பன் டொட்கொம், எஸ் கே கிருஷ்ணா போன்றோரின் எழுத்துக்கள் கருத்துக்கள் பாலியல் வக்கிரத்தின் வெளிப்பாடே. அதனை மறைக்க இவர்கள் ஓழுக்க சீலர்களாக வேடம் போடுகின்றனர்.

இதே நிலை தான் சுஜூகூல் உடன் இரவுகளில் சல்லாபித்தவர்கள், பொழுது புலர்ந்ததும் பெரிய ஒழுக்க சீலர்களாகி ஆனையிறவுத் தாக்குதல் பாட்டையும் போட்டுக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு லாச்சப்பலில் 30 கடையர்கள் சேர்ந்து ஒரு பெண்ணைத் தாக்கி அதனை விடியோபதிவாகப் போட்டு வெற்றிக் களிப்பில் திளைத்தனர். இவர்கள் இப்போது மீண்டும் சுஜூகூலுடன் இப்போது பொழுதுபட்டதும் ரிக்ரொக்கில் சல்லாபிக்கின்றனர்.

 

பெண்கள் அமைப்புகள் ஏன் இந்தப் பெண்களுக்காகக் குரல் எழுப்பவில்லை? 

பெண்கள் அமைப்புகள் ஏன் இந்தப் பெண்களுக்காகக் குரல் எழுப்பவில்லை?

 

பெண்கள் உரிமைக்காக போராடுகிறோம் என்று கூறிக் கொண்டு, அதையே பிழைப்பாக செய்யும் பெண் போராளிகளின் குரல்கள் ஏன் கேட்பதில்லை. பெண்களை முன்னேற்றத்துக்கு என கூறிக் கொண்டு அரசார்பற்ற நிறுவனங்களின் உதவிப் பணத்தில் கூடிக் கதைப்பதும், புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவதுடன் அவர்களது போராட்டங்கள் முடிந்து விடுகின்றன.

அதேநேரம் பெண்கள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சக தோழிகள் தமது அரசியல் சுய இலாபத்திற்காக பெண்கள் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுக்கு துணையாக நிற்கும் போதும் இப் பெண்கள் அமைப்புகளில் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதும் இல்லை. தமது தோழிகளை கண்டிப்பதும் இல்லை. மாறாக தவறான ஆண்களுக்கு அரசியலில் முகவரி தேடிக் கொடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளரான உமா சந்திர பிரகாஷ் போன்ற பெண்களை ஆதரிக்கிறார்கள். பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த, வன்புணர்ந்த குடுமி ஜெயந்திரனை ஐக்கிய மக்கள் சக்திக்குள் யாழ் மாவட்ட அமைப்பாளராகக் கொண்டு வந்தவர் இந்த உமா சந்திர பிரகாஷ். இப்பெண்கள் அமைப்பில் உள்ளவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.

தற்போது தென்னிலங்கையை மையமாக கொண்டு இயங்கும் பெண்கள் அமைப்புக்கள் மேட்டுக் குடிப் பெண்களின் பொழுதுபோக்கு மையங்களே. அவர்கள் சாமானிய பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். இவ்வாறான அமைப்புகளில் உள்ள பெண்களுக்கு சாமானிய பெண்களின் வலியும் பிரச்சினைகளும் தெரிந்திருக்கப் போவதில்லை. இவர்கள் தங்களை பிரபல்யப்படுத்திக் கொண்டு அரசியலிலும் அதிகாரத்திலும் பங்கெடுக்கவே ஆசைப்படுகின்றனர்.

பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் பற்றியோ நாளாந்த பிரச்சினைகள் பற்றியோ அவர்களுக்கு அக்கறையில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்களே தமக்காக துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் தலிபான்களாகும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி: 

தமிழ் தலிபான்களாகும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி:

ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதாகவே காட்டி வந்தது. கடந்த மாதம் யாழில் தீயில் எரிந்து இறந்த சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீஸ்க்காக குரல்கொடுத்து கட்டியெழுப்பிய விம்பம் படிப்படியாக உடைந்து வருகின்றது.

சமீபத்தில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி கையிலெடுத்துள்ள மூன்று பெண்களின் விவகாரமும் தமிழ் ஆண்களின் ஆணாதிக்க மனோபாவத்தினை அடக்குமுறை மனோபாவத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றது. அவர்கள் சட்டவிரோத அல்லது சமூகப் பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடும் பெரிய இடங்களில் இருக்கும் பெண்களில் கைவைக்கவில்லை. மாறாக பெரிய பின்புலம் இல்லாத ரிக்ரொக்கில் வீடியோ போடும், யூரியூப்பில் செய்தி வாசிக்கும் மற்றும் தனது வாழ்வாதாரத்திற்கு பாலியல் தொழில் செய்யும் பெண்ணும் தான் கண்ணில் பட்டுள்ளார்கள்.

ரிக்ரொக் சாளினி பற்றிய ஊழல் ஒழிப்பு வன்னி அணி வெளியிட்ட முதல்ச் செய்தியிலேயே எடுத்த எடுப்பிலேயே அவர் விபச்சாரத் தொழில் புரிகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதற்கு ஆதாரமாக சாளினியின் நிர்வாண புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டிருந்தன. அப்படி பதிவேற்றப்பட்ட படங்களில் பெண்ணின் முகம் மறைக்கப்படவில்லை. அந்தப் படங்களில் தோன்றும் ஆணின் முகம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்தது. முதலில் அந்தப் படங்களில் தோன்றிய பெண் சாளினி தானா? என்பதே உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த மெத்தப்படித்த மூன்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றதாக சொல்லித திரியும் மேதாவி எம்பி இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கூட ஊரைக் கூட குறிப்பிட்டு சாளினி என்னும் பெண் விபச்சாரம் செய்வதாக உரையாற்றியிருந்தார். இதைவிட வேறு என்ன அறியாமை இருக்க முடியும். பொறுப்புள்ள ஒரு பதவியிலிருக்கிற ஒரு மக்கள் பிரதிநிதி தீர விசாரிக்காமல் ஒரு பெண்ணின் சுயமாரியாதை மற்றும் மாண்பை பாராளுமன்றத்தில் ஏலம் போட எம்பி அர்ச்சுனா இராமநாதனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

சாளினி மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிய ஊழல் ஒழிப்பு வன்னி அணி இப்போது இந்த விவகாரத்தில் பின்வாங்கியுள்ளது. ரிக்ரொக்கில் தனக்கு ஆபாசமாக பேசி கொமன்ட் அடிப்பவர்களுக்கு அதேபாணியில் ஆபாசமாக பேசி பதிலழித்த வீடியோக்களையும் ஒரு சில நிர்வாண படங்களையும் வைத்துக் கொண்டு சாளினி பாலியல் தொழிலில் ஈடுபடும் விபச்சாரி என பிரச்சாரத்தில் ஈடுபட்டது சம்பந்தப்பட்ட முகநூல். தற்போது சாளினி தங்களை தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டதாகவும், அவர் இனிமேல் ஆபாசமாக பேச மாட்டார். அவர் தொடர்பில் வெளிவந்த படங்கள் போலியானவை. அவருடைய முன்னாள் காதலன் தான் அப்படங்களை எடுத்தவர் என்றும். அந்த காதலன் தற்சமயம் பொலிஸாரால் தேடப்பட்டு வருவதகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சாளினி மன்னிப்புக் கேட்கும் காணொளி ஒன்றையும் பதிவேற்றியுள்ளனர்.

ஊழல் ஒழிப்பு வன்னி அணியும் அவர்களை முகநூலில் பின்தொடர்பவர்களும் சாளினிக்கு மன்னிப்பு கொடுத்து விட்டார்கள் என்றும் சாளினி திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இறுதியில் சாளினி என்ற அபலை பெண் மீது சுமத்தப்பட்ட பழிச்சொல்லுக்கு யாரும் மனம் வருந்தவில்லை. பாராளுமன்றம் வரை சாளினி பற்றிய கிசுகிசுவை பாராளுமன்ற கன்சேர்ட்டில் பதிவு செய்த எம்பி இராமநாதன் அரச்சுனாவும் வெட்கப்படவும் இல்லை.

சாளினி மீது நடந்தது அப்பட்டமான ஊடக அடக்குமுறை. சாளினியை விபச்சாரி என மிரட்டி அவரை அடிபணிய வைத்துள்ளார்கள். கலாச்சார மற்றும் பண்பாட்டு காவலர்கள் ஏன் ரிக்ரொக்கில் மணிக்கணக்கில் ஆபாசமாக பேசும் ஆண்களை வெளிப்படுத்தவில்லை. அவர்களுக்கு வகுப்பு எடுக்கவில்லை. தமிழர்களின் கலாச்சாரத்தை தமிழ்ப் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டும். பெண்கள் எப்படி தமிழ்க் கலாச்சாரத்தை பேணுகிறார்கள் என்பதை தமிழ் ஆண்கள் கண்காணிப்பது மட்டும் தான் அவர்களின் தலையாய கடமை. அர்ச்சுனா மற்றும் அர்ச்சுனாவின் நண்பர்கள் ரிக்ரொக்கில் சமூக வலைத்தளங்களில் பாலியல் வக்கிரமாக பதிவுகளை மேற்கொண்டு வருபவர்கள். அதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை.

சாளினிக்கு ஆபாச கேள்விகளை அனுப்பிய ஆண்கள் தமிழர் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை. அவர்கள் சமூக சீரழிவுக் காரணமாகவில்லை சாளினி நீ பெண். நீதான் பார்த்து பேச வேண்டும். உன்னுடைய எல்லை இவ்வளவு தான் என்று வரையறை செய்ய ஊழல் ஒழிப்பு அணி வன்னி உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை. எப்படியோ பெரிய பின்புலம் எதுவும் இல்லாவிடினும், சாளினி தானாகவே முன் வந்து எம்பி அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ் தலிபான்கள்: வம்பன்கள், ஊசி அர்ச்சுனா, லண்டன் தமிழ் அடியான், ஊளையிடும் அணி, புலனாய்வுப் புண்ணாக்குகள் – பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்

தமிழ் தலிபான்கள்: வம்பன்கள், ஊசி அர்ச்சுனா, லண்டன் தமிழ் அடியான், ஊளையிடும் அணி, புலனாய்வுப் புண்ணாக்குகள் – பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்

 

பெண்கள் எப்படி வாழ வேண்டும், என்ன படிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வெளியில் வர வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் , யாரை திருமணம் செய்ய வேண்டும், ஏன் யாருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் மற்றும் யாருக்கு பிள்ளை பெற வேண்டும் என்பதை கூட போலி முகவரியுடன் வரும் சமூக வலைத்தளங்கள் முடிவு செய்யத் தொடங்கிவிட்டன. எல்லா மோதல்களிலும் பெண்கள் தான் இறுதியில் இலக்கு வைக்கப்படுவார்கள். அதேபோன்று தான் சமூக வலைத்தளங்களிலும் நடக்கின்றது.

ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா உ அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், வம்பன் டொட்கொம், எஸ் கே கிருஷ்ணா போன்றோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அடாவடித் தனங்கள், தலிபான்களிலும் பார்க்க மோசமானதாக மாறி வருகின்றது. இவர்கள் சமீபகாலங்களில் வெளியிட்டு வரும் பதிவுகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் புகார்கள் அனைத்தும் எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கின்றன.

பாலின சமத்துவக்கல்வி பாலியல் குற்றங்களை குறைக்கும் !

பாலின சமத்துவக்கல்வி பாலியல் குற்றங்களை குறைக்கும்

 

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை விடுதியில் வைத்து பெண் வைத்தியரை கத்தி முனையில் பாலியல் துன்புறுத்தல் செய்த சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்றும், அவர் பௌத்த தேரராகவும் இருந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளையும் கண்களையும் கட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் மருத்துவருக்கு நடந்த துஷ்பிரயோகத்தை கண்டித்து விரைந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி இலங்கையின் பல வைத்தியசாலை வைத்தியர்களும் நேற்றைய தினம் முழுமையான பணிப்புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்புப் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேமாதிரியொரு சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது. நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் ஊழியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையில் துப்பரவு பணியில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய வைத்திய சாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்கள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புலம்பெயர் தமிழர் ஒருவரும் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த நபர் யாழ்ப்பாணம் – நயினாதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் இரட்டை குடியுரிமை கொண்ட நபர் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சுரண்டல்கள் தொடர்பிலான சமூகத்தின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும்.

கல்வி கொள்கைகளை வகுப்பவர்கள் பாலின சமத்துவம், பாலியல் கல்வி மற்றும் மனிதாபிமான சிந்தனைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பழைய கள்ளை புதிய மொந்தையில் பரிமாறும் விந்தன் !

பழைய கள்ளை புதிய மொந்தையில் பரிமாறும் விந்தன் !

 

ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னம் தென்னிலங்கைக்காக காசு பெற்று களமிறங்கியது என்கிறார் கட்சி தாவிய விந்தன். இவர் ஊரறிந்த இரகசியத்தை பரகசியமாக்கினார். இந்த விடயம் ஏற்கனவே தேசம்நெற்றில் பலதடவை வெளிவந்துள்ளது.

ரெலோ அமைப்பிலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட விந்தன் கனகரட்ணம் என்பவர் அண்மையில் தமிழரசுக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், தமிழீழம் கேட்ட அரசியல்வாதிகள் வடக்கிற்கு நிதி ஒதுக்கியமைக்கு கை தட்டுவது மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசியலாக பார்க்கப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு கை தூக்கி ஆதரவு கொடுத்ததை விந்தன் கடுமையாக விமர்சிக்கின்றார். என்பிபி அரசாங்கம் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை. அப்படியிருக்க வெறுமனே வடக்குக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு கை தூக்கிய செல்வம் எம்பி தமிழ் மக்களுக்கு தூரோகம் இழைத்துவிட்டதாகவும் விந்தன் குற்றம் சாட்டினார்.

மேலும் விந்தன் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தை பயன்படுத்தி தேர்தல் அரசியலுக்காக பத்து கோடி வரை பிரபல தென்னிந்திய பட தயாரிப்பு நிறுவனமான லைக்‌கா சுபாஸ்கரனிடமிருந்து பெற்றதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். ரெலோவால் வெளியேற்றப்பட்ட விந்தன் கோபத்தில் கட்சியின் உள் இரகசியங்களை எல்லாம் பகிரங்கப்படுத்துகிறார் என ரெலோ வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

வாள்வெட்டு குழுவினரை பாதுகாத்து பிணை எடுக்கும் சர்ச்சை பெண் சட்டத்தரணி சர்மினி

வாள்வெட்டு குழுவினரை பாதுகாத்து பிணை எடுக்கும் சர்ச்சை பெண் சட்டத்தரணி சர்மினி

 

கொள்ளையை தடுக்க வந்த நபரின் கைவிரல் வெட்டிய சந்தேகத்திற்குரிய பிரதான வாள்வெட்டுக்காரர்கள் மூவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 3ஆம் திகதி கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டில் நபரொருவரின் கைவிரல் வெட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களிடமிருந்து வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைபொருள் கைபற்றப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த வாள்வெட்டு குழுவின் தலைவனாக செயற்படும் நபரை சட்டத்தரணி சர்மினி பொலிஸில் தன் சொந்த வாகனத்தில் கொண்டு வந்து பாரப்படுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட வாள் வெட்டுக்குழுவின் வழக்குகளுக்கு சட்டத்தரணி சர்மினியே ஆஜராவதாகவும் தெரியவந்துள்ளது. வழமையாகவே சட்டத்தரணி சர்மினி பாலியல் குற்றவாளிகளுக்கும் , சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளுக்குமே வழக்குகள் பேசுவதாக கூறப்படுகிறது.

இஞ்தேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தம்முடைய பண பலத்தை பயன்படுத்தி பிணையில் வெளியே வருவது வாடிக்கையாகி விட்டதாக மக்கள் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு பிணையில் வெளியே வருபவர்கள் மீண்டும் தமது வாள்வெட்டு தொடங்கி போதைப்பொருள் கடத்தல் வரையான சமூக சீரழிவு செயற்பாடுகளிலும் தைரியமாக ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. காப்பாற்ற சட்டத்தரணி சர்மினி மற்றும் விஸ்வலிங்கம் திருக்குமரன் மற்றும் கனகரட்ணம் சுகாஷ் போன்றோர் இருக்கும்வரை சமூக விரோத நடவடிக்கைகள் தொடரும் .

“என் கனவு யாழ் “அங்கஜன் இராமநாதன் எரிபொருளிலும் ஊழல் 

“என் கனவு யாழ் “அங்கஜன் இராமநாதன் எரிபொருளிலும் ஊழல்

தேவைக்கு அதிகமாக வாகனங்களையும் அதிகப்படியான எரிபொருளையும் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தை ஊழல் செய்த மூவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபகச மற்றும் குழுக்களின் முன்னாள் துணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதன்படி தங்கள் பதவிக் காலத்தில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஜனவரி 1, 2024 முதல் ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார், மேலும் எரிபொருளுக்காக 33 மில்லியன் செலவிட்டுள்ளார்.துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச 2024 இல் ஆறு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார், இதன் செலவு 13 மில்லியன் ஆகும். அப்போதைய குழுக்களின் துணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் 2024 இல் எரிபொருளுக்காக 7 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய நான்கு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார்,” என்று ரத்நாயக்க கூறினார்.