பெண்கள் அமைப்புகள் ஏன் இந்தப் பெண்களுக்காகக் குரல் எழுப்பவில்லை? 

பெண்கள் அமைப்புகள் ஏன் இந்தப் பெண்களுக்காகக் குரல் எழுப்பவில்லை?

 

பெண்கள் உரிமைக்காக போராடுகிறோம் என்று கூறிக் கொண்டு, அதையே பிழைப்பாக செய்யும் பெண் போராளிகளின் குரல்கள் ஏன் கேட்பதில்லை. பெண்களை முன்னேற்றத்துக்கு என கூறிக் கொண்டு அரசார்பற்ற நிறுவனங்களின் உதவிப் பணத்தில் கூடிக் கதைப்பதும், புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவதுடன் அவர்களது போராட்டங்கள் முடிந்து விடுகின்றன.

அதேநேரம் பெண்கள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சக தோழிகள் தமது அரசியல் சுய இலாபத்திற்காக பெண்கள் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுக்கு துணையாக நிற்கும் போதும் இப் பெண்கள் அமைப்புகளில் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதும் இல்லை. தமது தோழிகளை கண்டிப்பதும் இல்லை. மாறாக தவறான ஆண்களுக்கு அரசியலில் முகவரி தேடிக் கொடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளரான உமா சந்திர பிரகாஷ் போன்ற பெண்களை ஆதரிக்கிறார்கள். பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த, வன்புணர்ந்த குடுமி ஜெயந்திரனை ஐக்கிய மக்கள் சக்திக்குள் யாழ் மாவட்ட அமைப்பாளராகக் கொண்டு வந்தவர் இந்த உமா சந்திர பிரகாஷ். இப்பெண்கள் அமைப்பில் உள்ளவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.

தற்போது தென்னிலங்கையை மையமாக கொண்டு இயங்கும் பெண்கள் அமைப்புக்கள் மேட்டுக் குடிப் பெண்களின் பொழுதுபோக்கு மையங்களே. அவர்கள் சாமானிய பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். இவ்வாறான அமைப்புகளில் உள்ள பெண்களுக்கு சாமானிய பெண்களின் வலியும் பிரச்சினைகளும் தெரிந்திருக்கப் போவதில்லை. இவர்கள் தங்களை பிரபல்யப்படுத்திக் கொண்டு அரசியலிலும் அதிகாரத்திலும் பங்கெடுக்கவே ஆசைப்படுகின்றனர்.

பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் பற்றியோ நாளாந்த பிரச்சினைகள் பற்றியோ அவர்களுக்கு அக்கறையில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்களே தமக்காக துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *