“என் கனவு யாழ் “அங்கஜன் இராமநாதன் எரிபொருளிலும் ஊழல் 

“என் கனவு யாழ் “அங்கஜன் இராமநாதன் எரிபொருளிலும் ஊழல்

தேவைக்கு அதிகமாக வாகனங்களையும் அதிகப்படியான எரிபொருளையும் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தை ஊழல் செய்த மூவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபகச மற்றும் குழுக்களின் முன்னாள் துணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதன்படி தங்கள் பதவிக் காலத்தில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஜனவரி 1, 2024 முதல் ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார், மேலும் எரிபொருளுக்காக 33 மில்லியன் செலவிட்டுள்ளார்.துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச 2024 இல் ஆறு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார், இதன் செலவு 13 மில்லியன் ஆகும். அப்போதைய குழுக்களின் துணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் 2024 இல் எரிபொருளுக்காக 7 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய நான்கு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார்,” என்று ரத்நாயக்க கூறினார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *