கிருஷ்ணபுரம் கிராம அலுவலரை தாக்கிய பெண்கள் கைது !

கிருஷ்ணபுரம் கிராம அலுவலரை தாக்கிய பெண்கள் கைது !

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 8 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று இத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. விநாயக புரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் என கூறப்படும் பெண்ணின் மகள் கிராம சேவகரிடம் நற்சான்றிதழ் பெற சென்றிருந்தார். அப்போது கிராம சேவகர் தாயின் தொழில் தொடர்பில் மகளிடம் சில கேள்விகள் கேட்டு நற்சான்றிதழ் வழங்குவதை இழுத்தடித்தால் ஏற்பட்ட முறுகல் நிலையே கிராம சேவகர் மீதான வன்முறை தாக்குதலாக முடிந்தது.

கைதான இரு பெண்களும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *