தமிழ் தலிபான்கள்: வம்பன்கள், ஊசி அர்ச்சுனா, லண்டன் தமிழ் அடியான், ஊளையிடும் அணி, புலனாய்வுப் புண்ணாக்குகள் – பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்
பெண்கள் எப்படி வாழ வேண்டும், என்ன படிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வெளியில் வர வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் , யாரை திருமணம் செய்ய வேண்டும், ஏன் யாருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் மற்றும் யாருக்கு பிள்ளை பெற வேண்டும் என்பதை கூட போலி முகவரியுடன் வரும் சமூக வலைத்தளங்கள் முடிவு செய்யத் தொடங்கிவிட்டன. எல்லா மோதல்களிலும் பெண்கள் தான் இறுதியில் இலக்கு வைக்கப்படுவார்கள். அதேபோன்று தான் சமூக வலைத்தளங்களிலும் நடக்கின்றது.
ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா உ அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், வம்பன் டொட்கொம், எஸ் கே கிருஷ்ணா போன்றோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அடாவடித் தனங்கள், தலிபான்களிலும் பார்க்க மோசமானதாக மாறி வருகின்றது. இவர்கள் சமீபகாலங்களில் வெளியிட்டு வரும் பதிவுகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் புகார்கள் அனைத்தும் எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கின்றன.