2025

2025

தேர்தல் பிரச்சாரத்தின் போது பணம் வழங்கினால் பதவி பறிபோகும் – எச்சரிக்கிறது பெஃப்ரல் !

தேர்தல் பிரச்சாரத்தின் போது பணம் வழங்கினால் பதவி பறிபோகும் – எச்சரிக்கிறது பெஃப்ரல் !

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தைப் பின்பற்றி தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட வேண்டியது சகல வேட்பாளர்களினதும் பொறுப்பாகும் என பெஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

பெப்பரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், தங்களது பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாம் தகுதியானவர் என வேட்பாளர் நிரூபிக்க வேண்டும். அத்துடன், ஊழல் இன்றி பொது சொத்துக்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படக்கூடியவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தநிலையில் தேர்தலில் வெற்றிபெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகத் தெரிவான ஒருவர், பிரசாரத்தின்போது, பொதுமக்களுக்குப் பணம் வழங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்படுமாயின் அவர் தமது பதவியை இழக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கிற்கு தடை !

இலங்கையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கிற்கு தடை !

 

இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஸ்டார் லிங்க்” இணைய சேவையின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்படும் வரை, இணைய சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் அனுமதி வழங்காது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

 

அதிகரிக்கும் பிரமிட் மோசடி – நிதி பற்றிய அறிவின்மையே காரணம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர் ! 

அதிகரிக்கும் பிரமிட் மோசடி – நிதி பற்றிய அறிவின்மையே காரணம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர் !

 

பிரமிட் போன்ற மோசடிக்குள் சிக்கிவரும் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

உங்கள் கையில் பணம் இருந்தாலும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், மோசடிக்கு ஆளாக நேரிடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. நிதி கல்வியறிவு மற்றும் அதைப் பற்றிய அறிவு இல்லாமை மக்கள் ஏமாற்றப்படுவதற்கான பிரதான காரணம் என கூறியுள்ள மத்திய வங்கி ஆளுநர், மக்களின் நிதி கல்வியறிவை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

 

இலட்சத்தை தாண்டிய வீட்டுவன்முறை முறைப்பாடுகள் !

இலட்சத்தை தாண்டிய வீட்டுவன்முறை முறைப்பாடுகள் !

 

இலங்கையில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் அதிகமாக அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரேணுகா ஜெயசுந்தரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான வழக்குகள் 2,252 பதிவாகியுள்ளன. பாலியல் அத்துமீறல்களுக்கு மேலதிகமாக, வீட்டு வன்முறை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இது தொடர்பில் ஆண்டுதோறும் சுமார் 130,000 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. பரவலான குறைவான அறிக்கையிடல் காரணமாக அந்த புள்ளிவிபரங்கள் பிரச்சினையின் உண்மையான அளவைக் குறைவாகக் குறிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினராக சுயேட்சைக்குழுவில் தெரிவான அர்ச்சுனா இராமநாதன் வீட்டுவன்முறைகளில் ஈடுபட்டவர் என பா உஅர்ச்சுனாவின் முன்னாள் மனைவியின் சினேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். பா உ அர்ச்சுனா அவரது முன்னாள் மனைவியோடு வாழ்ந்த கொக்குவில் வீட்டின் அயலவரான மாகாணசபை உறுப்பினரும் அடிக்கடி தகராறுகளும் சத்தங்களும் கேட்பதாகத் தெரிவித்து இருந்தார்.

தந்தை குடித்துவிட்டு வந்து தனது தாயை அடிப்பதாக ரிக்ரொக் சாளினி தன்னுடைய பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தில் பெண்கள் மிகமோசமான வீட்டு வன்முறைக்கு ஆளாவதற்கான பல ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது. மேலும் பெண்கள் பொது வெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் உளவியல் ரீதியாகவும் வஞ்சிக்கப்படுகின்றனர். இதனால் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளது. அண்மையில் செய்கைமுறைக் கருத்தரிப்பின் மூலம் தாய்மை அடைந்த ஆசிரியயை மனம் நோகும் வண்ணம் கிண்டல் கேலி செய்ததால் அவர் மன உழளச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பா உ அர்ச்சுனா, அர்ச்சுனா அடியான் மற்றும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஆகியன பெண்களை விபச்சாரிகள் என்று முத்திரை குத்தி அவர்களின் நிர்வாணப் படங்களை பொதுவெளியில் உலாவவிட்டு வருகின்றனர். இது பெண்களுக்கு எதிரான மிக மோசமான வன்முறையாக உள்ளது.

 

மீண்டும் பாராளுமன்றம் போகாமல் ஓயமாட்டேன் – டக்ளஸ் தேவானந்தா

மீண்டும் பாராளுமன்றம் போகாமல் ஓயமாட்டேன் – டக்ளஸ் தேவானந்தா

 

உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருடங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போன்று விடயங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் அதிகாரம் தற்போது இல்லை. ஆனாலும் அண்மைய அரசியல் பின்னடைவை சவாலாக எடுத்து அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சில இடங்களையாவது கைப்பற்றுவதனூடாக மட்டுமே எதிர்கால அரசியல் செயற்பாடுகளை தக்க வைத்துக்கொள்ள முடியும். இதில் ஈபிடிபி எவ்வளவுதூரம் வெற்றிபெறும் என்பது மே 6இல் தெரியவரும்.

இந்தியாவின் அனைத்து முதலீடுகளையும் இழக்கும் நிலையில் இலங்கை – எச்சரிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க !

இந்தியாவின் அனைத்து முதலீடுகளையும் இழக்கும் நிலையில் இலங்கை – எச்சரிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க !

 

இந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான பல வழிகளை நான் ஆராய்ந்தேன். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய அரசாங்கம் மன்னாரில் அதானி புதுப்பிக்கத்தக்க திட்டத்தைத் தொடரத் தவறிவிட்டது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அதானி பசுமை எரிசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை என்றார். இந்தப் போக்கு அனைத்து இந்திய முதலீடுகளையும் மோசமாக பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி வேட்பாளர் ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கியுள்ளார் !

தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி வேட்பாளர் ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கியுள்ளார் !

யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றும் இ. தனுசன் என்பவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பான காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தார். முறைப்பாட்டுக்கு அமைவாக தாக்குதலை மேற்கொண்ட இ. தனுசன் என்ற முகாமையாளருக்கு துணைபோன தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் நேற்றைய தினம் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைதான மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட இ. தனுசன் தலைமறைவாகியுள்ளார். நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

தையிட்டியை வைத்து இனக்கலவரத்தை ஏற்படுத்த சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகள் தீவிர முயற்சி !

தையிட்டியை வைத்து இனக்கலவரத்தை ஏற்படுத்த சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகள் தீவிர முயற்சி !

 

சிங்கள பௌத்த நாட்டில் தையிட்டி திஸ்ஸ பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது. இது அரசாங்கத்தின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சரத் வீரசேகர, தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது. வடக்கில் பௌத்த மத உரிமைகள் மறுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தை இனவாதிகளுக்கு அரசாங்கம் வழங்கி விட்டதா ? என்று எண்ணத்தோன்றுகிறது. இதனை மறைப்பதற்காகவா, தலதா மாளிகை உற்சவம் நடத்தப்படுகிறது . அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையில் பௌத்த மதம் போதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காத தமிழ் தேசிய சட்டத்தரணிகளின் கட்சிகள் தேர்தல் காலங்கள் என்றவுடன் தையிட்டியையும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களையும் அரசியலாக்கி வருகின்றனர். இதன் வெளிப்பாடாக ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 23 இல் தையிட்டி விகாரை முன்பாக ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது தெரிந்ததே. இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் இனவாத அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருவதை விரும்பாத சிங்கள – தமிழ் இனவாத சக்திகள் தங்கள் வாக்கு வங்கிக்காக ஒரு இனக்கலவரத்தையும் சில உயிர்ப்பலிகளையும் எதிர்பார்த்து தவம் கிடக்கின்றனர்.

கருணா அம்மான் இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேருக்கு பிரித்தானியா தடை !

கருணா அம்மான் இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேருக்கு பிரித்தானியா தடை !

 

2009 ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மூவருக்கும் மற்றும் ஒரு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து சென்ற தளபதி ஒருவர் மீதும் என பிரித்தானியா நேற்று திங்கட்கிழமை 24 ஆம் திகதி மார்ச் தடைகளை விதித்துள்ளது.

அந்த வகையில் தடை செய்யப்பட்ட நால்வரும் பிரித்தானியாவுக்கு பயணம் செய்வதற்கான தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோர் மீது இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இத்தடை போடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற வேளையில் கருணா விடுதலைப் புலிகளில் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருந்தார். பின்னர் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கருணா இலங்கை இராணுவத்திற்காகப் பணியாற்றும் ஒரு துணை ராணுவக் குழுவை வழிநடத்தினார்.

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகாலப் போரில் 80,000 – 100,000 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. ஆனால் போரில் கொல்லப்பட்ட போராளிகள் உட்பட மக்களின் எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகிறது.

போர் முடிவடைந்து நீண்ட காலத்திற்குப் பிறகும், இலங்கையின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது நீதிக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்குதல், கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் போரில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீதும் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.

இலங்கை அரசு தொடர்ந்தும் போர்க்குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது. தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான சர்வதேச விசாரணைக்கும் ஒத்துழைப்பை வழங்க இலங்கை தயாராக இல்லை. அதேநேரம் இலங்கை அரசு இவ் விவகாரத்தில் உள்நாட்டு பொறிமுறைக்குள் விசாரணை நடத்த தயாராக உள்ளதாக கூறி வருகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தவரை உள்ளக விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று சர்வதேச விசாரணையையே கோருகிறார்கள்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி ஒரு அறிக்கையில், “இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது, உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, அவை இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார்.

பிரித்தானியா இலங்கையில் உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தடை விதித்ததை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என 15 வருடங்களாக போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடுகிறார்கள். மறுபக்கம் என்பிபி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

செய்தித்துறையில் புதிய பரிணாமம் முதலாவது AI நாளிதழ் விற்பனைக்கு !

செய்தித்துறையில் புதிய பரிணாமம் முதலாவது AI நாளிதழ் விற்பனைக்கு !

இத்தாலியில் “இல் போக்லியோ” நாளிதழ் முழுவதும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து வெளிவரும் “இல் போக்லியோ” நாளிதழ் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.

இந்த 4 பக்க நாளிதழில் தலைப்புகள், செய்திகள், தொகுப்புகள், எழுத்துகள் என அனைத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும் செய்தியாளர்கள் தாங்கள் சேகரித்த செய்தியை சொன்னால் மட்டும் போதும், மற்றதையெல்லாம் அது பார்த்துக் கொள்ளும் என்றும் நாளிதழின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.