மீண்டும் பாராளுமன்றம் போகாமல் ஓயமாட்டேன் – டக்ளஸ் தேவானந்தா

மீண்டும் பாராளுமன்றம் போகாமல் ஓயமாட்டேன் – டக்ளஸ் தேவானந்தா

 

உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருடங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போன்று விடயங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் அதிகாரம் தற்போது இல்லை. ஆனாலும் அண்மைய அரசியல் பின்னடைவை சவாலாக எடுத்து அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சில இடங்களையாவது கைப்பற்றுவதனூடாக மட்டுமே எதிர்கால அரசியல் செயற்பாடுகளை தக்க வைத்துக்கொள்ள முடியும். இதில் ஈபிடிபி எவ்வளவுதூரம் வெற்றிபெறும் என்பது மே 6இல் தெரியவரும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *