இலட்சத்தை தாண்டிய வீட்டுவன்முறை முறைப்பாடுகள் !

இலட்சத்தை தாண்டிய வீட்டுவன்முறை முறைப்பாடுகள் !

 

இலங்கையில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் அதிகமாக அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரேணுகா ஜெயசுந்தரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான வழக்குகள் 2,252 பதிவாகியுள்ளன. பாலியல் அத்துமீறல்களுக்கு மேலதிகமாக, வீட்டு வன்முறை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இது தொடர்பில் ஆண்டுதோறும் சுமார் 130,000 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. பரவலான குறைவான அறிக்கையிடல் காரணமாக அந்த புள்ளிவிபரங்கள் பிரச்சினையின் உண்மையான அளவைக் குறைவாகக் குறிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினராக சுயேட்சைக்குழுவில் தெரிவான அர்ச்சுனா இராமநாதன் வீட்டுவன்முறைகளில் ஈடுபட்டவர் என பா உஅர்ச்சுனாவின் முன்னாள் மனைவியின் சினேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். பா உ அர்ச்சுனா அவரது முன்னாள் மனைவியோடு வாழ்ந்த கொக்குவில் வீட்டின் அயலவரான மாகாணசபை உறுப்பினரும் அடிக்கடி தகராறுகளும் சத்தங்களும் கேட்பதாகத் தெரிவித்து இருந்தார்.

தந்தை குடித்துவிட்டு வந்து தனது தாயை அடிப்பதாக ரிக்ரொக் சாளினி தன்னுடைய பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தில் பெண்கள் மிகமோசமான வீட்டு வன்முறைக்கு ஆளாவதற்கான பல ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது. மேலும் பெண்கள் பொது வெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் உளவியல் ரீதியாகவும் வஞ்சிக்கப்படுகின்றனர். இதனால் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளது. அண்மையில் செய்கைமுறைக் கருத்தரிப்பின் மூலம் தாய்மை அடைந்த ஆசிரியயை மனம் நோகும் வண்ணம் கிண்டல் கேலி செய்ததால் அவர் மன உழளச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பா உ அர்ச்சுனா, அர்ச்சுனா அடியான் மற்றும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஆகியன பெண்களை விபச்சாரிகள் என்று முத்திரை குத்தி அவர்களின் நிர்வாணப் படங்களை பொதுவெளியில் உலாவவிட்டு வருகின்றனர். இது பெண்களுக்கு எதிரான மிக மோசமான வன்முறையாக உள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *