தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி வேட்பாளர் ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கியுள்ளார் !

தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி வேட்பாளர் ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கியுள்ளார் !

யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றும் இ. தனுசன் என்பவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பான காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தார். முறைப்பாட்டுக்கு அமைவாக தாக்குதலை மேற்கொண்ட இ. தனுசன் என்ற முகாமையாளருக்கு துணைபோன தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் நேற்றைய தினம் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைதான மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட இ. தனுசன் தலைமறைவாகியுள்ளார். நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *