2025

2025

டொரெண்டோ கொலை சம்பவம் – இரண்டு யாழ்ப்பாணத்தவர்கள் கனடாவில் கைது !

டொரெண்டோ கொலை சம்பவம் – இரண்டு யாழ்ப்பாணத்தவர்கள் கனடாவில் கைது !

கனடா- டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கொலைச் சம்பவத்தின் பின்னர், அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கெமெரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31 மற்றும் 34 வயதுடைய இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேலை வாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று தற்போது அங்கு குடியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த இருவரும் கனடாவில் நடந்த மூன்று கொலை சம்பவங்கள் மற்றும் பல சொத்து திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளன. சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இருவருக்கும் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் மீதான வழக்கு – தள்ளுபடி செய்தது கனேடிய உச்ச நீதிமன்றம் !

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் மீதான வழக்கு – தள்ளுபடி செய்தது கனேடிய உச்ச நீதிமன்றம் !

 

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் என்று அழைக்கப்படும் சட்டமூலம் 104 ஐ எதிர்த்து இலங்கை குழுக்கள் தாக்கல் செய்த வழக்கை கனேடிய உச்ச நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்ராறியோ மாவட்ட சட்டமற்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியையும் ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கிழமையாக குறிப்பிடப்படுகிறது. மே 2009 இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிக் கட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் நேரமாக இது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு ஒன்ராறியோ சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த 104 சட்டத்தை ரத்து செய்யும் முயற்சியில் பல சிங்கள அமைப்புகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஒன்ராறியோ நீதிமன்றங்களில் இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக, தொடர் தோல்வியடைந்த சட்ட முயற்சிகளைத் கருத்தில் கொண்டு, கனேடிய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதீத போதை; இளைஞன் சாவு!

அதீத போதை; இளைஞன் சாவு!

 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் அதீத போதை காரணமாக கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையிலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவுலும், உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் – தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட நீதிமன்றம் கட்டளை !

உள்ளூராட்சி வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் – தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட நீதிமன்றம் கட்டளை !

யாழ்.மாநகரசபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளுக்காக தமிழ் மக்கள் கூட்டணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுமாறு உச்ச நீதிமன்றம் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.

சட்டமா அதிபர் அலுவலகத்தில் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கும் இலங்கை தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுக்கும் இடையில் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து அக்கூட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக. ஒரு இணக்கப்பாட்டுக்கு வருமாறும். அவ்வாறு இணைக்கப்பாட்டுக்கு வராத மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

அதேவேளை , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 09 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தையிட்டி விகாரை விவகாரம் – தென்னிலங்கையை உசுப்பிவிடுகிறார் விமல் வீரவங்ச !

தையிட்டி விகாரை விவகாரம் – தென்னிலங்கையை உசுப்பிவிடுகிறார் விமல் வீரவங்ச !

பௌத்தத்துக்கு எதிரான தம்புத்தேகம வெள்ளையரே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச மேலும் குறிப்பிடுகையில், “தேர்தல் நெருங்கும் போது விகாரைகளுக்கு சென்ற ஜனாதிபதி, தன்னை ஒரு பௌத்த ஆதரவாளராக காட்டிக்கொண்டார். ஆனால், மறுபுறம் தையிட்டி விகாரையை சுற்றியிருந்த இராணுவத்தினரை உடனடியாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படாமையால் வெள்ளையர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தம்புத்தேகமவில் இருந்து வந்திருக்கும் வெள்ளையருக்கு எதிராகவும் அதுவே நடக்கும். நீங்கள் செய்த தவறுக்கு புத்த சாசனத்தின் முன் விழுந்து மன்னிப்பு கோருங்கள். நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோருங்கள். பௌத்தர்களின் புராண கால விகாரையான தையிட்டி விகாரை மீது கை வைக்க நினைக்க வேண்டாம். தையிட்டி திஸ்ஸ விகாரை மீது கை வைப்பதற்கு ஜனாதிபதி உட்பட யாருக்கும் உரிமை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது !

மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது !

மாணவி ஒருவரை தடியால் கையில் அடித்தமைக்காக பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வினாத்தாளை திருத்துவதற்காக மாணவர்களிடம் மாற்றிக் கொடுத்த ஆசிரியர், முறைகேடான வகையில் மதிப்பெண்களை தனக்கு அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து கண்டிக்கும் வகையில் அடித்துள்ளார். இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றையதினம் கைது செய்த பருத்தித்துறை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை ஒன்று கைதுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு வாகனம் செலுத்த வாழ்நாள் தடை !

மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு வாகனம் செலுத்த வாழ்நாள் தடை !

மதுபோதையில் தனியார் பேருந்தை ஓட்டியதற்காக, பேருந்து சாரதியின் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதிவான் சம்பிகா ராஜபக் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறையிலிருந்து களுத்துறைக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர், போக்குவரத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டு அவர், மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சாரதி தனது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததான வாதத்தின் அடிப்படையில், பாணந்துறை தலைமை நீதிவான் அவரது உரிமத்தை இடைநிறுத்தி அபராதம் விதித்தார்.

மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த நபர், அணி வகுப்பில் அடையாளங்காணப்பட்டார் !

மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த நபர், அணி வகுப்பில் அடையாளங்காணப்பட்டார் !

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர் சந்தேக நபரை அடையாளம் கண்டார்.

மார்ச் 10 ஆம் திகதி சந்தேக நபரால் கத்தி முனையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ குடியிருப்பிற்குள் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார் இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ ஊழியர்கள் ஒரு அடையாள வேலைநிறுத்தத்தையும் மேற்கண்டிருந்ததும் வனிக்கத்தக்கது.

வரி செலுத்த தயங்கும் இலங்கை மக்கள் – நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

வரி செலுத்த தயங்கும் இலங்கை மக்கள் – நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

வரி செலுத்துவோர் மத்தியில் வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கூறுகிறார்.

ஆட்சியாளர்கள் வரிப் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் வீணாக்குகிறார்கள் என்ற நீண்டகால குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை மக்கள் வரி செலுத்தத் தயங்குகிறார்கள். இருப்பினும், எமது நிர்வாகத்தின் கீழ் இதுபோன்ற தவறுகள் ஏற்படாததால், அதிக வரிகளை வசூலிக்க முடியும் என குறிப்பிடும் அனில் ஜயந்த பெர்னாண்டோஇது மக்களுக்கு அதிக நிவாரணத்தை வழங்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.