வரி செலுத்த தயங்கும் இலங்கை மக்கள் – நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ
வரி செலுத்துவோர் மத்தியில் வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கூறுகிறார்.
ஆட்சியாளர்கள் வரிப் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் வீணாக்குகிறார்கள் என்ற நீண்டகால குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை மக்கள் வரி செலுத்தத் தயங்குகிறார்கள். இருப்பினும், எமது நிர்வாகத்தின் கீழ் இதுபோன்ற தவறுகள் ஏற்படாததால், அதிக வரிகளை வசூலிக்க முடியும் என குறிப்பிடும் அனில் ஜயந்த பெர்னாண்டோஇது மக்களுக்கு அதிக நிவாரணத்தை வழங்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.