2010

2010

கிரிந்த துறைமுகத்தில் படகு கவிழ்ந்து இருவர் பலி; மூவர் மாயம்

அம்பாந்தோட்டை கிரிந்த துறைமுகத் திற்குட்பட்ட கடற்பரப்பில் நேற்று மாலை படகொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்திருப்பதுடன் மூவர் காணாமற் போயிருப்பதாகவும் மூவர் காயமடைந்திருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.

கடற்படை அதிகாரியொருவர் மற்றும் அவரது குடும்பத்தார் கடற்படைக்குச் சொந்தமான டிங்கி படகில் சவாரி செய்கையிலேயே கடல் சீற்றம் காரணமாக படகு அலையில் சிக்கி இவ்விபத்து நேர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சம்பவத்தின்போது படகில் எண்மர் பயணித்துள்ளனர்.

இவர்களுள் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறு பிள்ளையொன்றும் உயிரிழந்துள்ளது. மேலும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூவர் காணாமற் போயுள்ளனர்.

காயமடைந்த மூவருள் ஒருவர் திஸ்ஸ மஹாராம வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். காணாமற்போனவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக விஜித ஹேரத், அஜித் குமார, அர்ஜுன உட்பட அறுவருக்கு அழைப்பாணை

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட 6 பேருக்கு அழைப்பாணை அனுப்புமாறு காலி மாஜிஸ்திரேட் காமர் தென்னக்கோன் உத்தரவு பிறப் பித்தார்.

விஜித ஹேரத், அஜித் குமார, அர்ஜுன ரணதுங்க ஆகிய பாராளுமன்ற உறுப் பினர்களுக்கும் மாகாண சபை அமைச்சர் நளித் ஹேவகே மற்றும் அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் ஆகிய அறுவருக்கே இவ்வாறு அழைப் பாணை அனுப்புமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.

மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை மீளமைப்பு: இலங்கை – இந்தியா இன்று ஒப்பந்தம்

sri-lankan-railway.jpgமதவாச்சி யில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையை மீளமைப்பது தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் இன்று (17) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையிலான 106 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை நிர்மாணப் பணிகளை 2 வருட காலத்தில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை இந்தியாவின் இர்கொன் கம்பனி மேற்கொள்ள உள்ளது. இலங்கை சார்பாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவும் இந்தியா சார்பாக இந்திய தூதுவர் அசோக் கே. காந்த் ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளதாக அமைச்சு கூறியது. இந்நிகழ்வு போக்குவரத்து அமைச்சில் நடைபெறவுள்ளது. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையி லான ரயில் பாதை புலிகளினால் தகர்க்க ப்பட்டதையடுத்து ரயில் சேவைகள் 1990 ஜூன் மாதத்தில் இடை நிறுத்தப்பட்டது.

ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட உள்ளன. மதவாச்சியில் இருந்து மடு வரை யான 43 கிலோ மீட்டர் தூர பாதை முதல் கட்டமாகவும் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை இரண்டாம் கட்டமாகவும் நிர்மாணிக்கப் படும். இதன்போது 5 பிரதான ரயில் நிலையங்களும், 5 உப ரயில் நிலையங்களும் 4 பாலங்களும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்.

மாதோட்டம், திருக்கேதீஸ்வரம், நேரியகுளம் உட்பட ஐந்து இடங்களிலும் ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்ப ட்டுள்ளது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பாக இந்திய பொறியியலாளர் குழு கடந்த நாட்களில் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்ப தற்காக புலிகளினால் எடுத்துச்செல்லப்பட்டன.  இதனால் புதிதாக ரயில் பாதை அமைக்க வேண்டியுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

இதேவேளை ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையும் மீளமைக்கப்பட உள்ளது. வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதை நிறைவடையும் நிலையில் உள்ளதோடு ஓமந்தை ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக் கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளின் ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ கப்பல் கண்காணிப்புப் பணிகளுக்கு பயன்பாடு

மலேசியாவில் வைத்து கைப்பற்றப்பட்ட புலிகளின் ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ கப்பல் திருத்தப்பட்டு தென்பகுதி கடல் கண்காணிப்புப் பணிகளுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் கூறியது.

புலிகளுக்குச் சொந்தமான மேற்படி கப்பல் கடந்த வருடம் மலேசியாவில் வைத்து பிடிபட்டது. இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட இந்தக் கப்பல் தற்பொழுது காலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தென் பிராந்திய கடற்படை தலைமையகத்தினால் திருத்தப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்பொழுது கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தென் பிராந்திய கடற்படை கட்டளையிடும் தளபதி கொமடோர் ஆர். டி. பெரேரா தெரிவித்தார்.

மேற்படி கப்பலை துறைமுக பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கடந்தவாரம் பார்வையிட்டார். மேற்படி கப்பலில் 3 ஆயிரம் தொன் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியும் எனவும் எதிர் காலத்தில் இதனை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் பெரேரா கூறினார்.

போரின் பின் கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்செய்கை செய்யப்படும் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.!

Paddy_Fieldsபோரின் பின் மக்கள் மீள்குடியமர்ந்துள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை ஆறாயிரத்து 219 ஏக்கர் நிலத்தில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கமநல சேவைத்திணைக்கள உதவி ஆணையாளர் இ. இதயரூபன் தெரிவித்துள்ளார். எதிhவரும் பெரும்போகத்தில் 48 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை மேறகொள்ளப்படும் எனவும் கமநல சேவைத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு உரக்களஞ்சியங்கள் புதிதாக அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எற்கனவே புளியம்பொக்கணை, இராமநாதபரம் ஆகிய இடங்களில்  அமைக்கப்பட்டிருந்த உரக்களஞ்சியங்கள் போரினால் சேதடைந்துள்ள நிலையில், இவற்றைப் புனரமைப்பு செய்வதுடன் புதிதாக கிளிநொச்சி. பூனகரி, முழங்காவில், அக்கராயன்குளம், ஆகிய இடங்களில் உரக்களஞ்சியங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மூன்று சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர்!

தென்பகுதியிலிருந்து வந்த சிங்கள வர்த்தகர்களில் மூவர் இன்று யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதவர்களினால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை இரவு 7மணியளவில் தலைக்கவசம் அணிந்து, முகத்தைக் கறுப்புத்தணிகளால் மறைத்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 யாழ். கொக்குவில் ஆடியபாதம் வீதி, அம்பட்டப்பாலம் அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தகர்கள் வந்த லொறியொன்று எரிக்கப்பட்டதாகவும். அதனை அவ்விட்திற்கு வந்த படையினர் அணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வியாபார போட்டிகள் காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தின் பின்னர் அப்பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதோடு, அப்பகுதியால் பயணம் செய்வோர் சோதனையிடப்பட்டனர். இச்சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

யாழ். நோக்கிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

Jaffna_HandBag_Shopயாழ்ப் பாணத்தில் நல்லூர் உட்பட பல கோவில்களில் திருவிழாக்கள் ஆரம்பமாகியுள்ள சூழலில் தென்பகுதிகளிலிருந்து வரும் சிங்கள சுற்றுலாப் பயணிகளின் தொகை அதிகரித்துள்ளது. பாடசாலை விடுமுறைக் காலமாகையால் தென்பகுதி சிங்கள மாணவர்களும் தங்கள் பெற்றோர் உறவினர்களுடன் அதிளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

வடக்கில் கிளிநொச்சி இரணைமடுக்குளம், ஆனையிறவு முகாம் பகுதிகள் என்பன தென்பகுதி சிங்கள மக்களின் அவதானத்திற்குரிய முக்கிய இடங்களாகவுள்ளன. வடக்கில் ஏ-9 பாதையின் ஓரங்களில் பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கி ஒய்வெடுப்பதற்கான இடங்கள், அவர்களுக்கான மலசலக்கூடங்கள் என்பன படைத்தரப்பால் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் நல்லூர். நாகவிகாரை, காரைநகர் கசோரினா கடற்கரை, கீரிமலை, கந்தரோடை, செல்லச்சந்நதி, நயினாதீவு ஆகிய இடங்களில் அதிகளவான சுற்றுலாப்பயணிகளை தற்போது காணமுடிகிறது.

தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தென்னிலங்கையில் வேலை வாய்ப்பும் தமிழ் மக்களின் சந்தேகங்களும் : விஸ்வா

Sritharan_SivagnamTNA_MPTextile_Factory_in_SLகிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பெண்கள் தொழில்பயிற்சிக்கென கண்டிக்கு அழைத்துச்செல்ல மேற்கொண்ட முயற்சியொன்று  தடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறவனம் ஒன்று 40 யுவதிகளை தொழில்வாய்ப்புக்கென அழைத்துச்செல்ல முயன்ற இறுதித் தருணத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக முன்னர் வெளியான செய்தி : தென்னிலங்கை ஆடைத்தொழிற்சாலைகளில் யாழ்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் இலவச இருப்பிட வசதிகள் மற்றும் மேலதிக வசதிகள் செய்து கொடுக்கப்படும் என துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஏற்கனவே கிளிநொச்சி கிராமங்கள் தோறும் விளம்பர துண்டுப் பிரசரங்களை விநியோகம் செய்து இந்நிறுவனம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தது. இதனை நம்பிய யுவதிகளும் அவர்களது பெற்றோரும் இதற்கு சம்மதித்து யுவதிகளை கண்டியிலுள்ள குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு அனுப்ப முற்பட்டனர். ஆனால் பொதுமக்கள் சிலரிடம் ஏற்பட்ட சந்தேகங்கள் இறுதி நேரத்தில் நடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு தெரிவிக்கப்பட்டதால். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இப்பிரதேச மக்களின் நடைமுறைகள் குறித்தும் விளக்கினார்.

இங்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படுகின்ற போது, குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை உட்பட்ட விபரங்கள் எடுக்கப்பட்டு, குடும்பப் படங்கள் எடுக்கப்பட்டு மேலும் பல பதிவுகளின் பின்னரே சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுகின்றனர்.

கிளிநொச்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிவில் படைத்தரப்பிடம் அனுமதி கேட்டு இந்நிறுவனம் கடிதம் அனுப்பியதாக தெரிவித்த போதும், படைத்தரப்பிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தையல் இயந்திர இயக்குநர்கள், உற்பத்தி மேற்பார்வையாளர்கள் என இரு வகை வேலைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்து. பயிற்சிக்காலம் முடிவடைந்த பின்னர் அதி கூடிய சம்பளமாக 14 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும், உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 2அயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரையில் வழங்கப்படும் எனவும், உற்பத்தித் தரக்கொடுப்பனவாக ஆயிரத்து ஐந்நூறு ருபா கொடுக்கப்படுமெனவும் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்திடமானதாக இருந்த காரணத்தினால் இறுதி நேரத்தில் குறிப்பட்ட யுவதிகள் அழைத்துச் செல்லப்படும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. இவர்களை அழைத்துச் செல்ல கொண்டு வரப்பட்ட வாகனமும் திரும்பிச்சென்றது. குறித்த நிறுவனத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுமக்களும் விவாதித்துக்கொண்டிருக்கையில்,  அவ்விடத்திற்கு வந்த படையினர் சிலர் குறித்த நிறுவன அதிகாரிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தாகவும் விவாதம் செய்தவர்களிடம் கடும் தொனியில் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, வன்னிப்பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னமும் நிறைவு பெறாத வேளையிலும், மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் கூடாரங்களில் தங்கி வாழும் நிலையில் இருக்கின்ற போதும், அவர்களின் வசதியின்மைகள்; வறுமை நிலைகளைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்ற பல தரப்பினர் முற்படுகின்றமை தெரியவந்துள்ளது. மீள்குடியேற்றம் உட்பட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புகள் தொடர்பான நடவடிக்கைகளை அது அரசதுறையிலானாலும் சரி தனியார் துறையிலானாலும் சரி அதனை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் பொறுப்பும் உத்தரவாதமும் மிக அவசியமானதாக உள்ளது.

கண்டியிலும், தென்பகுதிகளிலும் தொழில் வாய்ப்பின்றி பல சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இருக்கின்ற நிலையில்,  கண்டியைச் சேர்ந்த குறித்த தனியார் ஆடைத்தொழிற்சாலை கவர்ச்சிகரமான ஊதியத்தை விளம்பரப்படுத்தி கிளிநொச்சி பெண்களை வேலைக்கமர்த்த முயல்வதன் உள்நோக்கம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கின்றது. தென்பகுதிகளின் கிராமங்களில் வாழும் சிங்கள யுவதிகள் கூட கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டு ஊதியம் போதாமை காரணமாக, பாலியல் தொழில்களில் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கொழும்பின் தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்பிற்காக வரும் திருமணமாகாத யுவதிகளில் பெரும்பாலானோர் ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

மலையத்தில் உள்ள இளம்பெண்கள் தொழில் வாய்ப்புகளுக்கென சிலரால் கொழும்பிற்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு பாலியல் தொழில்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமையும் நடைபெற்று வருகின்றது. வாரம் அல்லது மாதம் ஒரு முறை  பாலியல் தொழிலால் கிடைத்த பணத்துடன் ஊருக்கச்சென்று வரும் இப்பெண்களின் உறவினருக்குக் கூட இது தெரியாமலுள்ளமை கசப்பான உண்மையாகும்.

தென்னிலங்கையின் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி அரபு நாடுகளுக்குச் சென்று சீரழிகின்ற செய்திகளும் நாளாந்தம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், யுத்தத்தால் சகலதையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள வன்னி மக்களின் வறுமையையும், துன்பங்களையும் பயன்படுத்தி அவர்களை சீரழிவிற்குள் இட்டுச்செல்ல முற்படும் தரப்புகளிடமிருந்து தமிழ் இளைஞர் யுவதிகள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோரும், சமூகத்தினரும் விழிப்பாக இருக்கவேண்டும் என்பது அவசியமானதாகும்.

Related News:

சிங்கப்பூரில் பலவந்தமாக பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கை யுவதிகள்!

பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிங்களவர்கள் இல்லாமல் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை. தமிழர்களையும் இஸ்லாமியரையும் கீழ்ப்படுத்தி சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியாது : கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன்

Peace_Children_Drawingஇலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் தேசிய அணியாக, ஒரு சமூகமாக எம்மைச் சுற்றி எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் நாம் உருவாக்கிய அரசியல் மாயையில் இருந்து நாம் வெளிவர வேண்டும். எமது குறுகிய தேசியவாதம் எமக்கும் எமது சந்ததிக்கும் அளப்பரிய உயிரிழப்புகளையும், அவய இழப்புக்களையும், சொல்லணாத் துன்பத்தையும், வறுமையiயும், பொருள் இழப்பையும், சொத்து இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். 
 
பல நூற்றாண்டுகளாக மிகவும் பழமை வாய்ந்த சமூகங்களாக இலங்கைத் தீவை நாம் பகிர்ந்திருந்தோம். சிங்களவர்கள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மையை நாம் மீழ் ஆய்வு செய்துகொள்ளவேண்டும். இதே வேளை தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் கீழ்ப்படுத்திக்கொண்டு வாழ்வது நிரந்தரமான நம்பிக்கை இன்மை என்பதை சிங்களவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எம்மைப் பிரிக்கின்ற காரணிகளை வைத்துக்கொண்டு போரிடாமல் மனித சமூகமாக எவ்வாறு ஒன்றாக வாழலாம் என்கிற விடயத்தில் நாம் கவனம் செலுத்தல் வேண்டும்.
 
தமிழர்களும் சிங்களவர்களும் இந்தக் கொடுரமான போரில் இறந்து போயிருக்கலாம். ஆனால் மொத்தத்தில் மானிடம் தான் அங்கே கொல்லப்பட்டது. இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் எமது தலைமுறையின் எதிர்காலத்துக்கென ஊனத்தையும், சிதைவுகளையும் சொத்தாக விட்டுவிட்டு செல்லமுடியாது. தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர்கள் மத்தியிலும் ஓர் பண்பாட்டு வழமை உள்ளது. அது என்னவெனில் பிணக்குகளால் பிரிந்து நிற்கும் குடும்பங்கள் பல பெரும் பாலும் திருமணத்தில் அல்லாமல் மரணச் சடங்கிலேயே ஒன்று சேருகின்றன.
 
தமிழர் சிங்களவர்கள் ஆகிய இரு பாலாருமே பாரிய சாவுகளையும் முடிவில்லாத மரணச் சடங்குகளையும் கொலைகளையும் அங்கவீனங்களையும் சிதைவுகளையும் பாரிய அழவிலான தனியார் சொத்துக்களையும் தேசிய சொத்துக்களையும் இழந்து உள்ளோhம். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எமது அன்புக்குரிய ஆண் பெண் குழந்தைகளையும் இழந்து, நாம் பேணிப் பாதுகாத்த எமது பண்பாட்டு, மத பெறுமானங்களையும் அழுக்காக்கி விட்டோம். இந்த நிலை இனிமேலும் தொடர நாம் அனுமதிக்க முடியாது. எமது மண்ணிலே போரின் இறுதி நாட்களில் நடந்து முடிந்த பாரிய மனித அவலத்தை இந்த சுதந்திர உலகம் எவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம். இவர்களுடைய நல் எண்ணத்திலும், தர்மத்திலும் நாம் தங்கியிருக்க முடியாது. எவ்வளவோ விடையங்கள் முக்கியமானவை. ஆனால் அவற்றையும் விட இன்னும் எவ்வளவோ விடயங்கள் அவசியமானவை. பண்பாட்டுரிமை, மொழியுரிமை, பிரதேச உரிமை என்பன அனைத்து இனங்களுக்கும் முக்கியமானவை.
 
ஆனால் அவற்றிலும் பார்க்க உணவு, உடை, சுகாதாரம், இருப்பிடம் என்பன அவற்றையும் விட மிக மிக முக்கியமானவையாகவும் பின்போடப்பட முடியாதவையுமாகும். நேர்டொ (NERDO) அமைப்பு எமது எதிர்பார்புகளை பூர்த்தி செய்யக்கூடிய சேவைகள் செய்யாவிடினும் அதை யாராவது ஆரம்பித்து வைக்கவேண்டும். அனாதை சிறார்களுக்கும், விதவைகளுக்கும் உணவளிக்கவும், அகதி முகாம்களில் சிறுவர்களுக்கு கல்வி வழங்கவும், தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் உள்ளவர்களை சென்று பார்க்கவும் நாம் வெளிநாட்டு நிறுவனங்களை எதிர்பார்க்க முடியாது. எமது சிறார்கள் தான் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள். இதற்கு நாம் முதற்படி எடுத்தாக வேண்டும். எமது சார்மனைக்கதிரை விமர்சனம் சிறைச்சாலைகளில் இருப்பவர்களுக்கும், முகாம்களில் இருப்பவர்களுக்கும் எந்த நன்மையையும் தரப்போவதில்லை. உண்மையான மனிதாபிமானச் சேவை செய்பவர்கள் ஊடாகத் தான் நாம் அவர்களைச் சென்றடையலாம்.
 
(கனடிய தமிழ் மன்றத்தில் கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன். கலாநிதி சந்திரகாந்தன் அவர்கள் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்திலும், சமய கற்கை நெறியிலும் பேராசிரியராக உள்ளதுடன், யாழ் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்தவ இஸ்லாமிய கற்கைநெறி பீடத்தின் ஸ்தாபகருமாவர்.)

நிதியுதவியை யார் வழங்கியிருக்கக் கூடும்?

son-k.jpgஎம்.வி. சன் சீ கப்பலில் சென்றடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர்களை கடத்தல்காரர்களுக்கு கொடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதியுதவியை யார் வழங்கியிருக்கக் கூடும் என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.