போரின் பின் கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்செய்கை செய்யப்படும் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.!

Paddy_Fieldsபோரின் பின் மக்கள் மீள்குடியமர்ந்துள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை ஆறாயிரத்து 219 ஏக்கர் நிலத்தில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கமநல சேவைத்திணைக்கள உதவி ஆணையாளர் இ. இதயரூபன் தெரிவித்துள்ளார். எதிhவரும் பெரும்போகத்தில் 48 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை மேறகொள்ளப்படும் எனவும் கமநல சேவைத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு உரக்களஞ்சியங்கள் புதிதாக அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எற்கனவே புளியம்பொக்கணை, இராமநாதபரம் ஆகிய இடங்களில்  அமைக்கப்பட்டிருந்த உரக்களஞ்சியங்கள் போரினால் சேதடைந்துள்ள நிலையில், இவற்றைப் புனரமைப்பு செய்வதுடன் புதிதாக கிளிநொச்சி. பூனகரி, முழங்காவில், அக்கராயன்குளம், ஆகிய இடங்களில் உரக்களஞ்சியங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *