September

September

அரசாங்கம், இரகசியமாக செயற்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது

mono.jpgதோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம், தொடர்ந்து இழுபறிபடுவதால் அரசின் பகிரங்க தலையீட்டை நாம் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் கோரினோம். நானும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் ஜே.வி.பி.யின் அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் இது தொடர்பில் வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால், பகிரங்கமாக தலையிட்டு நியாயமான சம்பளத்தை பெற்றுத்தர வேண்டிய அரசாங்கம், இரகசியமாக செயற்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனோ எம்.பி. மேலும் கூறுகையில்,

“கடந்த சனிக்கிழமை நள்ளிரவில், தொழிலாளர்களுக்கு 405 ரூபா சம்பள உயர்வு என்பதாக ஊடகங்களுக்கு இ.தொ.கா. அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்திற்கும், தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்குப் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளத்தை தோட்டக் கம்பனிகளால் வழங்க முடியாவிட்டால் மானியம் அல்லது வரிச்சலுகைகள் வழங்கி இந்த 500 ரூபா தொகையை நாட் சம்பளமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் வழி ஏற்படுத்த வேண்டும். இத்தகைய ஒரு தலையீட்டையே நாம் அரசாங்கத்திடம் கோரினோம்” என்றார்

அலரி மாளிகையில் நேற்று இப்தார் வைபவம்

150909ramazan_president_house.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஏற்பாட்டில் நோன்பு துறப்பதற்கான இப்தார் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் கலந்துகொண்ட பெரும் திரளான முஸ்லிம் பிரமுகர்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடினார்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா இங்கு உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அயராத முயற்சியின் காரமான இன்று நாட்டில் அமைதி நிலவுவதாகவும் அதனால் இது போன்ற வைபவங்களை பெரும் சிரமங்களின்றி நடத்தக்கூடியாக இருப்பதாகவும் கூறிய அவர் இந்த இப்தார் ஏற்பாட்டுக்காக முஸ்லிம்கள் சார்பில் அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
 

புஷ் மீது பாதணியை வீசிய ஊடகவியலாளர் இன்று விடுதலை!

1099images.jpgஅமெரிக் காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது தமது பாதணியை வீசியெறிந்த ஊடகவியலாளர் முண்டாசர் அல் சய்தி இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக அவரது அவரது சகோதரர் டர்காம் தெரிவித்தார்.
 
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் ஓய்வு பெறுவதற்கு முன் ஈராக் சென்றிருந்தபோது ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

மாநாட்டில் கலந்து கொண்ட டி.வி செனல் நிருபர் முண்டாசர் அல் சேய்திää தன் கால்களில் அணிந்திருந்த 2 ஷ_க்களையும் கழற்றி புஷ் மீது வீசி எறிந்தார். அவருக்கு ஈராக் நீதிமன்றம் 3 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனுசெய்ததில் இந்த தண்டனை ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டது. இவரது நன்நடத்தை காரணமாக அந்தத் தண்டனை மேலும் குறைக்கப்பட்டது. இவர் நேற்று விடுதலை செய்யப்படுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

எனினும் சட்ட நெறிமுறைகள் முழுமை அடையாததால் அவர் நேற்று விடுதலை செய்யப்படவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் விடுதலை செய்யப்படுகிறார். இந்தத் தகவலை அவரது சகோதரர் டர்காம் தெரிவித்தார

ஐக்கிய நாடுகளின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி இலங்கை விஜயம்!

ஐக்கிய நாடுகளின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி லீன் பெஸ்கோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வது அவரின் விஜயத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசனைக்கு ஏற்ப அவர் இங்கு விஜயம் செய்ய உள்ளதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது உட்பட அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவர் கூடுதல் கவனம் செலுத்த உள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.நா. வின் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தையின் பின்னரே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக லீன் பெஸ்கோ மேலும் தெரிவித்துள்ளார். 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 12இல் ஆரம்பம்

150909students1.jpgஇவ் வருடத் துக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
 
இந்தப் பரீட்சை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் மட்டும் நடைபெறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை சுமார் 5 இலட்சத்து 45 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளதுடன் இதற்காக சுமார் 4 ஆயிரம் பரீட்சை நிலையங்களை நிருவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து சுமார் 25 ஆயிரம் பரீடசார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களுக்கு பரீட்சை எழுதவென வவுனியா நலன்புரி மத்திய நிலையங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு முன்னர் குறிப்பிட்ட பரீட்சார்த்திகள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேறினால் அங்கும் பரீட்சை நிலையங்கள் அமைக்க கவனம் செலுத்தப்படும் என்றும் வடக்கின் பரீட்சார்த்திகளுக்கு சிக்கல் இல்லாமல் பரீட்சைக்குத் தோற்ற வகைசெய்யப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

முகாம்களில் உள்ள மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பான அரசாங்கம் இந்த விவகாரத்தை ஒரு விளையாட்டாக கையாள முடியாது

101009displacedidps.gifவவுனி யாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற முகாமைத்துவம் குறித்து உறுதியான திட்டம் உண்டு என்றும், அத்திட்டம் நேர்த்தியாகவும் திறமையாகவும் கட்டுக்கோப்பான முறையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வப்போது இடம்பெறும் தனது சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவது குறித்து அரசாங்கம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து மட்டக்களப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, முகாம்களில் உள்ள 3 இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பான அரசாங்கம் இந்த விவகாரத்தை ஒரு விளையாட்டாக கையாள முடியாது என்று கூறினார்

புலிகளின் இரகசிய ஆவணங்கள் கடற்படையினரால் மீட்பு!

புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான மிகவும் இரகசிய தகவல்களை உள்ளடக்கிய முக்கிய ஆவணங்களை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சனிக்கிழமை கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம்  அறிவி;த்துள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து தேடுதல் நடத்திய படையினர் கதிரவெளிப் பிரதேசத்திலுள்ள இலங்கத்துறை என்ற இடத்தில் நிலத்தின்கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த முக்கிய ஆவணங்களை மீட்டுள்ளனர்.
மிகவும் பாதுகாப்பான முறையில் 25 பொதிகளில் இந்த ஆவணங்கள் பத்திரப்படுத்தப்படிருந்தன. இவை புலிகளின் மிகவும் முக்கியமான ஆவணங்கள் என்பது ஆரம்ப ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் மேலும் அறிவித்துள்ளது. 

உலக குத்துச்சண்டை போட்டி: அப்போஸ் அடோ வெற்றி

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர்சிங் அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார். 15 வது உலக ஆண்கள் குத்துச்சண்டை போட்டி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்து வருகிறது.

இதன் மிடில் வெயிட் (75 கிலோ) பிரிவில் அரையிறுதியில் இந்திய வீரர் விஜேந்தர்சிங் உஸ்பெகிஸ்தான் வீரர் அப்போஸ் அடோவ்வை எதிர்கொண்டார்.

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் முதல் சுற்றில் விஜேந்தர்சிங் 10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தார்.

ஆனால் 2 வது சுற்றில் நிலைமை தலைகீழாக மாறியது. லைட் ஹெவிவெயிட் முன்னாள் உலக சம்பியனான அப்போஸ் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டார்.

அவர் 2 வது சுற்றில் 5-0 என்ற புள்ளி கணக்கில் தனதாக்கினார். 2 வது சுற்றில் விஜேந்தரால் ஒரு புள்ளி கூட பெற முடியவில்லை. 3 வது, 4 வது மற்றும் கடைசி சுற்றில் இருவரும் சம தாக்குதலில் ஈடுபட்டனர். இருவரும் கடைசி இரண்டு சுற்றுக்களில் 2-2 என்ற கணக்கில் சமபுள்ளிகளை பெற்றனர். முடிவில் இந்திய வீரர் விஜேந்தர்சிங் 3-7 என்ற புள்ளி கணக்கில் அப்போஸ் அடோவிடம் தோல்வி கண்டார்.

23 வயதான விஜேந்தர்சிங் அரையிறுதியில் தோல்வி கண்டாலும் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

இதன் மூலம் உலக குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். கடந்த ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் விஜேந்தர்சிங் வெண்கலப்பதக்கம் வென்று பெருமை சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

”இலங்கை முகாம்களில் மக்கள் தடுப்புக்காவல் நிலையில்…”- நவி பிள்ளை

150909navifora.jpgஇலங் கையில் அண்மைய யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இடம்பெயர நேர்ந்த மக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது போன்றதொரு சூழலில் இருந்துவருகிறார்கள் என்று ஐ.நா.மன்ற மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதிம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தில் நவநீதம் பிள்ளை ஆற்றவுள்ள உரை என ஊடகங்களிடம் வழங்கப்பட்டுள்ள தகவல்களில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு எண்ணிக்கையில் மக்கள் முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த முகாம்களில் உதவியமைப்புகள் சென்று பணியாற்றுவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அங்கே நடைபெறுகின்ற மனிதாபிமானப் பணிகளுக்கு அச்சுறுத்தலாய் அமைந்துள்ளன என்றும் நவநீதம் பிள்ளையின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டிகள்

1509fiba-news203a.jpgஆசிய அளவில் மகளிருக்கான கூடைப்பந்து போட்டிகள் இம்மாதம் 17 ஆம் திகதி தொடங்கி 24 ஆம் திகதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

இவ்வகையான ஆசியக் கூடைப்பந்து போட்டிகள், தெற்காசியாவிலேயே முதல் முறையாக இப்போது இந்தியாவில் தான் இடம்பெறுகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா இலங்கை உட்பட 12 அணிகள் பங்கு பெறுகின்றன. சீனா, ஜப்பான் உட்பட ஆசிய அளவில் முன்னணியில் இருக்கும் அணிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன.

பங்கு பெறும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன என்று போட்டிகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்தும் குழுவின் இணைச் செயலரான ரகோத்தமன் BBC தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியா, இலங்கை போன்ற அணிகள் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று கூறும் அவர், இப்படியான நாடுகளுக்கு இவ்வகையான போட்டிகள் ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்றும் கருத்து வெளியிடுகிறார்.

ஜப்பான் மற்றும் சீன நாட்டு வீரர்களின் விளையாட்டு திறனும், மன உறுதியும் இந்திய மற்றும் இலங்கை வீரர்களை விட உயர்ந்து காணப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

கிராமப்புறங்களில் இருந்து இளம் வயதில் வீரர்களை இனம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்தாலே இந்தியாவில் கூடைப்பந்து விளையாட்டு முன்னேற்றம் அடைந்து சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டிகள் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளன.