வவுனி யாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற முகாமைத்துவம் குறித்து உறுதியான திட்டம் உண்டு என்றும், அத்திட்டம் நேர்த்தியாகவும் திறமையாகவும் கட்டுக்கோப்பான முறையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வப்போது இடம்பெறும் தனது சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவது குறித்து அரசாங்கம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.
வவுனியா முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து மட்டக்களப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, முகாம்களில் உள்ள 3 இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பான அரசாங்கம் இந்த விவகாரத்தை ஒரு விளையாட்டாக கையாள முடியாது என்று கூறினார்