க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 12இல் ஆரம்பம்

150909students1.jpgஇவ் வருடத் துக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
 
இந்தப் பரீட்சை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் மட்டும் நடைபெறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை சுமார் 5 இலட்சத்து 45 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளதுடன் இதற்காக சுமார் 4 ஆயிரம் பரீட்சை நிலையங்களை நிருவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து சுமார் 25 ஆயிரம் பரீடசார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களுக்கு பரீட்சை எழுதவென வவுனியா நலன்புரி மத்திய நிலையங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு முன்னர் குறிப்பிட்ட பரீட்சார்த்திகள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேறினால் அங்கும் பரீட்சை நிலையங்கள் அமைக்க கவனம் செலுத்தப்படும் என்றும் வடக்கின் பரீட்சார்த்திகளுக்கு சிக்கல் இல்லாமல் பரீட்சைக்குத் தோற்ற வகைசெய்யப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *