ஐக்கிய நாடுகளின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி லீன் பெஸ்கோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வது அவரின் விஜயத்தின் நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசனைக்கு ஏற்ப அவர் இங்கு விஜயம் செய்ய உள்ளதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது உட்பட அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவர் கூடுதல் கவனம் செலுத்த உள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.நா. வின் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தையின் பின்னரே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக லீன் பெஸ்கோ மேலும் தெரிவித்துள்ளார்.