புலிகளின் இரகசிய ஆவணங்கள் கடற்படையினரால் மீட்பு!

புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான மிகவும் இரகசிய தகவல்களை உள்ளடக்கிய முக்கிய ஆவணங்களை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சனிக்கிழமை கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம்  அறிவி;த்துள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து தேடுதல் நடத்திய படையினர் கதிரவெளிப் பிரதேசத்திலுள்ள இலங்கத்துறை என்ற இடத்தில் நிலத்தின்கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த முக்கிய ஆவணங்களை மீட்டுள்ளனர்.
மிகவும் பாதுகாப்பான முறையில் 25 பொதிகளில் இந்த ஆவணங்கள் பத்திரப்படுத்தப்படிருந்தன. இவை புலிகளின் மிகவும் முக்கியமான ஆவணங்கள் என்பது ஆரம்ப ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் மேலும் அறிவித்துள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *