August

August

கிழக்கில் 149 அரச ஊழியர்களுக்கு அமெரிக்க உதவியில் மொழிப்பயிற்சி

tri0000.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள, பதினோரு உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட 149 அரசாங்க அலுவலர்களுக்கும் பதவியாளர்களுக்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி தமிழ் மொழி, சிங்கள மொழிப் பயிற்சிகளை வழங்குகின்றது.

பிராந்திய ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இத்திட்டத்துக்குமூன்று வருடங்களுக்குத் தேவையான  நிதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சியில் நவீன மொழிப் பயிற்சி நுட்பங்கள்,  அரசாங்க மொழிகள் கொள்கை, மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்பவை பங்குபற்றுநர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1956 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கையில் ஏறத்தாழ இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளமை குறிப்பிட்டத்தகக்தாகும். 

புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆயுதங்களை வழங்குமாறு இலங்கையின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரித்தது

britain.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது சில வகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அரசாங்கம் கோரிய போதிலும், பிரித்தானியா கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக 30மி.மி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளைக் கூட வழங்க பிரித்தானியா மறுத்துள்ளது. ஆரம்பத்தில் 30மிமி துப்பாக்கிகளையும், அதற்கான ரவைகளையும் பிரித்தானியா வழங்கியதாகவும், பின்னர் ஆயுத விநியோகத்தை நிறுத்திக் கொண்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

அரை இறுதிக்கு செரினா தகுதி

serena-williams.jpgரோஜர்ஸ் கோப்பைக டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம் வெற்றிப் பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளார்.

ரோஜர்ஸ் கோப்பைக்கான மகளிர் டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், உலகின் 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக் குடியரசு நாட்டை சேர்ந்த லூசி சபரோவாவை எதிர்கொண்டார்.

இதில், 6 – 3, 6-  2 என்ற நேர் செட்டில் லூசி சபரோவாவை வென்று, செரினா அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்ற கால் இறுதி ஆட்டங்களில் மரியா ஷரபோவா (ரஷியா), எலீனா டெமன்டிவா (ரஷியா), அலிசா கிளைபனோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புபட்டவர் தலிபான் தலைவராக நியமனம்

24082009.jpgபாகிஸ் தானில் புதிய தலிபான் இயக்கத் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் பாரிய ஹோட்டல் தாக்குதல் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கர தாக்குதல் ஆகியன உட்பட பல தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய உயர் கமாண் டோ அதிகாரியாவார். அந்நாட்டில் இயங்கும் அந்நாட்டில் இயங்கும் தலிபான் குழு இன்னமும் சக்திவாய்ந்ததாகவும் தீவிரமானதாகவும் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதால் 28 வயதான ஹக்கிமுல்லா மெஹ்சூத்தின் இந்த நியமனம் அந்நாட்டில் அதிகரித்த தாக்குதல்களுக்கு கட்டியம் கூறலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முன்னாள் பாக் தலிபான் பய்துல்லா மெஹ்சூத் வடமேற்கு பாகிஸ்தானில் அமெரிக்க சி.ஐ.ஏ. ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து அவரது இடத்திற்கு புதிதாக ஒருவரை தெரிவு செய்வது குறித்து தலிபான் கமாண்டர்களுக்கிடையே இடம்பெற்ற உட்பூசல்களை தொடர்ந்து சில வாரங்களாக நிலவிய ஊகங்களின் பின்னர் புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.

பல உயர் தலிபான் கமாண்டர்கள் முன்னாள் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று வலியுறுத்திய போதிலும் அவர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. தாக்குதலில் அவர் அநேகமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அமெரிக்க, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகிறார்கள் 

14 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றிய பிடெல் காஸ்ட்ரோ

castro.jpgகியூபா முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, 14 மாதங்களின் பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சுகவீனமடைந்து அறுவைச் சிகிச்சையொன்றுக்கு ஆளாகிய பிடெல் காஸ்ட்ரோ, அது முதற்கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாது இருந்து வருகிறார்.

வெனிசுலாவைச் சேர்ந்த மாணவர்களுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடும் மேற்படி காட்சியானது கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்டதாக அதிகõரிகள் தெரிவித்தனர்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிடெல் காஸ்ட்ரோ மிகுந்த ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் காணப்பட்டார்.

மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர், அந்நாட்டு அரச ஊடகமான “ஜுவென்டட் ரெபல்டி’ பத்திரிகையானது பிடெல் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது.

அந்த புகைப்படமானது ஈகுவடோரின் இடதுசாரி ஜனாதிபதி ராபயல் கொர்ரியாவுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடுவதை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது

முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்று நிருபம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு

sri-lankan-students.jpgமுதலாம் ஆண்டுக்கு மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை 6ஆம் ஆண்டுக்கு சேர்த்துக் கொள்வது தொடர்பான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

குறிப்பிட்ட சுற்று நிருபத்தின்  பிரகாரமே மாணவர்கள் முதலாம் ஆண்டுக்கும்  5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் 6ஆம் ஆண்டுக்கும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இடை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமாயின் அதிபருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பாடசாலையில் இடமிருப்பின் தவறாது மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இதனைவிடுத்து தமது பிள்ளைக்கு பாடசாலைக்கு அனுமதி பெறுவதற்காக வீணே அமைச்சுக்கு வரத் தேவையில்லை என்றும்  அவ்வாறு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்

பிரபஞ்ச அழகுராணி

stefania-fernandez.jpgஇவ் வருடத்துக்கான பிரபஞ்ச அழகு ராணியாக வெனிசுவேலா நாட்டின் அழகுராணியான ஸ்டெபானியா பெர்னான்டஸ தெரிவுசெய்யப்ட்டுள்ளார்.

கடந்த வருடம் 2008 இன் பிரபஞ்ச அழகியாகத் தெரிவு செய்யப்பட்டடிருந்த தயானா மொண்டோசா ஸ்டெபானியாவுக்கு வெற்றிக் கிரீடத்தை அணிவித்தார்.

சி.ஐ.ஏ. செய்த கைதிகள் துஷ்பிரயோகம்: வழக்குகளை மீண்டும் நடத்த அமெரிக்க நீதித்துறை பரிந்துரை

guantanamo.jpgஅமெரிக் காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வினர் சிறைக் கைதிகளை விசாரிக்கும்போது நடைபெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் பலவற்றை மீண்டும் தொடங்குவதற்கு அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் சி ஐ ஏ வின் ஊழியர்களும், அதனுடனான ஒப்பந்தக்காரர்களும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

அமெரிக்க நீதித்துறையின் இந்த பரிந்துரையானது, முன்னர் அதிபராக இருந்த புஷ் அவர்களின் நிர்வாகம் எடுத்த கொள்கையினை மாற்றியைக்கும்.

தீவிரவாதம் தொடர்பான சந்தேக நபர்களை சி ஐ ஏ நடத்திய விதம் குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்படவுள்ளது.

கடந்த ஆண்டு இது தொடர்பான மூல அறிக்கை வெளியான போது, இந்த துஷ்பிரயோகங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் தடுக்கப்பட்டன.

புதிய தகவல்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவது போல போலியாக செய்து காட்டியது குறித்தும், மின்சார துளையிடும் கருவியைக் கொண்டு அச்சுறுத்தியது குறித்தும் புதிய விபரங்களை வெளிக் கொண்டுவரக்கூடும் என அமெரிக்க பத்திரிகைகள் எதிர்வு கூறுகின்றன.

எதிர்காலத்தில், வெள்ளை மாளிகையின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத சந்தேகநபர்கள் மீது விசாரணைகளை நடத்துவதற்கான ஒரு புதிய துறை உருவாக்கப்படுவதற்கு அதிபர் ஒபாமா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

எரித்திரியாவில் புலிகளின் 10 சிறிய ரக விமானங்கள் – “லங்காதீப’ செய்தி

2408.jpgதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக விமானங்கள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள நாளேடான “லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விமானங்களை பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய விமான நிலையத் தரப்பு மேற்கொண்டு வருவதாகவும், இந்த விமான நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  மலேசியாவில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வினாத்தாள்கள் குறைந்தமையால் 40 நிமிடங்கள் பரீட்சை ஒத்திவைப்பு

sri-lankan-students.jpgபரீட்சை வினாத்தாள்கள் நெருக்கடி தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்று 23ஆம் திகதி ஆரம்பமான 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையிலும் காலி மாவட்டத்தில் ஒரு பாடசாலைக்கு 40 வினாத்தாள்கள் குறைந்ததால் 40 வினாடிகள் பரீட்சையை ஒத்திவைக்க நேர்ந்துள்ளது.

எனவே, பரீட்சைகள் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிகளைத் தீர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.