முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்று நிருபம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு

sri-lankan-students.jpgமுதலாம் ஆண்டுக்கு மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை 6ஆம் ஆண்டுக்கு சேர்த்துக் கொள்வது தொடர்பான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

குறிப்பிட்ட சுற்று நிருபத்தின்  பிரகாரமே மாணவர்கள் முதலாம் ஆண்டுக்கும்  5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் 6ஆம் ஆண்டுக்கும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இடை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமாயின் அதிபருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பாடசாலையில் இடமிருப்பின் தவறாது மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இதனைவிடுத்து தமது பிள்ளைக்கு பாடசாலைக்கு அனுமதி பெறுவதற்காக வீணே அமைச்சுக்கு வரத் தேவையில்லை என்றும்  அவ்வாறு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *