March

March

பட்டலந்த ரணிலுக்கு முற்றுப்புள்ளியாக அமையுமா ?

பட்டலந்த ரணிலுக்கு முற்றுப்புள்ளியாக அமையுமா ?

மார்ச் 14 பட்டலந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட வேளை சபாநாயகர் அதன் கொடூரத்தை நினைத்து கண் கலங்கியிருந்தார். ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நேர்காணலைத் தொடர்ந்து பட்டலந்த அறிக்கை தற்போது பாராளுமன்றத்துக்கு வந்துள்ளது.

மார்ச் 14இல் இவ்வறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்குவதாக பீமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்து இருந்தார். மேலும் ஜனாதிபதியின் விசேட குழுவொன்று பட்டலந்த அறிக்கையை ஆராய நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு இவ்வறிக்கையை வைத்து நடவடிக்கைகள் எடுப்பது என்ற கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பட்டலந்தை அறிக்கை சட்டமா அதிபரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிக்கையை ஆய்வு செய்து அதில் யாருக்கு எதிராகவும் வழக்குத் தொடர முடியுமா என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வரும். பட்டலந்த அறிக்கையில் யாராவது குற்றம் சாட்டப்பட்டு இருந்தால் குற்றப்பதிவைச் செய்ய முடிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்.

பட்டலந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் முன்னணி சோசலிசக் கட்சியும் அழுத்தங்களை வழங்கியிருந்தது. இந்த அறிக்கை முன்னாள் ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் வாழ்வுக்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குலகம் ரணிலை வைத்துக்கொண்டே ஜேவிபிக்கு ஆப்பு வைக்கும் என்ற எண்ணம் அரசியல் விமர்சகர்களிடம் உள்ளது. அந்த வைகயில் ரணில் பதிவி விலகிய பின்னரும் தீவிரமான அரசியலில் சர்வதேச அரங்கில் ஈடுபட்டு வந்திரக்கின்றார். இந்தப் பட்டலந்த விவகாரம் ரணிலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விவகாரமாக அமைய வாய்ப்புள்ளது.

தமிழ் கட்சிகள் எப்படிக் கூட்டுச் சேர்ந்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது !

தமிழ் கட்சிகள் எப்படிக் கூட்டுச் சேர்ந்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது !

 

நாடு அனுராவோடு கிராமங்கள் எங்களோடு என்ற கோஷத்தோடு தமிழரசுக் கட்சி களமிறங்கியுள்ளது. ஏனைய தமிழ் கட்சிகளும் தாங்களும் உள்ளுராட்சி சபையை வென்றுவிடலாம் என்ற பகல் கனவில் பல்வேறு வழிகளிலும் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். ஆனால் வடக்கு கிழக்கில் அனுர அலை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனுர அலைக்கு மேலாக தமிழ் கட்சிகளின் தொடர்ச்சியான ஏமாற்று அரசியல் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மிகவும் எரிச்சலூட்டியுள்ளது. அதனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கட்சிகளில் இருந்து ஒதுங்கியே நிற்கின்றனர்.

தங்களுடைய பாராளுமன்ற கதிரைகளை வெல்வதற்காக பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன், மற்றும் தமிழ் பா உ க்களுடன் தற்போது புதிதாக சுயேட்சைக் குழுவிலிருந்து களமிறங்கி இருக்கும் இராமநாதன் அர்ச்சுனாவும் மக்களை ஏமாற்றும் அரசியலையே செய்துவருகின்றார்.

அர்ச்சுனா இன்னுமொருபடி கீழே சென்று தன்னுடைய கழிசறைத் தனங்களுக்கெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் துணைக்கழைத்து மிகக் கேவலமான அரசியலை மேற்கொள்கின்றார். ஒரு மாற்றத்திற்காக அரச்சுனாவுக்கு வாக்களித்த மக்களைப் பெண்களை அதற்காக வெட்கப்படும் அளவுக்கு அர்ச்சுனாவின் நடத்தையும் பேச்சுக்களும் அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கின் ஒரே பிரதான தமிழ் தேசியக் கட்சியான கட்தமிழரசுக் கட்சி யாருடனும் கூட்டுச்சேர மறுத்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு உள்ளுராட்சி சபையில் அதிகாரத்தை நிறுவ யாரோடு ஆட்சி அமைப்பது என்பதை தாங்கள் முடிவு செய்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ஆயதப் போராட்ட அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவாகியுள்ளது. ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடு மற்றுமொரு முன்னாள் போராளி அமைப்பான முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியும் இணைந்துள்ளது. தமிழரசுக் கட்சிக்கு அடுத்ததாக வடக்கு கிழக்கு எங்கும் அரசியல் கட்டமைப்பையுடைய கட்சியாக ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

கனடாவில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பகுப்பாளர் முல்லைமதி தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயதம் ஏந்திப் போராடிய முன்னாள் போராளிகள் அமைப்புகளுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அமைப்புகள் தவறுகள் இழைத்திருந்தாலும் தங்களுடைய பிள்ளைகள் விட்ட தவறை மறந்து, அவர்களுக்கெ வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்த பலருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளது. கே ரி தவராஜா, எம் கே சிவாஜிலிங்கம், அருந்தவபாலன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களோடு தன்னுடைய வீட்டில் வேலைக்கு அமர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற மலையகச் சிறுமியை பாலியல் வன்புணர்ந்தவர் என்று குற்றம்சாட்டப்பட்ட கெ ரி கணேசலிங்கத்துக்காக வாதாடிய சட்டத்தரணி சிறிகாந்தாவும் கூட்டுச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்தோடு வட மாகாண சபையின் மிகப் பெரும் ஊழல் மோசடியாளரான பொன் ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்துள்ளார்.

வடக்கில் கூட்டு இப்படியிருக்க கிழக்கிலும் ஒரு கூட்டு உருவாகியுள்ளது. முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் முன்னாள் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளும் பெரும்பாலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்கு வங்கியை இழந்தவர்களே. இந்தக் கூட்டுக்களில் உள்ளவர்களில் இணைந்துள்ளவர்களுக்கு வாக்கு வங்கியே இல்லை. இந்தக் கட்சிகள் பலவும் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

மேலும் இந்தக் கட்சிகள் எதுவும் பா உ அர்ச்சுனாவை உள்வாங்க முயற்சிக்கவில்லை. இது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பிக்க முன்னரேயே பா உ அர்ச்சுனாவும் மணிவண்ணனும் தெறித்துக் கொண்டனர். பிரேமானந்தாவை கும்பிடும் விக்கினேஸ்வரனின் கட்சி வல்வட்டித்துறையில் சுயேட்சைக் குழுவுடன் இணைந்து போட்டியிடுகின்றது. அதாவது வல்வட்டித்துறை நகராட்சியில் சுயேட்சைக் குழவொன்றை ஆதரிக்கின்றது. ஏனைய 16 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றது.

பா உ அர்ச்சுனாவுக்கு யாழில் உள்ள உள்ளுராட்சி சபையில் போட்டியிடுவதற்கே உறுப்பினர்கள் போதுமானதாக இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அர்ச்சுனா இன்னுமொருவருடன் இணைந்து பணியாற்ற முடியாதவர் என்பதை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தெரியப்படுத்தி இருந்தார். இவருடைய சுயேட்சைக்குழவில் மிஞ்சியிருப்பது கௌசல்யா நரேன் மட்டுமே. அதனால் அர்ச்சுனாவின் அரசியல் எதிர்காலம் விரைவில் அஸ்தமனத்துக்குச் செல்ல உள்ளது.

ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளினதும் நிலை இதுவே. தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சியாகச் செயற்பட வாய்ப்புள்ளது. நாடு மட்டுமல்ல வடக்கு கிழக்கு தமிழ் கிராமங்களும் அனுராவோடே பயணிக்க முடிவு செய்திருப்பதாகவே தெரிகின்றது.

தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களுக்கு பேக் ஐடி: பா உ அர்ச்சுனாவுக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எதிரிகள் ஒன்றே ! எங்கோ உதைக்கின்றது !

தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களுக்கு பேக் ஐடி: பா உ அர்ச்சுனாவுக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எதிரிகள் ஒன்றே ! எங்கோ உதைக்கின்றது !

தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்ளுக்காக பேக் ஐடியைப் பாவிப்பதும் தனிநபர்களில் இருந்து ஏகாதிபத்தியங்கள் வரை மேற்கொள்கின்ற சில்லறை அரசியல். இவ்வாறான மோசடிகள் தொழில்நுட்பம் வளராத காலகட்டங்களிலும் பார்க்க தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய காலகட்டங்களில் இது மிக மோசமானதாக உள்ளது. இந்த பேக் ஐடி அரசியல், தற்போது தமிழ் மக்கள் மத்தியில் மிகத் தீவிரமடைந்துள்ளது.

அருச்சுனா கட்டைப்பஞ்சாயத்து! - pathivu

அண்மையில் முளைத்துள்ள ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற முகநூல் தளம் ஒரு முகமூடிக் கூட்டம். பா உ அர்ச்சுனாவுக்கும் இந்த முகமூடி அணிந்த ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எதிரிகளிலும் செயற்பாட்டிலும் ஒரே ஒற்றுமை. இந்த மூகமூடி அணிந்தவரின் முகமாக பா உ அர்ச்சுனா செயற்படுகின்றார். அண்மையில் குறிவைத்து அடிக்கப்பட்டவர்கள்: அமைச்சர் சந்திரசேகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, சட்டத்தரணி சுவஸ்திகா அருளலிங்கம், ஊடகவியலாளர் சங்கவி, சாதாரண பெண் சாளினி என்று தொடர்கின்றது.

பா உ உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ் வின் மற்றும் தமிழ் வின், ஜேவிபி நியூஸ் எனடபவற்றை இயக்கி தன்னுடைய அரசியல் விரோதிகளையும் தனக்கு எதிரானவர்களையும் தாக்கி இனவிரோதத்தையும் கூர்மைப்படுத்தி வந்தார். இந்த இணையத் தளங்கள் அன்று பா உ சிவஞானம் சிறிதரனின் சகோதரனால் இயக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழ் வின் – லங்காசிறியை ஐபிசி பாஸ்கரன் பாங்கிவிட்டார். ஜேவிபி நியுஸ் இன்றைக்கும் பா உ சிறிதரனின் சகோதரனால் இயக்கப்படுகின்றது. இதனை ஜேவிபி நடத்தவில்லை. ஜேவிபிக்கு தங்களுடைய பெயரில் இவ்வாறு ஒரு இணையத்தளம் இருப்பது தெரியுமோ தெரியாது.

இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது : பாராளுமன்ற  உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்!

ஆனால் பா உ எஸ் சிறிதரன் ஜேவிபிநியூஸிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கின்றார். அதே பாணியில் பா உ அர்ச்சுனாவும் தனக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னிக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று சத்தியம் பண்ணுகிறார். தேசியத் தலைவரின் மீது சத்தியம் பண்ணிச் சொல்கின்றார். ஆனால் பா உ அர்ச்சுனாவின் எதிரிகளும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் கதிரிகளும் ஒன்றாகவே இருப்பது தான் ஆச்சரியம்.

ரிக்ரொக்கில் பொழுது போக்காகா கலாய்க்கின்ற ஒரு பல்கலைக்கழகத்திலும் ஒரு டிகிரியும் எடுக்காத ஒரு இளம் பெண் தான் கிளிநொச்சி இராமநாதபுரத்தைச் சேர்ந்த சாளினி. மற்றுமொரு பெண் ஊடகவியலாளரான சங்கவி. அவரும் ஒரு பல்கலைக்கழகத்திலும் ஒரு டிகிரியும் எடுக்காதவர் என பா உ அர்ச்சுனா கண்டுபிடித்திருக்கிறார். தங்களுடைய கிலுகிலுப்புக்காக தங்கள் சமூகவலைத்தள பார்வையை அதிகரிக்க, இந்த ஊழல் ஒழிப்பு அணி வன்னியும் பா உ அர்ச்சுனாவும் இப்பெண்களை விபச்சாரிகள் என்று கூவி வருகின்றனர். பாராளுமன்றத்திலும் சாளினியை விபச்சாரி; என்று முழங்கியுள்ளார் மூன்று பல்கலைக்கழகங்களில் பட்டித்து பட்டம் பெற்றதாகக் கூறும் அர்ச்சுனா. அதற்கு லண்டன் தமிழ் அடியான் ஜால்ரா அடித்து வருகின்றார்.

பாராளுமன்றத்தில் அர்ச்சுனாவை சொந்தவாந்தியை உண்ணும் நாய் என்று வர்ணித்த அமைச்சர் சந்திரசேகரனை ஊழல் ஒழிப்பு அணி வன்னி குறிவைத்தது. அதற்கிடையே பாதிக்கப்பட்ட சாளினி, சங்கவிக்காக குரல் கொடுத்த சுவாஸ்திகா அருளலிங்கத்தை பெட்டை நாய் என்று குதறியிருக்கின்றார் அர்ச்சுனா.

இந்த தமிழ் தலிபான்களின் அடுத்த இலக்கு எந்த அப்பாவிப் பெண்ணாக இருக்குமோ தெரியவில்லை. இப்பெண்களுக்காக குரல்கொடுப்பவர்கள் அடுத்த இலக்காக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அனுராதபுரத்து பெண்ணுக்கு குரல் கொடுக்கும் யாழ் பல்கலை தங்கள் கலைப்பீடத்துக்குள் நடப்பதற்கு குரல் கொடுக்க மறுக்கின்றது !

அனுராதபுரத்து பெண்ணுக்கு குரல் கொடுக்கும் யாழ் பல்கலை தங்கள் கலைப்பீடத்துக்குள் நடப்பதற்கு குரல் கொடுக்க மறுக்கின்றது !

 

சர்வதேச ரீதியாகவும் நாடு தழுவிய ரீதியிலும் மகளிர் தினம் தொடர்பான செயற்பாடுகள் நடைபெற்றுவரும் நாட்களில் ஒரு பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்ட செய்தி வெளிவந்திருந்தது. இது இலங்கை தேசத்துக்கு அவமானத்தை தருகிறது என அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காலம் காலமாக இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை நிலவி வருகிறது. அரசுக்கு எதிரான நியாமான புரட்சிகளின் போதும் இன விடுதலைப் போராட்டத்தின் போதும் நூற்றுக்கணக்கான பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். பாலியல் துஷ்பிரயோகம் என்பது இனமுறுகலில் ஆதிக்கத்தனத்தை வெளிக்காட்டும் அங்கீகரிக்கப்பட்ட கருவியாக பயன்பட்டது. அதனால் ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். அவற்றுள் வெளிவந்த கதைகளை விட சமூக கலாசார இரும்புக் கதவுகளைத் தாண்டி வெளிவராத செய்திகள் ஏராளம். இன்றும் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இச்செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பது ஒரு பக்கமாக இருக்க, யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தமது விரிவுரையாளர்களின் மாணவிகள் மீதான பாலியல் சேட்டைகள் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தொடர்ந்து மௌனம் காத்து வருவது அண்மை காலமாக பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது.

கலைப்பீடாதிபதி உட்பட அரசறிவியல் துறைத்தலைவர் என பலர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் கூட யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் இந்த தகவல்கள் தெரிந்துள்ள போதிலும் அவர்கள் மௌனமாக இந்த சமூக சீர்கேடுகளுக்கு துணைபோகும் தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

பட்டலந்த படுகொலைகள் போல் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் !

பட்டலந்த படுகொலைகள் போல் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் !

பட்டலந்த படுகொலை முகாம் தொடர்பான அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அல்ஜசீரா நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதியிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது இந்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை தன் மீது குற்றம்சாட்டப்பட்டவில்லை என அந்நேர்காணலில் ரணில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நேற்றையதினம் (14) காலை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஆணைக்குழு சமர்ப்பித்த 159 பக்க அறிக்கையின் இறுதி அவதானிப்புக் குறிப்புகளின் படி, 1988 முதல் 1990 வரையிலான காலகட்டம் இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட, மற்றும் வன்முறை நிறைந்த அத்தியாயங்களில் ஒன்றாகும் என்றும், தேசத்தையே சூழ்ந்த பயங்கரவாத சுழற்சியால் குறிக்கப்பட்டது என்றும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பரவலான கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும், அதே நேரத்தில் அரசு மற்றும் அரசு சாரா சக்திகள் சட்டத்தின் எல்லைகளுக்கு வெளியே மிருகத்தனமான எதிர் நடவடிக்கைகளுடன் பதிலளித்ததாகவும் கூறுகின்றன.

பட்டாலந்தா ஆணைக்குழுவின் அறிக்கை, முறையான அரசாங்க கட்டமைப்பிற்கு அப்பால் செயல்படும் சக்திகள், நிழல் “தேடல் குழுக்கள்” உட்பட, சட்ட அமலாக்க முகவர் மற்றும் அரசாங்கத்திற்குள் உள்ள கூறுகளின் மறைமுக ஒப்புதலுடன் நீதிக்கு புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பதை உறுதிப்படுத்துகிறது.

சில சந்தர்ப்பங்களில், இந்த குழுக்கள் அதிகாரப்பூர்வ பாதுகாப்புப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் கிளர்ச்சியை அடக்குவதற்கான பிற சட்டவிரோத முறைகளில் ஈடுபட்டன, அரசாங்கம் கிளர்ச்சியை ஒழிப்பதில் உறுதியாக இருந்தபோதிலும், இந்த நோக்கத்தை அடையப் பயன்படுத்தப்படும் முறைகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அது சிறிதும் அக்கறை காட்டவில்லை என்று அறிக்கை மேலும் குறிப்பிட்டது. ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள், அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைத் தடுக்கத் தவறியதையும், பொறுப்பானவர்களைக் காப்பாற்றுவதில் அதன் தீவிரப் பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

“ஜே.வி.பி.யின் வன்முறை நடவடிக்கைகள் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுத்தன, அத்தியாவசிய சேவைகளை கடுமையாக சீர்குலைத்தன, அதே நேரத்தில் அரசாங்கத்தின் பதில் சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, அரசு பயங்கரவாதத்தின் மூலம் பயங்கரவாதத்தை எதிர்கொண்டது, சில சமயங்களில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் காவல்துறை நடவடிக்கைகளை வழிநடத்தி, அடக்குமுறைகளில் தீவிரமாக பங்கேற்றனர். படலந்தா சித்திரவதை முகாம் இந்த அதிகப்படியான செயல்களின் கொடூரமான அடையாளமாக நிற்கிறது” என்று அது மேலும் கூறியது.“

“ஜே.வி.பி.யின் தூண்டுதலின் அளவு எதுவாக இருந்தாலும், அரசாங்கம் ஒருபோதும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை அனுமதித்திருக்கவோ அல்லது இயக்கவோ கூடாது. அரசு பயங்கரவாதத்தால் பயங்கரவாதத்தை அடக்குவதற்கான முயற்சி உண்மையான கிளர்ச்சியாளர்களை ஒழிப்பதில் மட்டுமல்ல, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாத பல அப்பாவி இளைஞர்களின் மரணத்திலும் விளைந்தது.” – என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பட்டலந்த அறிக்கை ஜே.வி.பியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை வெளிக்கொண்டு வருவதாக காணப்படுகின்ற படியால் தேசிய மக்கள் சக்தி இது தொடர்பான பகிரங்கப்படுத்தல் மற்றும் விசாரணைகளை துரிதப்படுத்துவதாக தமிழ்தேசிய தரப்பினர் குற்றச்சாட்டி வருகின்றனர். படலந்த படுகொலைகள் போலவே அரச பயங்கரவாதம் 2009 இறுதிப்போரில் மேற்கொண்டது எனவும் இது பற்றிய பொறுப்புக்கூறலில் இருந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தப்பியோடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் !

 தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் !
அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நேற்றையதினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அனுராதபுரத்தில் பெண் மருத்துவரை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய முன்னாள் இராணுவ வீரரின் வீட்டை பொலிஸார் சோதனை செய்த போது கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தாக உருவெடுக்கும் AI – முறையான வழிப்படுத்தல்கள் அவசியம் !

ஆபத்தாக உருவெடுக்கும் AI – முறையான வழிப்படுத்தல்கள் அவசியம் !

கண்டிப்பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் இணைந்து ஆபாசப்புகைப்படம் ஒன்றை உருவாக்கி அதில் தமது பாடசாலை இளம் ஆசிரியை ஒருவரின் முகத்தை இணைத்து தமக்குள்ளே பகிர்ந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் படி, மேற்படி மாணவர்களது மடிகணனி மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் பத்தாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் என்றும் தெரியவருகிறது.

இதேவேளை, இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் – ஏப்ரல் இறுதியில் விசாரணைகள் !

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் – ஏப்ரல் இறுதியில் விசாரணைகள் !

 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகளை கோரும் தீர்மானத்தை அங்கீகரித்ததை தொடர்ந்து, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை, இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது எனவும் பாலஸ்தீன பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் எனவும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்த மன அழுத்தம் – தன் அம்மம்மா, பெரியம்மாவை வெட்டி படுகொலை செய்த 15 வயது சிறுமி – கிழக்கில் சோகம் !

அதிகரித்த மன அழுத்தம் – தன் அம்மம்மா, பெரியம்மாவை வெட்டி படுகொலை செய்த 15 வயது சிறுமி – கிழக்கில் சோகம் !

 

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 68 மற்றும் 74 வயதுடைய இரு பெண்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவமாதாக கடமையாற்றிவரும் பெண்ணின் வீட்டிலேயே கொலை இடம்பெற்றுள்ளது. இந்த பெண் மூதூர் வைத்தியசாலையில் வியாழக்கிழமை இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில், அந்த வீட்டில் 15 வயதான அவரது மகள், பெண்ணின் தாய், பெரியம்மா உறவுடைய மற்றுமொரு பெண் என மூன்று பேர் மாத்திரம் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை வேளை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் கொலைச் சம்பவத்தின்போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதன்போது இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர், அந்த சிறுமி தானே கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அம்மம்மா தன்னை எப்போதும் திட்டுவதாகவும் தன் மீது அவருக்கு பாசம் இல்லை என்றும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்துவிட்டதாகவும் பொலிஸாரிடம் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

வடக்கில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் – பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு !

வடக்கில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் – பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு !

 

வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலவசமாக தென்னங் கன்றுகள் மற்றும் உரம் வழங்குவதற்காக 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, நீர் விநியோகித்துக்கும் நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படும்மென பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன நேற்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 30 ஆண்டுகால யுத்தத்தை எதிர்க்கொண்டு வடக்கு மாகாணத்துக்கு இதுவரை காலமும் குறைந்தளவான அபிவிருத்திகளே வழங்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். 10 இலட்சத்து 24 ஆயிரம் தென்னை கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாண மக்களுக்கு தெங்கு பயிர்ச்செய்கைக்கு இலவசமாக உரம் வழங்கப்படும். இதற்கு மாத்திரம் 819 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர்விநியோகித்தக்கும் ஏக்கர் நிலப்பரப்புக்கு அமைய நிவாரணம் வழங்கப்படும். தேயிலை தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்களை முறையாக பராமரிப்பதற்கு நிவாரணம் ஒதுக்கப்பட்டுள்ளது.