தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் !
அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நேற்றையதினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அனுராதபுரத்தில் பெண் மருத்துவரை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய முன்னாள் இராணுவ வீரரின் வீட்டை பொலிஸார் சோதனை செய்த போது கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.