ஆபத்தாக உருவெடுக்கும் AI – முறையான வழிப்படுத்தல்கள் அவசியம் !

ஆபத்தாக உருவெடுக்கும் AI – முறையான வழிப்படுத்தல்கள் அவசியம் !

கண்டிப்பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் இணைந்து ஆபாசப்புகைப்படம் ஒன்றை உருவாக்கி அதில் தமது பாடசாலை இளம் ஆசிரியை ஒருவரின் முகத்தை இணைத்து தமக்குள்ளே பகிர்ந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் படி, மேற்படி மாணவர்களது மடிகணனி மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் பத்தாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் என்றும் தெரியவருகிறது.

இதேவேளை, இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *