January

January

உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோக மையமாக இலங்கை – அமைச்சர் விஜித ஹேரத் !

உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோக மையமாக இலங்கை – அமைச்சர் விஜித ஹேரத் !

உலக நாடுகளுக்கு எரிபொருளினை விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போதுஇ ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சீனாவின் சினோபெக் நிறுவனம் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதன்மூலம் உள்ளுர் சந்தைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்து சினோபெக் நிறுவனமே இறுதி முடிவுகளை எடுக்கும் என தெரிவித்தார்.

சிங்கப்பூர் எந்தவொரு எரிபொருளையும் உற்பத்தி செய்யாத ஒரு நாடாக உள்ளது. எனினும்இ அந்த நாடு இன்று உலகின் பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒரு மையமாகச் செயற்படுகிறது என குறிப்பிட்ட விஜித ஹேரத்இ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையும் அவ்வாறானதொரு எரிபொருள் மையமாக மாற்றமடையும் என்றார்.

என்.பி.பிக்கு ஆதரவளிக்க மாட்டேன் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா ஆதங்கம் !

என்.பி.பிக்கு ஆதரவளிக்க மாட்டேன் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா ஆதங்கம் !

அநுர அரசாங்கத்திற்கு நான் வழங்கிய அனைத்து ஆதரவுகளையும் இன்றிலிருந்து இல்லாமல் செய்வதுடன் இனிமேல் உண்மையான எதிர்க்கட்சியாக நான் நிற்பேன் என நாடாளுமன்றத்தில் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

64 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கதைப்பதற்கு இடம்கொடுக்கவில்லை எனில் அது அரசாங்கத்தின் வெட்கம் கெட்ட செயல். சுயேட்சையான ஒரு தனி உறுப்பினரை கண்டு அரசாங்கம் ஏன் அச்சமடைகிறது? ஒரு ஹெட்லைற் போட்டதற்காக தன்னை கைது செய்யும் அரசாங்கம், ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரை இப்படி கைது செய்வார்களா என அர்ச்சுனா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நேரம் ஒதுக்குவது ஆளும் தரப்பின் பணியல்ல, அது எதிர்கட்சியின் பணியாகும். அவருக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது. ஆகவே, இனவாத விமர்சனங்களை அரசாங்கத்தின் மீது சுமத்துவது தவறானது என்றார்.

இதேவேளை பா.உ அர்ச்சுனாவுக்கு பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து, அவரது தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மௌனம் சாதித்து வருவதாகவும், அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சிறு அசைவை கூட மேற்கொள்ளவில்லை எனவும் அவதானிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட முடியாதபடிக்கு யாழ்.மக்களிடம் ஒழுக்கமின்மை அதிகரித்து கிடக்கிறது – ஆளுநர் வேதனை !

குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட முடியாதபடிக்கு யாழ்.மக்களிடம் ஒழுக்கமின்மை அதிகரித்து கிடக்கிறது – ஆளுநர் வேதனை !

இது எங்களின் நகரம். நாங்கள் வாழும் நகரம். வாழப்போகும் நகரம் என்பதை ஒவ்வொருவரும் மனதிலிருத்திச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

கிளீன் சிறீலங்கா செயற்றிட்ட முன்னெடுப்புத் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ் ‘நகரைத் துப்புரவு செய்தல்’ வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அப்பால் நகரை அதே நிலையில் பேணுவதே முக்கியம்.

கடந்த காலங்களிலும் பல தடவைகள் நகரைச் சுத்தம் செய்தல், கடற்கரையோரங்களைச் சுத்தம் செய்தல் ஆகிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. துப்புரவு செய்த மறுநாளே குப்பைகளை அந்த இடங்களில் பொதுமக்கள் கொட்டுவதால் சுத்தம் செய்ததன் நோக்கம் நிறைவடையாத சந்தர்ப்பங்களே அதிகம் என்றார்.

மக்களிடையே இவ்வாறான ஒழுக்கமின்மை கலாசாரம் அதிகரித்துச் செல்வதாக வேதனை வெளியிட்ட ஆளுநர், 1970 – 1980 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் யாழ்ப்பாண நகரமே இலங்கையில் தூய்மையான நகரமாக அடையாளப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புத் தரப்பினர் தமது படையினரை இந்தச் செயற்றிட்டத்துக்கு வழங்குவதாகத் தெரிவித்தனர். ஆனால் குப்பைகளைப் போடும் மக்களும் உணரும் வகையில் அவர்களையும் இந்தச் செயற்றிட்டத்தில் நிச்சயம் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர் என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் பா.உ கஜேந்திரகுமார் !

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் பா.உ கஜேந்திரகுமார் !

 

இனப்பிரச்சினை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைத் தேசிய மக்கள் சக்தி இதுவரையில் முன்வைக்கவில்லை. 75 ஆண்டு கால பிரச்சினைகளைத் தீர்க்கவே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர். பயங்கரவாத தடைச் சட்டத்தால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜே.வி.பியினருக்கும் இந்த சட்டத்தின் பாதிப்பு நன்றாகவே தெரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் பதிலளித்த நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, பயங்கரவாதத் தடை சட்டம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

மலையக தமிழர்கள் பற்றி பா.உ சிறிதரன் பாராளுமன்றில் மனம்விட்டு பேசுகிறாரா..? கிளி வீட்டில் பேசுகிறாரா..?

மலையக தமிழர்கள் பற்றி பா.உ சிறிதரன் பாராளுமன்றில் மனம்விட்டு பேசுகிறாரா..? கிளி வீட்டில் பேசுகிறாரா..?

 

மருதானை காவல் நிலையத்தின் சிறைக்கூடத்தில் தமிழ் பெண் மரணம் – கொலை என்கிறார் பா.உ சிறிதரன் !

 

கொழும்பு – மருதானை காவல் நிலையத்தின் சிறைக்கூடத்தில் உயிரிழந்த வடக்கைச் சேர்ந்த தமிழ் பெண், தவறான முடிவெடுத்து உயிரிழக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பா. உ சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பெண் எவ்வாறு காவல் நிலையத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முடியும் என்றும் அவர் மேலும் கேள்வியையும் பா.உ சிறிதரன் எழுப்பியிருந்தார்.

பா.உ சிறிதரனின் கேள்விக்கு பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, வவுனியாவை சேர்ந்த குறித்த பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக இருந்து பிடியாணையில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை துரதிஸ்டமான சம்பவம் நடந்துள்ளது. பிரேத பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது என்றார்.

இந்திய அரசால் நக்சல் வாதத்தை முழுமையாக ஒழிக்க முடியுமா?

இந்திய அரசால் நக்சல் வாதத்தை முழுமையாக ஒழிக்க முடியுமா?

அடுத்த ஆண்டு மார்ச்மாத த்திற்குள் இந்தியாவை நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றப்போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்துள்ளார். நக்சல்வாதிகள் உருவாவதற்கான காரணத்தை கண்டுகொள்ளாமல் அவர்களை ஒழிக்க முடியுமா என விடுதலைப் போராட்டங்களில் நேரடியாகவே ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நக்சல் வாதிகளை சிறிது காலத்துக்கு ஒழிக்கலாம் அல்லது ஒழிக்கப்பட்டதான ஒரு மாயை ஏற்படும். ஆனால் அவர்கள் உருவாவதற்கான சூழல் தொடரும்வரை அவர்களை அழிக்க முடியாது என முன்னாள் ஈழப் போராளிகள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜனவரி 20 சத்தீஸ்கரில் நக்சல்களின் முக்கிய தளபதியான ஜெய்ராம் ரெட்டி என்ற சலபதி, உட்பட 16 நக்சல்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் ஜனவரி 16 இலும் பிஜப்பூர் மாவட்டத்திலும் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

நக்சல்வாதம் என்பது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை ஆளும் அரசாங்கங்கள் தீர்க்க தவறும் போது ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தி பொதுவுடமையை நிலை நாட்டுவதேயாகும்.

சத்தீஸ்கர், ஒரிசா, ஆந்திரா, மஹாராஸ்டிரா, ஜார்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம், மற்றும் மேற்கு வங்கம் நக்ஸல்பாரி இயக்கத்தவர்களின் செயல்பாடுகள் காணப்பட்டாலும் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

நடைமுறையிலிருக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத நக்சல்கள் ‘தேர்தல் பாதை, திருடர் பாதை’ என்று விமர்சிக்கின்றனர். மறுபுறம் ஆட்சியாளர்கள் கூட நக்சல்களின் நியாமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்காமல் அரச வன்முறையை ஏவி ஆயுத முனையில் நக்சல்களை கொன்றொழித்து அவர்களை மௌனமாக்குகின்றனர். ஆனால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அப்படியே தான் இருக்கப்போகின்றன.

ஊழல் குற்றச்சாட்டு – முன்னாள் அமைச்சரும் மனைவியும் கைது!

ஊழல் குற்றச்சாட்டு – முன்னாள் அமைச்சரும் மனைவியும் கைது!

நேற்று புதன்கிழமை மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் யாப்பவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு பிங்கிரியா மற்றும் நாரம்மல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 6.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெற்று, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதே இந்தக் கைதுகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் 6 பேரை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

அரிசி பதுக்கினால் அரிசி ஆலைகள் இராணுவவசமாகும் அரிசி மாபியாக்களுக்கு எச்சரிக்கை !

அரிசி பதுக்கினால் அரிசி ஆலைகள் இராணுவவசமாகும் அரிசி மாபியாக்களுக்கு எச்சரிக்கை !

ஜனவரி 21 தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர அரசியை பதுக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நீக்க அஅரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்றாத போது அரிசி அறுவடையாகி களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்படும் வரை இராணுவ கண்காணிப்பு போட வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி அனுரா.

இனிமேல் அரிசிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை விட ஒரு சதம் கூட அதிகமாக விற்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் கடும்தொனியில் எச்சரித்தார் ஜனாதிபதி அநுர.

நாட்டில் அவசரநிலை காலங்களில் இராணுவ உதவி பெறப்படுவது வழமைதான் என்கிற போதும் அரிசிப் பிரச்சினையை தீர்க்க காத்திரமான வேறு பல பொறிமுறைகள், கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெறலாம் அல்லது முன்னெடுக்கலாம்.

நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடியில் பா.உ செல்வம் !

நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடியில் பா.உ செல்வம் !

பா.உ செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் கருதது வெளியிட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு சதி செய்தேன் என்ற அடிப்படையில் எம்மை கைது செய்தார்கள். அது தொடர்பான வழக்குகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 16 ஆம் திகதி வழக்கு நடைபெற்ற போது நான் அதற்கு சமூகமளிக்கவில்லை. அதனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.