2010

2010

செம்மொழி மாநாட்டில் இலங்கைத் தமிழ்கட்சி உறுப்பினர்களுக்கு வரவேற்பு இல்லை.

தமிழகத்தில் நாளை (June 23 2010) நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்தில் 14 பேராளர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுக்கான அழைப்பிதழ்கள் செம்மொழி மாநாட்டுக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழக் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நெறிப்படுத்தலில்  தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் ஆய்வரங்கு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் எம். இராசேந்திரன் அழைப்பிதழ்களை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அழைக்கப்பட்டவர்களில் பேராசிரியர் அ.சண்முகதாசன், பேராசிரியர் சி. சிவலிங்கராசா, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், பேராயர் கலாநிதி எஸ் ஜெபநெசன், கலாநிதி இ. விசாகரூபன், கலாநிதி சி. செல்வரஞ்சிதம் ஈ. குமரன், ஆசிரிய கலாசாரல் நிலைய விரிவரையாளர் அ, லலிசன், பேராசிரியர் மு.புஸ்பரட்ணம், செல்வி. செல்வாம்பிகை நடராசா, ஆசிரியர் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் த.அஜந்தகுமார், செ.சுதர்சன், பா.அகிலன், கவிஞர் சோ. பத்மநாதன், ஆகியோர் உள்ளங்கியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் எவற்றிங்கும் அழப்பு கிடைக்கப்பெறவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கே.பியை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர். – செல்வம் அடைக்கலநாதன் M.P. (TNA)

Selvam Adaikalanathan TNA_TELOதற்போது அரசாங்கத்திடம் இருக்கும் கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தின் பின்னான மக்களின் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளில் ஈடுபடப்போவதாகக் கூறினாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அவரை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளளார்.

யுத்தத்தின் பின்னரான மக்கள் பணிகளில் கே.பி பங்களிப்புச் செய்ய பலர் முன்வருவதை வரவேற்கலாம் என்றாலும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அவருக்கு உதவப் போவதில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்து குமரன் பத்மநாதன் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த ஒன்பது புலி உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றப்போவதாக வெளியான செய்திகள் குறித்து கேட்டபோதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை ஒரு துரோகியாகவே பார்க்கின்றார்கள் எனவே, அவரது கருத்துக்களுக்கு இணங்கி புலம்பெயர் மக்கள் செயல்பட மாட்டார்கள் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தந்தை செல்வநாயகமும் தனயன் பிரபாகரனும்! : அழகி

Pirabakaran V_LTTESelvanayagam_SJVவரலாறுகள் ஆராயப்பட வேண்டும் என்பது முக்கியமானது. அதில் தவறுகள் இருப்பின் அவற்றை திருத்தி செம்மையாக நடக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். ஈழமக்களின் துயரங்கள் இன்னமும் நின்றபாடில்லை. அவை மேலும் தொடருவதற்கான வாய்ப்புக்களே தெரிகின்றன. ஏன்? ஈழத்தமிழர்கள் ஒரு போதும் சமுதாயத்தை நேசிப்பது கிடையாது. சமூகங்கள் ஒன்றுபட்டு வாழ்ந்ததும் கிடையாது. இப்பொழுது உள்ள இந்த நாகரீக வளர்ச்சியடைந்த தொலைத் தொடர்புகள் உலக மக்களை மிகவும் கிட்ட கொண்டு வந்துள்ள போதிலும் கூட எம்மவர்களாலே எமக்கு அழிவு, நாம் எப்போதும் ஒரு உணர்ச்சி உந்துதலுக்கு அடிமையாகவே எம்மை ஆட்படுத்தி கொண்டுள்ளோம். இதிலிருந்து எப்படி நாம் மீள வேண்டும்? மீண்டு வருவதற்கான தேவை என்ன? எதற்காக நாம் மீள வேண்டும்?

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒவ்வொரு இணையத்தளத்தையும் உருவாக்கி கொண்டு எந்தவொரு உடன்பாட்டிற்கும் வராமல் வரமுடியாமல் மாக்ஸியம் லெனினிஸம் பேசுவதில் யார் கெட்டிக்காரர் என்பதில் தான் நாம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளோம். எப்பொழுது தான் இந்த மேதாவித்தனங்கள் முடிவுக்கு வரப் போகின்றது? இவ்வளவு காலமும் நாம் காட்டிய மேதாவித்தனங்கள் போதுமானது என்றே நான் நினைக்கிறேன். அப்படியானால் இதற்கு மேல் நாம் என்ன செய்ய வேண்டும்?

1) எமது அரசியல் தலைமைகள் அறுபது வருடமாக ஈழத்தமிழர்களுக்கு என்னதான் செய்திருக்கிறார்கள்?

2)எல்லா இயக்கங்களிலும் நடந்த படுகொலைகளையும் வெளிக் கொணர்ந்து போராடவென வந்தவர்களை ஏன் அடித்தும் விச ஊசி போட்டும் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் எரித்தும் புதை குழிகளிலும் கொன்று தள்ளினார்கள் என உரிய விளக்கங்களை சம்மந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இப்படியான மனநோயாளிளை இனங்கண்டு நடந்து முடிந்த மனிதப் பேரழிவுகளை மீண்டும் வராது தடுக்க முடியும் என நினைக்கிறேன்.

கடந்த கால ஈழத்து அரசியலில் நாம் விட்ட தவறுகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் சில தகவல்களை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதில் சரி பிழை இருப்பின் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

1948 ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. எப்போதும் சுதந்திரம் கிடைத்த மக்கள் சந்தோசமாகவே இருந்திருப்பார்கள். அப்படியென்றால் தமிழர்களும் சந்தோசமாகவே இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் வாழ்வு அமைதியை இழந்திருந்தால் அங்கே பிரிவினை என்றொரு பேச்சு இருந்திருக்கும். அக்கால கட்டத்தில் பிரிவினை என்ற எண்ணம் தோன்றியிருப்பின் ஏன் இவர்கள் ஆங்கிலேயரிடம் பிரிவினை என்ற கொள்கையை வைக்கவில்லை. ஏன்? தெரிந்தவர்கள் பதில் தாருங்கள். பெரிய படித்தவர்கள் அரசியல் வாதிகள் குறிப்பாக ஜி ஜி பொன்னம்பலம் போன்றோர் அக்கால கட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

தமிழர் இளைஞர் காங்கிரஸ் பின்பு காங்கிரசாக மாறியபோது ஜிஜி பொன்னம்பலம் தலைவராக இருந்தார். அந்த காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மூன்றாம் கட்ட தரத்தில்தான் செல்வா இருந்திருக்கிறார். அப்படி இருந்த செல்வா ஏன் தமிழரசு கட்சியை ஸ்தாபித்தார்? என்பது தான் எனது கேள்வி. ஜனநாயக முறையில் எத்தனை கட்சிகளும் ஆரம்பிக்கலாம். தவறில்லை. ஆனால் என்ன பிழையைக் கண்டு பிடித்து பிரிந்து சென்றார்? இதுவும் எனது கேள்வி. இப்படியே பல தமிழ் தலைவர்கள் எமது மக்களை ஏதோ ஒரு மாயவலைக்குள் சிக்க வைத்து தமது அரசியல் லாபங்களுக்காகவும் சுயநல சுகபோகங்களுக்காகவும் எமது மக்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது அறுபது வருட அரசியலில் எம்மால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. எந்த ஒரு அடிப்படைத் தேவையான பூகோள ரீதியான பரந்த சிந்தனை இல்லாமலே எமது மக்களை வெறும் உணர்ச்சியூட்டி நெருப்பாகவே அதை உருவாக்கி காய்ந்து கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே அரசியல் கற்றவர்களே எமது கடந்த கால வரலாற்றை ஆராயும் போது அதன் தவறுகள் வெட்ட வெளிச்சமாகவே வெளிப்படும். எமது தமிழினம் எப்பொழுதும் கடந்த கால வரலாற்றை படித்துப் பார்ப்பதற்கு விருப்பமில்லாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஏன் என்பதுதான் எமக்கு புரிவதே இல்லை. பல தடவைகள் நாம் எமது அறிவை ஒழுங்காக பயன்படுத்தி இருந்தால் இப்படியொரு முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒன்று நடக்காதவாறு தடுத்திருக்கலாம்.

தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் தமது இருப்பை இழந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் இரு கட்சிகளும் சேர்ந்து தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவே பிரிவினை என்ற கோசத்தையும் சுயாட்சி சமஸ்டி ஆகியவற்றையும் முன் மொழிந்து 1977 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு வேப்பிலை அடித்து திருநீறு எறிந்து 22 பேரும் பாராளுமன்றம் சென்றார்கள். இவர்களுடைய ஆக்கிரோசமான நெருப்பான வார்த்தைகள் காற்றை விட மோசமான வேகத்தில் இளைஞர்களை வன்முறைக்கு உந்தி தள்ளியது. ஆனால் இந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எந்தவிதமான அடிப்படையான ஆயுத போராட்ட உணர்வுகளும் இருந்திருக்கவில்லை. ஆங்காங்கு நன்கு அரசியல் தெரிந்தவர்கள் தொலை நோக்கு கொண்டவர்கள் இவர்களுடைய அரசியல் தவறு என்று விமர்சித்து இருக்கிறார்கள். விமர்சித்தவர்களை கூட்டணியின் முக்கியஸ்தர்கள் துரோகிகள் என்றே வருணித்திருக்கிறார்கள். இங்குதான் கல்வியாளர்கள் மக்களை நேசித்தவர்கள் பண்புள்ளவர்கள் எல்லோரையும் அழித்தொழிக்க ஆரம்பிக்கிறார்கள்.

பின் பலர் உணர்ச்சி மிக்க இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எந்தவித விசாரணைகளுமின்றி விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படாமல் பல உயிர்களை சுட்டுக் கொல்கிறார்கள். இந்த கொரூர கொலைகளை த.வி.கூட்டணி எந்த கண்டனங்களுமின்றி மௌனமாகவே இருந்து இந்த படுகொலைகளுக்கு உரம் எறிந்து எண்ணை ஊற்றி ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அரசியல் சுயநல நோக்கங்களுக்கான இளைஞர் வளர்ப்புக்கள் இறுதியில் இவர்களையே கொலை செய்து விடுகிறது. தமிழ் மக்களாகிய நாங்கள் எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் எப்படி த.வி. கூட்டணியை நூறு வீதம் ஆதரித்து எமது விடிவிற்காக பாராளுமன்றம் அனுப்பினோமோ அவர்களைக் கொன்றவர்களையும் பின்பு ஆதரித்துள்ளோம். பல இயக்கங்களையும் உன்னத மனிதர்களையும் ஒன்று விடாமல் அழித்துக் கொன்ற தமிழ்ஈழ விடுதலைப் புலிகளையும் நாம் ஆதரித்துக் கொண்டுதான் இருந்தோம். இந்தக் காட்டு மிராண்டிகள் உலக அரங்கிலே எமது பிரச்சனைகளைப் பேசுவதற்கே மனிதர்கள் இல்லாத அளவிற்கு கொன்று புதைத்து போட்டிருந்தார்கள்.

இப்பொழுதும் கூட ஐம்பதாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கவீனர்களாகி வறுமையிலும் பிச்சைஎடுத்துக் கொண்டும் உள்ளார்கள். அவ்வளவு கொடுமைகள் நடந்து முடிந்து விட்ட நிலையிலும் பல போராளிகள் பொதுமக்கள் உயிருடனே சித்திவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையிலான புகைப்படங்கள் காட்சிகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படியான கோரமான பிடியில் இருந்து தமிழ் மக்கள் இன்னும் மீளவேயில்லை. ஆனால் புலம்பெயர் புலிப்பினாமிகளும் அவர்கள்சார்ந்த தமிழினமும் கடந்தகாலத்தில் நிகழ்ந்த குற்றங்களை உணராமல் ஆராயாமல் ஈழத்தமிழ் மக்களின் குருதி காய்வதற்கு முன்னமே வட்டுக் கோட்டை தீர்மானம் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் எனக் கூறிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். உண்மையில் இதயமுள்ள மனிதர்களா இவர்கள்?

நாம் வாழும் இந்த ஐரோப்பிய நாடுகளில் எத்தகைய ஐனநாயகத்தை மனிதப் பண்பை சட்டங்களை மதித்து எப்படி வாழ்கிறார்கள். ஒவ்வொரு வேலை செய்யும் போதும் எப்படியெல்லாம் ஆராய்ந்து முடிவு எடுக்கிறார்கள் என்பதெல்லாம் எம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் மாத்திரம் மனிதப்பண்பை இழந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மீண்டும் ஜிரிவி தனது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டுள்ளது. ஜிரிவி யின் அழுகுரல்கள் உண்மையில் எந்தக் கருங்கல் இதயம் கொண்டவர்களையும் கரைத்து விடும் சோகம் வேதனை நிறைந்தது. ஆனால் இந்த அழுகுரல்களால் தமிழரைத் தவிர வேறெந்த இன மக்களையும் எம்மோடு சேர்ந்து கவலைப்பட வைக்க முடியவில்லை. ஏன்? ஜிரிவி உரிமையாளர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் அனுதாபங்களில் தான் அவர்களுடைய பிழைப்பு ஓட்டப்படுகிறது. இது சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் புரிந்த ஒன்று. எப்படி இந்த அரசியல் அறிவு மனிதப் பண்பு இரக்கம் இல்லாத பிரபாகரனை இந்த தமிழனம் ஆதரித்ததோ அதே போல் நாடு கடந்த அரசாங்கத்தையும் ஆதரிக்க கோருகின்றது. பிரபாகரனை ஆதரித்த குற்றத்திற்காக மூன்று லட்சம் தமிழர்கள் மரணத்தை அடைந்து, கைகால்களை இழந்து, முள்ளிவாய்காலில் பிரபாகரனுடைய பிணம் நாதியற்று உரிமை கோர ஒரு ஈ காக்கா கூட இல்லாமல் கோவணத்துடன் கிடந்தது செய்திகளாக வந்து சேர்ந்தது.

முப்பந்தைந்து வருட போராட்டம் அரசியல் பற்றாக்குறையாலும் சர்வாதிகார போக்காலும் தமிழ் மக்களை அநாதையான நிலைக்கு தள்ளிற்று. ஏன் இவ்வாறு தள்ளப்பட்டது என யாராலும் ஆராயப்படவில்லை. ஆனால் புலிப்பினாமிகள் தமிழ் மக்களுக்குள் இருந்த துரோகிகள் தான் காரணம் என வரலாற்றை புரட்டிச் சொல்கிறார்கள். மேலும் பிரபாகனும் அவரது குடும்பமும் தமிழ் மக்களுக்காகத்தான் உயிர் கொடுத்தார்கள் எனவும் சூரிய தேவன், கரிகாலன், ராஐகோபுரம் என்றெல்லாம் புகழ் பாடுகிறார்கள். ஆனால் தலைவரும் புலிகளும் தமது உயிர்கள் பறிக்கப்பட போகின்றன என தெரிந்தும் மோசமான கொடுமைகளை இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுக்கு செய்தார்கள்.

1)மக்களுக்காக அனுப்பப்பட்ட சீனி பருப்பு போன்றவற்றை விற்று காசு பார்த்தார்கள்.

2)சாப்பாட்டிற்கே வழியற்ற குடும்பங்களின் 10, 12 வயது பிள்ளைகளை பிடித்து சென்றார்கள். பெண் குழந்தைகளின் தலைமுடியை கட்டையாக வெட்டி இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தார்கள்.

(3)தாம் தமிழினத்தின் காவலர்கள் என சொல்லி தமது இனத்தை தாமே கொன்று குவித்து போர் குற்றம் செய்தார்கள்.

இலங்கை அரசு போர் குற்றம் செய்தது என கண்டிக்கும் நாம் புலிகள் செய்த போர் குற்றங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் சுயநலம் மிக்க தமிழர்கள் தமது மக்கள் மத்தியில் அம்பலமாவார்கள். ஆனால் ஜிரிவி ஒற்றுமை இல்லை எல்லோரும் ஒன்றுபடுவோம் என்றே அறைகூவல் விடுத்துக் கொண்டு இருக்கிறது. ஏன் இவர்கள் ஒன்றுமே தெரியாத ஞான சூனியங்களாக இருக்கிறார்கள். இத்தனை அவலங்கள் நடந்து மக்களை அகதிகளாக முகாம்களிலும் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் செய்திகளை அறிந்து பார்த்த பின்பும் எந்தவித நடவடிக்கைகளுக்கும் தங்களை தயார்ப்படுத்தாமல் தமிழீழ அரசாங்கம் என ஒன்று தயாரித்து இருக்கிறார்கள். இவர்களுடைய தயாரிப்புக்களில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் என்ற பிரமாண்டமான படம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு கடலிலே கரைக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்திற்கான சுய விமர்சனம் இவர்களால் ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை. ஓன்றுமே நடக்காத மாதிரி இப்போது மே 18 ம் திகதி நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அகிம்சைப் படத்தை திரைக்கு விட்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே இந்தப் படத்திற்கான விமர்சனத்தை முன்வையுங்கள்.

அத்தோடு தமிழ் மக்களே! மற்றவன் தமிழ் ஈழத்தை எடுத்துத் தருவான் நாம் இங்கிருந்து எமது பிள்ளைகளை டாக்டர்களாக்கி பட்டதாரிகளாக்கி உள்ள கலைகளெல்லாம் கற்பித்து அரங்கேற்றங்கள் செய்து, நாங்களும் வீட்டு வாசலில் ஏறினால் கார் இறங்கினால் கார் காஞ்சிபுரம், பனாரஸ் பட்டுவேட்டி -கட்டி கட்டியாய் தங்கம், வறுத்த கோழி, பீட்ஸா என தின்று குடித்து உள்ள சுக போகங்களையும் கைவிடாது- போனால் போகுது இலங்கை அரசாங்கம் இதற்கெல்லாம் ஊருக்கு போகும் போது கோபிக்கவா போகின்றது என வட்டுக் கோட்டை, நாடுகடந்த அரசாங்கம் போன்றவற்றிற்கு கைகளில் மைதடவி வாக்களித்து – ஜிரிவிக்கு தொலைபேசி எடுத்து அரசியல் விமர்சனங்ளைப் பேசிக் கொண்டு துளி இரத்தம் சிந்தாமல் ஐரோப்பாவின் ஜனநாயக உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஈழத்தின் அப்பாவி மக்களின் குருதியிலே வாழ்ந்தது போதும்!

ஐயா புலம்பெயர் தமிழினமே! ஒவ்வொருவரும் முதலில் உங்களது பிள்ளைகளைப் போல் மற்றவர்களுடைய பிள்ளைகளையும் நேசியுங்கள். ஐரோப்பாவில் இருக்கும் புலிப் பினாமிகளே! சுயநல பேய்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட வேலைக்கு உடனடியாகவே லீவு போட்டு விட்டு வைத்தியரிடம் கொண்டு ஓடுகிறீர்கள். சொல்லப் போனால் உங்களுடைய பிள்ளைகள் வைத்தியராகவோ பொறியியலாளராகவோ ஆக்குவதற்கு துடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஆண் பெண் என எந்த பேதமும் பாராமல் புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு போய் பலியிட்ட போது எத்தனை பச்சிளம் பாலகர்கள் குண்டடிபட்டு துடித்திருப்பார்கள். அதை படம் பிடித்து உங்கள் தொலைக்காட்சிகளில் கண்ணுங்கருத்துமாய் ஒளிபரப்பி காசு சேர்த்தீர்கள்.

புலி பினாமிகளே! புலம்பெயர் நாடுகளில் இருந்து எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளை தற்கொடை படைக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். தயவு செய்து பதில் தாருங்கள். ஜிரிவி அறிவிப்பாளர்களே! மிகவும் கவலை தோய்ந்ததாக முகங்களை வைத்துக் கொண்டு உணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்கிறீர்களே உங்களுடைய பிள்ளைகள் யாராவது ஈழத்தில் போராட அனுப்பப்பட்டு கொல்லப்படடுள்ளார்களா? ஈவு இரக்கம் இருந்தால் நீங்கள் விட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள்.

இறுதியாக, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் தனிநாடு பிரிந்து தான் ஆக வேண்டும். சந்தர்ப்பம் தன்னலமற்ற தியாகம் நேரம் இவைகள் சரியான தருணங்களில் பாவிக்கப்படும் போது நிச்சயம் ஈழம் மலரும். தயவு செய்து புலப்பினாமிகளே தமிழர் தொலைக்காட்சிகளே நீங்கள் ஈழப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருங்கள். நீங்கள் முற்றாக ஒதுங்கி இருக்கும் பட்சத்தில் தரமான நேர்மையான மனிதநேயம் மிகுந்தவர்களால் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

முதலில் அங்குள்ள மக்களின் வறுமை அகன்று நிம்மதியாக மூன்று வேளை உணவு உண்ண ஏற்பாடு செய்ய வேண்டும். அங்குள்ள குழந்தைகளின் கல்வியை குறிப்பாக வளர்க்க வேண்டும். இவற்றை திட்டமிட்டு நடத்தி வெற்றி காணவேண்டும். ஏனெனில் சிங்கள் அரசு திட்டமிட்டு இவற்றை அழித்து கொண்டிருக்கிறது. ஆனால் புலிப் பினாமிகளே!! நீங்கள் அமெரிக்காவில் பாராளுமன்றம் கட்டவென பணம் சேர்த்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. நீங்கள் நடக்க முடியாதவைகளை சொல்லித் தான் இதுவரை காசு சேர்த்தீர்கள். இனியும் சேர்ப்பீர்கள்.

தமிழ் மக்களே! இனியும் தொடர்ந்து ஏமாளிகளாக இருக்காதீர்கள். தமிழினம் மேலும் அழிவதற்கு காரணமாக இருக்காதீர்கள்.

புலிகளுக்கு உதவி வழங்குவதற்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு

111usa.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முதலாவது தமிழ் நூல் 1578 இல் பிரசுரிப்பு “தம்பிரான் வணக்கம்”

தமிழில் நூல் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்பட்ட வரலாறு சுவாரஸ்யமானது.முதலாவது தமிழ் நூல் 1578 அக்டோபர் 20 ஆம் திகதி வெளிவந்தது. அன்றைய தினம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடதாசி மூலம் போர்த்துக்கேய மிசனரியான ஹென்ரிக் ஹென்ரிக்குயஸ் (அன்ரிக் அன்ரிக்குயஸ்) “தம்பிரான் வணக்கம்” என்ற நூலை பிரசுரித்துள்ளார்.

16 பக்கங்களுடன் 10   14 செ.மீ. புத்தகம் பிரசுரிக்கப்பட்டதாகவும் அதன் ஒவ்வொரு பக்கமும் 24 வரிகளைக் கொண்டதாக இருந்ததாகவும் அதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருவானது ஓலைச்சுவடிகள், கற்களில் பயன்படுத்தப் பட்டவையெனவும் தமிழ் வரலாற்றியலாளரான புலவர் எஸ்.ராஜு கூறியதாக “இந்து” பத்திரிகை நேற்று {21.06.2010 }திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸிஸ் சேவியர் போர்த்துக்கேய மொழியில் எழுதிய “டொக்ரினா கிறிஸ்தம்” என்ற நூலின் மொழி பெயர்ப்பே இந்த நூலாகும். தமிழில் பிரார்த்தனை நூலொன்று இருக்க வேண்டுமென்ற அருட்தந்தை ஹென்றிகுயஸின் முயற்சியின் பெறுபேறாகவே இந்த நூல் பிரசுரிக்கப்பட்டதாக ராஜு கூறுகிறார்.

1556 இல் போர்த்துக்கல்லிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி கொல்லத்தில் இந்த நூல் அச்சிடப்பட்டது.இந்திய மொழியில் பிரசுரிக்கப்பட்ட முதலாவது நூல் இதுவென ராஜூ சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னர் முதலாம் ஸ்ரீரங்க ராயர் (15781586)இமைசூர் ஆட்சியாளர் ராஜா உடையார் (15781617), மதுரை ஆட்சியாளர் வீரப்பநாயக்கர் (15721595) தஞ்சாவூர் ஆட்சியாளர் அச்சுதப்ப நாயக்கர் (15721614) ஆகியோரின் காலகட்டத்திலேயே இந்த நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அச்சமயம் தகவல்களை வெளியிடுவதற்கு செப்புத்தகடுகள், கற்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.

“தம்பிரான் வணக்கம்” நூலுக்கு முன்னர் தமிழ் நூலொன்று பிரசுரிக்கப்பட்டிருந்ததாயினும் அது போர்த்துக்கேய எழுத்துருவிலேயே இருந்தது. கார்த்திலா, லின்கோயா தமிழ், வோர்த்துக்கேயஸ் என்ற அந்த நூலானது போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனில் அச்சிடப்பட்டதாக ராஜு கூறுகிறார்.

அருட்தந்தை ஹென்ரிக்குயஸ் போர்த்துக்கல்லின் விப்பாவிகோ சாவில் 1520 இல் பிறந்தவர். போர்த்துக்கல்லிலுள்ள கொய்ம்பிரா பல்கலைக்கழகத்தில் கற்ற பின்னர் 1546 இல் அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். தமிழில் மிகவும் பிரியமுடையவரான அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது “ஆமென்” என்பதனை “ஓம்” என்று மாற்றியதாக ராஜு கூறுகிறார்.

“கிறிஸ்ரியானி வணக்கம்” (1579),”கொன்பெசனாரியோ” (1580), “அடியார் வரலாறு”(1586) ஆகிய நூல்களையும் அவர் எழுதியுள்ளார். புன்னைக்கயலில் 1600 பெப்ரவரி 6 இல் அவர் இறந்தார். அவரின் பூதவுடல் தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் நீண்டகாலம் சென்ற பின்பே அதிகளவு நூல்கள் பிரசுரிக்கப்பட்டதாக ராஜு கூறுகிறார். தமிழில் முதலாவதாகப் பிரசுரிக்கப்பட்ட தமிழ் நூல் திருக்குறளாகும். (1812) இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் அச்சமயம் சென்னை கலெக்டராக இருந்த பிரான்சிஸ் வைற் எலிஸ் என்பவராகும். சென்னை கல்விச் சங்கத்தை ஸ்தாபித்தவரும் அவரேயாகும்.

அச்சுக்கூடங்களை ஸ்தாபிக்க இந்தியர்களுக்கு 1835 இலேயே அனுமதி வழங்கப்பட்டது.

மீளக்குடியேறும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு; பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் – முல்லைத்தீவில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய

gotabaye.jpgமுல்லைத் தீவு மாவட்ட மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்தி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் சேவையாற்றும் போது அவர்களின் உள்ளத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கக் கூடிய வகையில் செயற்படுவது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். அவர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடை பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் காரணமாக தற்போது நாட்டின் நிலைமையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினால் இம்மாற்றத்திற்கு ஏற்றவகையில் நாமும் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்களது உள்ளங்களை வெற்றிகொள்ளக்கூடிய வகையில் சேவையாற்ற வேண்டும்.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது. அதற்கு ஏற்றவகையில் நாம் பெற்றிருக்கும் வெற்றியையும் சமாதானத்தயும் நாம் பாதுகாத்து தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம்.

மக்களின் உள்ளங்களையும் நம்பிக்கை யையும் வென்றெடுக்கக் கூடியவகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எமது படை வீரர்கள் சிறு தவறுவிட்டாலும் அதனை தூக்கிப் பிடிப்பதற்கு சில வெளிநாட்டு அமைப்புக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதனால் நீங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

நாம் புலிகளிடமிருந்து மீட்டெடுத்துள்ள பெரும்பாலான ஆயுதங்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டவையே. அவை கடல் வழியாகவே இங்க கொண்டு வரப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இவ்வாறு ஆயுதங்கள் கடல் வழியாக நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் பொறுப்பு கடற்படையினரைச் சார்ந்ததே.

மக்களின் உள்ளத்தையும் நம்பிக்கையையும் வெற்றிகொள்ளும் வகையில் செயற்படும்போது புலனாய்வு தகவல்களையும் அம்மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதனைப் பாதுகாப்பு படையினர் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

புலிகளின் தலைமைத்துவமும் இராணுவ கட்டமைப்பும் பயங்கரவாதமும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. என்றாலும் ஈழவாதமும் பிரிவினைவாத சிந்தனைகளும் வெளிநாடுகளில் செயற்படுகின்றன. இவற்றின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் நாட்டுக்குள் வராமல் இருப்பதை தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எமது பாதுகாப்பு கட்டமைப்பு மறு சீரமைக்கப்பட்டு பலப்படுத்தப்படும் என்றார்.

இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதியும், விமானப்படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸ்ஸ சமரசிங்க, பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய, முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா உட்பட பாதுகாப்பு படையதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

“லப்டொப்” பென செங்கட்டி; இலங்கை வர்த்தகரை ஏமாற்றிய சென்னை வியாபாரி

லப்டொப் கணினி வழங்குவதாக 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு செங்கட்டி வைத்துள்ள பொதியை இலங்கை வர்த்தகருக்கு கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டுகளுக்காக சென்னை விமான நிலையப் பொலிஸார் மண்ணடியைச் சேர்ந்த வர்த்தகரொருவரை கைது செய்துள்ளனர்.

மொஹமட் ஹசன், மொஹமட் றபீ, மொஹமட் பௌஸி ஆகியோர் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர்களாகும்.அவர்கள் புடவை மற்றும் பாதணிகள் வியாபாரத்திற்காக அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வது வழக்கமாகும். கடந்த வியாழக்கிழமை அவர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை அவர்கள் திரும்பிச் செல்லவிருந்தனர். அவர்கள் மண்ணடியிலுள்ள மொஹமட் ஷாபீர் என்ற வர்த்தகருடன் தொடர்பு கொண்டனர். குறைந்த விலையிலான லப்டொப் கணினிகளை தன்னால் வழங்க முடியுமெனவும் அதனை இலங்கையில் அதிக விலையில் விற்கலாம் என்றும் ஷாபீர் ஹசனுக்கு கூறியுள்ளார். ஹசனிடமிருந்து பின்னர் ஷாபீர் 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளார். ஹசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவருடைய பொதி சோதனையிடப்பட்டது. அதற்குள் சந்தேகமான பொருள் இருந்தது அவதானிக்கப்பட்டது.

சோதனையில் கணினிப்பை பொதிக்குள் வெறும் செங்கட்டியொன்று இருந்துள்ளது. தான் செங்கட்டியைக் கொண்டு செல்வது குறித்து ஹசன் அறிந்திருக்கவில்லையென்று பொலிஸார் இந்து பத்திரிகை நிருபருக்குக் கூறியுள்ளனர். பொதிக்குள் இருந்தது லப்டொப் என அவர் கருதியிருந்தார். கடந்த இரு நாட்களாக விசாரணை இடம்பெற்றபோது மண்ணடி வியாபாரி இலங்கை வர்த்தகரை ஏமாற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாபீர் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.3 இலங்கை வர்த்தகர்களும் விடுவிக்கப்பட்டு வீடு செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளனர்.

ஷாபீர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் பாடசாலையை விட்டு விலகிய பின் இலங்கையில் பல வருடம் இருந்து விட்டு பின்னர் சென்னையிலுள்ள மண்ணடிக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அவருக்கு பல மொழிகள் தெரியும் எனவும் பொலிஸார் கூறினர்.

பிரெட்றிக்காவின் LapTop நீதிமன்ற பாதுகாப்பில்.

pratrika.jpgஜெனரல் சரத் பொன்சேகா வழங்கிய பேட்டி பற்றிய குறிப்புகள் உள்ளடக்கிய குறிப்பேட்டை ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் சம்பா ராஜரட்னவின் உத்தரவின் பேரில் பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தார். சம்பந்தப்பட்ட குறிப்பேட்டை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான் பிரதம ஆசிரியர் வெளியேறுவதற்கு அனுமதி வழங்கினார்.

சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் இருந்து ரகசிய பொலிஸார் அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டுள்ளதாக பிரதி சட்டமாஅதிபர் வசந்த நவரட்ன நீதிமன்றத்துக்கு கூறினார்.

‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் ஜென ரல் பொன்சேகாவின் நேர்காணல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அந்த சமயத்திலேயே பிரதி சட்டமா அதிபர் மேற்கூறியவாறு தெரிவித்தார். ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் சார்பாக வாதாடிய சட்டத்தரணி என். எம். சஹீட் குறிப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட நேர்காணல் உள்ளடக்கிய குறிப்பேடு மூல ஆவணம் என்பதால் அதனை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறு அவர் கூறினார்.

நேர்காணல் இடம்பெற்ற குறிப்பேடு தொடராக இலக்கமிடப்படவில்லை என்று பிரதி சட்டமா அதிபர் கூறியதையடுத்து குறிப்பேட்டில் தொடர்ச்சியாக இலக்கமிடுமாறு நீதவான் உத்தரவிட்டார். ஜெனரல் பொன்சேகாவின் சார்பாக வாதாடிய சட்டத்தரணி நளின் லத்துவ ஹெட்டி குறிப்பேடு மீது நம்பிக்கை இல்லையென்று கூறினார்.

சண்டே லீடர் பத்திரிகையின் செயற்பாடுகள் அவ்வாறான நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் அப்பத்திரிகை பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சர்ச்சைக்குரிய செய் திகளை பிரசுரிப்பதாகவும், இவ்வாறான ஒரு அறிக்கையை அப்பத்திரிகை வெளியீட்டின் நோக்கம் என்ன என்பதை தனக்கு விளங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நேர்காணல் இடம்பெற்ற பக்கங்களுக்கு இடையே குறிப்பேட்டில் சில காலி பக்கங்களை காண முடிவதாகவும், பத்திரிகைக்கு வெளியாரிடம் இருந்து பணம் கிடைக்கும் போது ஏதேனும் தேவையானளவு நிறைப்பதற்கு அவை காலியாக விடப்பட்டுள்ளனவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அவ்வாறான காலிப் பக்கங்கள் குறிப்பேட்டில் உள்ள விடயத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜுலை 12ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் ஜெனரல் பொன்சேகாவை தொடர்ந்து இராணுவ பாதுகாப்பில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் இருந்து காவற்துறைக்கு ஆட்சேர்ப்பு

வடக்கில் மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300 இளைஞர் யுவதிகளை காவற்துறை பணிக்கு இணைத்து கொள்வது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மாவட்டங்களில் மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதியான இளைஞர், யுவதிகள் இதற்காக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தமிழ்ச்செம்மொழி மாநாடு நாளை கோவையில் ஆரம்பம் – மாநாட்டில் மலையக காமன் கூத்து

semmoli.jpgஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை கோயம்புத்தூரில் (கோவையில்) கோலாகலமாக ஆரம்பமாகிறது. நாளை ஆரம்பமாகும் மாநாடு எதிர்வரும் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாளைய தினம் காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் செம்மொழி மாநாட்டைத் தொடக்கி வைக்கிறார்.

முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். 49 நாடுகளைச் சேர்ந்த 536 தமிழறிஞர்கள் பங்குபற்றுகின்றனர். இந்தியாவிலிருந்து 5000 அறிஞர்கள் பங்குபெறுகின்றனர். தமிழ் மொழிக்குச் சிறப்புகள் சேர்க்கும் வகையில் தமிழ்ச் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற வேண்டும். இந்த மண்ணில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் சமதர்மம் கிடைக்க திருவள்ளுவர் சொன்ன மணிமொழியாம் தமிழ்மொழி வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் 2004 ஆம் ஆண்டில்தான் கிடைக்கப் பெற்றது. இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையிலேயே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலுமிருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தரவுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்துறைத் தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் அவர் கூறினார்.

செம்மொழி மாநாட்டில் மலையக காமன் கூத்து

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மலையக பாரம்பரிய கலையான காமன் கூத்து அரங்கேற உள்ளது. எதிர்வரும் 24ம் திகதி கலாசார நிகழ்வின் போது காமன்கூத்து அரங்கேறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை குழுவில் இடம்பெற்றுள்ள ஹட்டன் தமிழ்ச் சங்கத் தலைவரும், கவிஞருமான சு. முரளிதரன் மேற்கொண் டுள்ளார். இலங்கை குழுவின் தலைவரான பேராசிரியர் கா. சிவதம்பியின் வேண்டுகோளின்படி முரளிதரன் இதனை ஏற்பாடு செய்துள்ளார்.

மலையக மக்கள் கலை அரங்க ஏற்பாட்டில் 14 கலைஞர்கள் இடம்பெறுகின்றனர். மலையகத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் இரா. பிரான்ஸிஸ், ஹெலன் நெறியாள்கையில் என் சாம்பசிவன் மூர்த்தி, எஸ். சிறிவேதா, பி. விஜயகோபால், எஸ். பிரேமகுமார், எம். தியாகராஜா, வி. இராமர், எஸ். போல் பெரேரோ, வசந்தி ஹெலன், கிறிஸ்டிலா இராமர், பி. டலாதேவி உட்பட 14 பேர் குழுவில் செல்கின்றனர்.